முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.059.திருவெண்ணி
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.059.திருவெண்ணி

6.059.திருவெண்ணி
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணிநாயகர்.
தேவியார் - அழகியநாயகியம்மை.
2676 | தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந் புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம் வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும் விண்டவர்தம் புரமூன்றும் எரி செய்தாரும் |
6.059.1 |
வெண்ணி என்ற திருத்தலத்திலே விரும்பித் தங்கியிருக்கின்ற உலகியலிலிருந்த வேறுபட்டவராகிய சிவபெருமானார், தொண்டுகளால் விளங்கும் அடியவர்களுக்கு ஒப்பற்ற வழியாய் உள்ளவரும், திருநீறு அணிந்த மார்பினரும், தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் காணமுடியாதபடி தழற்பிழம்பாய்க் காட்சி வழங்கிய பழம்பொருளானவரும், வண்டுகள் தங்கும் கொன்றை மாலை அணிந்தவரும், தேவர்களுக்காக விடத்தை உண்டவலியவரும், பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவரும் ஆவார்.
2677 | நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும் பொருப்பரையன் மடப்பாவை யிடப்பா லாரும் மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும் விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும் |
6.059.2 |
செம்மேனியில் வெண்ணீறு பூசியவரும், நெற்றிக் கண்ணரும், பார்வதி பாகரும், பூந்துருத்தியில் உறையும் பழையவரும், யானைக் கொம்பு போன்ற பிறையை முடிமாலையாச் சூடியவரும், வளைகுளம், மறைக்காடு இவற்றில் தங்கியவரும், தம்மை விரும்பும் அடியாருடைய உள்ளத்தில் உறைபவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தர் ஆவார்.
2678 | கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங் பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும் செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித் தாரும் |
6.059.3 |
வெண்ணி அமர்ந்துறையும் விகிர்தனார், கையில் முத்தலைச் சூலம் ஏந்தினாரும், சுடுகாட்டு நெருப்பில் கூத்து நிகழ்த்தும் கடவுளும், படமெடுக்கும் பாம்பினை ஆட்டுபவரும், தம்மை வழிபடுகின்றவர்களின் பாவத்தை அழிப்பவரும், கயல் மீன்கள் பாயும் வயல்களை உடைய திருப்புன்கூர் மேவிய செல்வரும், உடல்முழுதும் வெண்ணீறு பூசியவரும் ஆவர்.
2679 | சடையேறு புனல்வைத்த சதுர னாருந் உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த விடையேறு வெல்கொடியெம் விமல னாரும் |
6.059.4 |
சடையில் கங்கை வெள்ளத்தைச் சூடிய திறலுடைய வரும், தக்கனுடைய பெரிய வேள்வி நிறைவேறாமல் தடுத்தவரும், உடையாக அணிந்த புலித்தோல் மீது பாம்பினை இறுக்கிக் கட்டிப் பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும், நீர்மடையில் ஏறிக் கயல்பாயு மாறு நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட மயிலாடுதுறையின் தலைவரும், காளை எழுதிய கொடியை உயர்த்திய எம் புனிதரும், வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே.
