முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.024.திருநாகேச்சரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.024.திருநாகேச்சரம்

2.024.திருநாகேச்சரம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்.
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
1720 | பொன்நேர்
தருமே னியனே புரியும் மின்நேர் சடையாய் விரைகா விரியின் நன்னீர் வயநா கேச்சுர நகரின் மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே. |
2.024.1 |
பொன்னை யொத்த மேனியனே, வளைத்துக் கட்டப்பட்ட மின்னல் போன்ற சடையினை உடையவனே, மணத்துடன் வரும் காவிரி நதியின் நல்ல நீரால் வளம் பெறும் வயல்களை உடைய நாகேச்சுரத் திருக்கோயிலில் விளங்கும் மன்னவனே என்று ஏத்த, வலிய வினைகள் அழிந்து கெடும்.
1721 | சிறவார்
புரமூன் றெரியச் சிலையில் உறவார் கணையுய்த் தவனே உயரும் நறவார் பொழில்நா கேச்சுர நகருள் அறவா எனவல் வினையா சறுமே. |
2.024. 2 |
சிறவாதவராகிய அசுரர்களின் முப்புரங்கள் எரியுமாறு வில்லிற் பொருந்திய நீண்ட கணையைச் செலுத்தியவனே, உயர்ந்த தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருநாகேச்சுரக் கோயிலில் விளங்கும் அறவடிவினனே! என்று கூறி ஏத்த, வலிய வினைக்குற்றங்கள் அழிந்து கெடும்.
1722 | கல்லால்
நிழல்மே யவனே கரும்பின் வில்லான் எழில்வே வவிழித் தவனே நல்லார் தொழுநா கேச்சுர நகரில் செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே. |
2.024. 3 |
கல்லால மரநிழலில் எழுந்தருளியவனே, கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் அழகிய உடல் வேகுமாறு விழித்தவனே, நல்லவர்களால் வணங்கப்பெறும் நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் செல்வனே என்று கூறி ஏத்த வலிய வினைகள் தேய்ந்து கெடும்.
1723 | நகுவான்
மதியோ டரவும் புனலும் தகுவார் சடையின் முடியாய் தளவம் நகுவார் பொழில்நா கேச்சுர நகருள் பகவா எனவல் வினைபற் றறுமே. |
2.024. 4 |
விளங்குகின்ற வானத்தில் ஊரும் திங்கள், பாம்பு, கங்கை ஆகியன பொருந்திய தக்க நீண்ட சடையை உடையவனே, 107 முல்லை மலர்கள் விளங்கும் நீண்ட பொழில்கள் சூழ்ந்த நாகேச்சுரத்திருக்கோயிலில் விளங்கும் பெருமானே என்று கூறி ஏத்த வலிய வினைகளின் தொடக்கு அறும்.
1724 | கலைமான்
மறியுங் கனலும் மழுவும் நிலையா கியகை யினனே நிகழும் நலமா கியநா கேச்சுர நகருள் தலைவா எனவல் வினை தா னறுமே. 5 |
2.024.d |
மான்கன்று, அழல், மழு ஆகியன நிலையாக விளங்கும் கைகளை உடையவனே, நன்மை விளையும் தலமாகிய நாகேச்சுரக் கோயிலில் விளங்கும் தலைவனே! என்று கூறி ஏத்த வலியவினைகள் கெடும்.
1725 | குரையார்
கழலா டநடங் குலவி வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே நரையார் விடையே றுநாகேச் சுரத்தெம் அரைசே யெனநீங் குமருந் துயரே. |
2.024. 6 |
மலைமகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, கால்களில் ஒலிக்கின்ற வீரக்கழல்கள் ஆடநடனம் ஆடி மகிழ்பவனே, வெண்ணிறமான விடையின்மீது ஏறி நாகேச்சுரத்துள் விளங்கும் அரசனே! என்று கூறி ஏத்த, நீங்குதற்கு அரியவாய் வரும் துன்பங்கள் கெடும்.
