முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - சிதறிப்போன இதயம்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - சிதறிப்போன இதயம்.....
நான் கடல் நீ தோணி என்னைக் கடந்துவிட்டாய் வேறொருவனை ஏற்றிக்கொண்டு என் மீது பயணம் செய்துவிட்டு நன்றியை அவனுக்கு செலுத்திவிட்டாய் இன்னொருமுறை வரும்போது-வெறும் தோணியுடன் வா நானே அலையாகி-உன்னை அழைத்துச்செல்கிறேன்..... உன் நாணயமற்ற பார்வையில் நான் செல்லாக்காசாய் சிதறிவிட்டேன் சிதறியக் காசை சேமிக்கவில்லை சேமித்த இதயத்தை சிதற விட்டேன்..... அவள் என்னை ஏற்றுக்கொண்டேன் என்றபின்.... யாருக்குத் தெரியும் நாளை அவள் மாறலாம் இன்றே இந்த நிமிடம்கூட மாறலாம்... எத்தனைக்காலம்தான் அவள் அழகைமட்டுமே ஆட்சி செய்துகொண்டிருப்பாள் ஓர்நாளேனும் அன்பு வேண்டுமல்லவா? அன்று என்னை நாடி வருவாள் என் இதயத்தை தேடி வருவாள்..... பாவம் அவள் உலகத்தை இன்னும் உணரவில்லை பக்குவப்பட்டவர்கள் பார்த்தால் சொல்லுங்களேன் அவளுக்கு......... பணமும்...... அழகும் ............ ............... என்று |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - சிதறிப்போன இதயம்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - அவள்