முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.058.திருக்குடவாயில்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.058.திருக்குடவாயில்
2.058.திருக்குடவாயில்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோணேசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
2092 | கலைவாழு
மங்கையீர் அலைவாழுஞ் செஞ்சடையி குலைவாழை கமுகம்பொன் நிலைவாழுங் கோயிலே |
2.058. 1 |
மான் வாழும் கையினை உடையவரே! மணம் பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில் பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும், கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும் வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2093 | அடியார்ந்த
பைங்கழலுஞ் செடியார்ந்த வெண்டலையொன் குடியார்ந்த மாமறையோர் படியார்ந்த கோயிலே |
2.058. 2 |
திருவடிகளில் கட்டிய புதிய கழலும் சிலம்பும், ஆர்ப்ப, அகங்கையில் முடைநாற்றம் பொருந்திய வெண்டலை ஒன்றையேந்தி உலகம் முழுதும் திரிந்து பலிஏற்பவரே! குடியாக உள்ள சிறந்த மறையோர் கொண்டாடி ஏத்தும் குடவாயிலில் படிகள் அமைந்த உயர்ந்த மாடக் கோயிலை நீர் விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2094 | கழலார்பூம்
பாதத்தீ றழலாருங் கண்டத்தீ குழலார வண்டினங்கள் நிழலார்ந்த கோயிலே |
2.058. 3 |
கழல் அணிந்த அழகிய திருவடியை உடையவரே! முற்காலத்தே நீர் பெருகிய கடலில் தோன்றிய விடத்தை உண்டு அவ்விடத்தை அழல்போன்று வெம்மை செய்யும் நிலையில் கண்டத்தில் நிறுத்தியவரே! தேவர்களால் போற்றப்பெறும் தன்மையினரே! மகளிர் கூந்தலில் பொருந்தி வண்டுகள் இசைஒலி செய்யும் குடவாயிலில் ஒளிபொருந்திய கோயிலை நுமது இடமாகக் கொண்டுள்ளீர்.
2095 | மறியாருங்
கைத்தலத்தீர் தெறியாரு மாமழுவு குறியார வண்டினங்கள் நெறியாருங் கோயிலே |
2.058. 4 |
மான் பொருந்திய கையினரே! உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவராய் நெருப்பின் தன்மை கொண்ட மழுவையும் அனலையும் ஏந்தும் இயல்பினரே! வண்டினங்கள் மலர்களை அலர்த்தித் தேன் உண்ணும் குறிப்போடு இசை மிழற்றும் குடவாயிலில் உள்ள, முறையாக அமைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு வாழ்கின்றீர்.
2096 | இழையார்ந்த
கோவணமுங் பிழையாத சூலம்பெய் குழையாரும் பைம்பொழிலும் விழவார்ந்த கோயிலே |
2.058.5 |
நூலிழையால் இயன்ற கோவணம் கீள் ஆகியவற்றை அழகிய உடைகளாகப் பூண்டு, கையில் தப்பாத சூலம் ஏந்தி ஆடல் பாடல்களை விரும்புபவரே! தளிர்கள் நிறைந்த பசிய பொழில் களும் வயலும் சூழ்ந்த குடவாயிலில் விழாக்கள் பலநிகழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு பெருமிதம் உற்றீர்.
2097 | அரவார்ந்த
திருமேனி இரவார்ந்த பெய்பலிகொண் குரவார்ந்த பூஞ்சோலை திருவார்ந்த கோயிலே |
2.058.6 |
பாம்புகளைப் பூண்டுள்ள திருமேனியில் நன்கு அமைந்த திருநீற்றை அபிடேகமாகக் கொண்டவரே! இரத்தலை மேற்கொண்டு பிறர் இடும்பிச்சை ஏற்று இமையோர் பரவ நஞ்சுண்டவரே! குராமரங்கள் நிறைந்துள்ள பூஞ்சோலையின் மணம் வீசும் குடவாயிலில் உள்ள அழகு பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2098 | பாடலார்
வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர் ஆடலார் மாநடத்தீ ரரிவைபோற்று மாற்றலீர் கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில் நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. |
2.058. 7 |
வேதப் பாடல்களில் அமைந்த உண்மை வாசகங்களாக விளங்குபவரே! பசிய கண்களைக் கொண்ட வெள்ளேற்றை ஊர்தியாக உடையவரே! ஆடலாக அமைந்த சிறந்த நடனத்தைப் புரிபவரே! உமையம்மை போற்றும் ஆற்றலை உடையவரே! காந்தள் மலரிற் பொருந்திய வண்டுகள் முரன்று இசைபாடும் குடவாயிலில் நீண்டுயர்ந்த கோயிலை நும் கோயிலாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2099 | கொங்கார்ந்த
பைங்கமலத் அங்காந்து தள்ளாட வழலாய் தங்காதன் மாமுடியுந் பங்கார்ந்த கோயிலே |
2.058. 8 |
தேன் பொருந்திய பசிய தாமரையில் மேவும் பிரமனும், குறள் வடிவாய்ச் சென்றிருந்து பின் உயர்ந்த திருமாலும் வாய் திறந்து தளர்ச்சியுற அழலுருவாய் நிமிர்ந்தவரே! இராவணனின் பெரிய முடிகளையும் அடிகளையும் அடர்த்தவரே! குடவாயிலின் ஒரு பகுதியாக விளங்கும் கோயிலை நும் கோயிலாகக் கொண்டு அறம் உரைத்தீர்.
இப்பதிகத்தின் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 2.058.9 |
2100 | தூசார்ந்த
சாக்கியருந் ஏசார்ந்த புன்மொழிநீத் ஆசாரஞ் செய்மறையோ தேசார்ந்த கோயிலே |
2.058. 10 |
அழுக்கேறிய உடையினராகிய சாக்கியரும் தூய்மையில்லாத சமணர்களும் கூறும் ஏசுதல் நிறைந்த புன் மொழிகளை வெறுத்து அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள குடவாயிலில், தூய்மையாளர்களாகிய அந்தணர் நல்லொழுக்கமாகிய அளவில் குறையாதவராய் அடியிணைகளை ஏத்த, ஒளிநிறைந்த கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு சேர்ந்துள்ளீர்.
2101 | நளிர்பூந்
திரைமல்கு குளிர்பூங் குடவாயிற் ஒளிர்பூந் தமிழ்மாலை தளர்வான தானொழியத் |
2.058. 11 |
தண்மையான நீரால் சூழப்பட்ட காழிப்பதியினனாகிய ஞானசம்பந்தன் குளிர்ந்த அழகிய குடவாயிற் கோயிலில் மேவிய இறைவனை, விளங்கும் தமிழ் மாலையாக உரைத்த பாடல்களாகிய இவற்றைவல்லவர் தளர்ச்சிகள் தாமே நீங்கத் தக்க புகழுடைய வானுலகில் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குடவாயில் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குடவாயில், கோயிலே, குடவாயிலில், கோயிலாகக், பொருந்திய, கொண்டு, கோயிலாக, கோயிலை, அமைந்த, உடையவரே, கோயிலையே, நிகழ்ந்தீரே, கொண்டுள்ளீர், செய்யும், விளங்கும், வண்டினங்கள், குடவாயிற், விளங்குகின்றீர், நிறைந்த, வண்டுகள், விரும்பும், திருச்சிற்றம்பலம், திருமுறை, தந்தும், திருக்குடவாயில், சிறந்த, கோயிலாகப், உயர்ந்த