1726 | முடையார்
தருவெண் டலைகொண் டுலகில் கடையார் பலி கொண் டுழல்கா ரணனே நடையார் தருநா கேச்சுர நகருள் சடையாவென வல்வினை தானறுமே. |
2.024. 7 |
முடை நாற்றம் பொருந்திய வெள்ளிய தலையோட்டை ஏந்தி உலகில் பலர் வீட்டு வாயில்களிலும் பலி கொண்டு உழலும் உலகக் காரணனே, நாகேச்சுரக் கோயிலுள் எழுந்தருளிய சடையனே! என்று கூறி ஏத்த, வலிய வினைகள் கெடும்.
1727 | ஓயா
தவரக் கனொடிந் தலற நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே வாயா ரவழுத் துவர்நா கேச்சுரத் தாயே யெனவல் வினைதா னறுமே. |
2.024. 8 |
தன் வலிமையால் இடைவிடாது போர்புரியும் இராவணன் மனம் உடைந்து அலற நீ அவனுக்கு அரிய அருளைச் செய்து மனம் இளகுதலாகிய உன் நடை முறையைக் காட்டியவன், என்று உன்னைப் பலரும் வாயார வாழ்த்துவர். நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவனே! என உன்னை நினைந்து போற்றுவார் வலிய வினைகள் கெடும்.
1728 | நெடியா
னொடுநான் முகன்நே டலுறச் சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே நடுமா வயல்நா கேச்சுர நகரே இடமா வுறைவா யெனஇன் புறுமே. |
2.024.9 |
திருமாலும், பிரமனும் அடிமுடி தேடலை மேற்கொள்ளச் சுடுகின்ற பெரிய தீப்பிழம்பாய் எழுந்து நின்ற ஒளி வடிவினனே, நாற்று நடத்தக்க பெரிய வயல்களைக் கொண்டுள்ள நாகேச்சுரத்துக் கோயிலை உனக்குரிய கோயிலாகக் கொண்டு உறைபவனே என்று போற்ற அவன் இன்புறுவான்.
1729 | மலம்பா
வியகை யொடுமண் டையதுண் கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில் நலம்பா வியநா கேச்சுர நகருள் சிலம்பா வெனத்தீ வினைதேய்ந் தறுமே. 10 |
2.024.d |
அழுக்கேறிய கையினராய் உணவுகொள்ள மண்டை முதலான உண்கலங்களைப் பயன்படுத்தும் சமண, புத்தர்களின் பொய்மொழிகளை விடுத்து, உலகின்கண் நன்மைகள் வளர நாகேச்சுரக்கோயிலுள் எழுந்தருளிய கயிலை மலையானே! எனப் போற்றுவார் தீவினைகள் தேய்ந்து கெடும்.
1730 | கலமார்
கடல்சூழ் தருகா ழியர்கோன் தலமார் தருசெந் தமிழின் விரகன் நலமார் தருநா கேச்சுரத் தரனைச் சொலமா லைகள்சொல் லநிலா வினையே. 11 |
2.024.d |
மரக்கலங்கள் பல நிறைந்த கடல் சூழ்ந்த தலங்களில் சிறந்த காழிப்பதிக்குத் தலைவனும் செந்தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தன் நன்மைகள் நிறைந்த நாகேச்சுரத்து அரனைப் போற்றிச் சொன்ன பாமாலைகளாகிய இப்பதிகத்தை இசையுடன் ஓத வினைகள் நில்லா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாகேச்சரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கேச்சுர, விளங்கும், கெடும், வினைகள், நகருள், பொருந்திய, உடையவனே, சூழ்ந்த, எழுந்தருளிய, டுலகில், நிறைந்த, நாகேச்சுரக், நன்மைகள், கொண்டு, கேச்சுரத், தேய்ந்து, போற்றுவார், வினைதேய்ந், திருச்சிற்றம்பலம், அழிந்து, யெனவல், பொழில்நா, திருமுறை, கோயிலில், திருநாகேச்சரம், நாகேச்சுரத்திருக்கோயிலில்