முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - மூச்சு உதிருமோ.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - மூச்சு உதிருமோ.....
உன்னால் காயம் கரைந்தேன் ஆயினும் காதலில் மிகுந்தேன் சைகைகூட செய்யவில்லை சேதிசொல்ல வழியில்லை செவிமட்டும் சிறப்புடன்..... இதோ-என் காதலின் கற்பை-வழியும் கண்ணீரால் கழுவி மூச்சுக்காற்றில் ஊதி உலர்த்துகிறேன்...... என் மூச்சு உதிருமோ? இல்லை உன்னில் காதல் மலருமோ? மலரும் மலரத்தான்போகிறது.... னக்கு நோயும் வரும் சாவும் வரும் அதற்குமுன்னே காதல்வந்ததே தந்ததும் நீதானே அதுவேயெனக்கு நோயெதிர்ப்புசக்தி.... எத்தனை நாள்? தாகத்திற்கு தண்ணீருக்குப் பதில் உன்நினைவைவால் என் தொண்டைக்குழியை ஈரமாக்கியது எத்தனை நாள்? அப்போதெல்லாம் சாகாதவன் இப்போதா......? உன்னால் காதலமுதம் பருகியவன் நான் ஆலகால விஷமாயினும் என்ன செய்துவிடும் என்னை? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - மூச்சு உதிருமோ..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -