முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - என்னென்று சொல்வேன்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - என்னென்று சொல்வேன்.....
நீ சொன்னபடியே வாயில் வார்த்தையில்லை காதுள் கண்ணீர் இறங்குகிறது இருக்க....இருக்க... இறுகுகிறது மூச்சு.... என் கண்ணுள் உன் காட்சி எனக்குள் கத்துகிறேன் கதறுகிறேன் என் சப்தம் என் காதையே அடைக்கிறது கேட்கவில்லையா? உனக்கு? ஐயோ..... இன்னும் என்னென்று சொல்வேன் ஏனென்று கேளேன்.... வயோதிகம் வந்ததால் பாயில் சேயானேன் பாடைக்கு ஆளாகிடுவேன் போலிருக்கிறதே..... ஒருவேளை உனக்குமுன் நான் உயிர்விடின் எனக்குமட்டும் சவக்குழி மண்ணில் உனக்கு என் கண்ணில்...... இன்றும்.... என்றும்... உனக்கு நான்.... எனக்கு......????? ???......!!!! இன்று கேள்விக்குறியாய் இருக்கும் நான் உன் காதலால் தலைநிமரும்போது உனக்குமட்டுமல்ல இவ்வுலகிற்கே ஆச்சாயமாகத்தான் தோன்றுவேன்...... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - என்னென்று சொல்வேன்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான், உனக்கு