2680 | மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி பண்ணிலங்கு பாடலோ டாட லாரும் கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக் விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும் |
6.059.5 |
ஐம்பூதங்களும், அவற்றின் பண்புகளுமாய் நிலைபெற்றவரும், பண்ணோடு கூடிய பாடலும் கூத்தும் நிகழும் சீசைலம், பாசூர் இவற்றில் உறைபவரும், நெற்றிக்கண்ணினரும், மண்டையோட்டினை ஏந்தி வீட்டு வாயில்தோறும் பிச்சை ஏற்கும் செயலை உடையவரும், பிறையை முடிமாலையாக உடையவரும், வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2681 | வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும் கூடலர்தம் மூவெயிலும் எரிசெய் தாரும் ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும் வேடுவராய் மேல்விசயற் கருள்செய் தாரும் |
6.059.6 |
அடியவருக்கு வீட்டுலகம் நல்குபவரும், விடமுண்ட நீலகண்டரும், பகைவருடைய மும்மதில்களையும் எரித்தவரும், திருவடியால் கூற்றுவனை உதைத்தவரும், படமெடுத்தாடும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவரும், கல்லால மர நிழலிலிருந்து அறத்தை உபதேசித்தவரும், வேடராய் முன்னொரு காலத்தில் அருச்சுனனுக்கு அருளியவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2682 | மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி சிட்டிலங்கு வேடத்த ராகி நாளுஞ் கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும் |
6.059.7 |
தேன்பொருந்திய கொன்றைமாலை சூடி மான் ஒன்றைக் கையில் ஏந்திப் பார்வதியோடு ஞானம் புலப்படும் வேடத் தோடும் சிலவாகிய பிச்சைக்காக ஊர் ஊராகத் திரிபவரும், உறுதியான பாசத்தால் மார்க்கண்டேயனைக் கட்டவந்த கூற்றுவனுடைய வாழ் நாளைப் போக்கியவரும், ஒளிவீசும் வெள்ளிய காதணி சேரும் காதுகளை உடையவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2683 | செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந் அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும் மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி வெஞ்சினத்த வேழமது உரிசெய் தாரும் |
6.059.8 |
செஞ்சடையில் வெண்பிறை சூடியவரும், திருவால வாய் உறையும் செல்வரும், மைதீட்டிய கண்களை உடைய பார்வதி பாகரும், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களுமாகி இருப்பவரும், மேகத்தை அளாவிய நீண்ட சோலைகளையும் மாட வீதிகளையும் மதிலையும் உடைய ஆரூரில் புகுந்து அங்கே நிலையாகத் தங்கிய வரும், மிக்க கோபத்தை உடைய யானையின் தோலை உரித்தவரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2684 | வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும் களங்கொளவென் சிந்தை யுள்ளே மன்னினாருங் உளங்குளிர அமுதூறி யண்ணிப் பாரும் விளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும் |
6.059.9 |
வளமான பிறைசூடும் சடையினரும், தேவர்களுக்காக விடத்தை உண்ட வலியவரும், என் உள்ளத்தை உறைவிடமாகக் கொண்டு தங்கியவரும் கச்சி ஏகம்பத்து உறைபவரும், என் உள்ளம் குளிருமாறு அமுதமாக ஊற்றெடுத்து இனிப்பவரும், மேம்பட்டவராய் எல்லாத் திசைகளிலும் நிலைபெற்றிருப்பவரும், ஒளிவீசும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
2685 | பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப் கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங் தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந் மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும் |
6.059.10 |
பொன்போல் விளங்கும் கொன்றை மாலை சூடிப் புகலூரிலும் பூவணத்திலும் உறைபவரும், அச்சம் தரும் முத்தலைச் சூலம் ஏந்தியவரும், குளிர்ச்சி தரும் கங்கைபொருந்திய செஞ்சடையை உடைய இளையரும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் தம் காலின் அழகிய விரலால் வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்தவரும், மின்னல்போன்ற நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகரும், வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்ணி - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விகிர்த, துறைகின்ற, வெண்ணி, உறைகின்ற, விகிர்தனாரே, அமர்ந்து, தாரும்வெண்ணியமர்ந், உறைபவரும், னாரும்வெண்ணியமர்ந், பாம்பினை, பாகரும், வெண்ணீறு, கருள்செய், பார்வதி, உடையவரும், கயல்பாய, வயல்கள், கூத்து, முத்தலைச், கையில், பிச்சைக்காக, பாசத்தால், ஒளிவீசும், வெள்ளிய, ஏந்தியவரும், கொன்றையந்தார், மாய்நின், லேந்தி, ஊராகத், திரிபவரும், செல்வரும், இவற்றில், அணிந்த, காட்சி, கொன்றை, தேவர்களுக்காக, விளங்கும், நஞ்சுண்ட, திருமுறை, திருச்சிற்றம்பலம், யாரும்வானவர்க்கா, விடத்தை, பகைவருடைய, சூடியவரும், திருவெண்ணி, தங்கியவரும், பிறையை, உறையும், மும்மதில்களையும், வெண்மதியக், பூசியவரும், மூவிலைவே