முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.057.திருநல்லூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.057.திருநல்லூர்
2.057.திருநல்லூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
2081 | பெண்ணமருந்
திருமேனி பண்ணமரும் நான்மறையே திண்ணமரும் பைம்பொழிலும் மண்ணமருங் கோயிலே |
2.057. 1 |
உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2082 | அலைமல்கு
தண்புனலும் கொலைமல்கு வெண்மழுவு சிலைமல்கு வெங்கணையாற் மலைமல்கு கோயிலே |
2.057. 2 |
அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கையையும், பிறையையும் முடியிற்சூடி அழகிய கைகளில் கொல்லும் தன்மை வாய்ந்த வெண்மழு அனல் ஆகியவற்றை ஏந்திய தன்மையீர்! வில்லிற் பொருந்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தீர்! நீர் திருநல்லூரில் மலையமைப்புடைய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2083 | குறைநிரம்பா
வெண்மதியஞ் பறைநவின்ற பாடலோ சிறைநவின்ற தண்புனலும் மறைநவின்ற கோயிலே |
2.057. 3 |
என்றும் குறைநிரம்பாத வெண்மதியத்தைச்சூடி, குளிர்ந்த மென்மையான சடைகள் தாழப் பறவைகள் ஒலிக்கப் பாடலோடு ஆடலை விரும்பிப் பழகும் இயல்பினரே! மடையில் நிரம்பிய குளிர்ந்த புனலோடு கூடிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வேதங்கள் ஒலிக்கும் கோயிலையே நும் கோயிலாக விரும்பி மகிழ்ந்து உறைகின்றீர்.
2084 | கூனமரும்
வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர் மானமரு மென்விழியாள் பாகமாகு மாண்பினீர் தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர் வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. |
2.057. 4 |
வளைந்த வெண்பிறையையும் கங்கையையும் முடியிற்சூடுபவரே! மான் போன்ற மென்மையான விழியினை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! தேன் நிறைந்த பசிய பொழிலில் வண்டுபாடும் திருநல்லூரில் விளங்கும் வானளாவிய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2085 | நிணங்கவரு
மூவிலையு அணங்கமரும் பாடலோ திணங்கவரு மாடரவும் மணங்கமழுங் கோயிலே |
2.057.5 |
நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2086 | கார்மருவு
பூங்கொன்றை வார்மருவு மென்முலையாள் தேர்மருவு நெடுவீதிக் ஏர்மருவு கோயிலே |
2.057. 6 |
கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.
2087 | ஊன்றோயும்
வெண்மழுவு மீன்றோயுந் திசைநிறைய தேன்றோயும் பைம்பொழிலின் வான்றோயுங் கோயிலே |
2.057.7 |
ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத் திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர்.
2088 | காதமரும்
வெண்குழையீர் மாதமரு மென்மொழியாண் தீதமரா வந்தணர்கள் மாதமருங் கோயிலே |
2.057.8 |
காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2089 | போதின்மே
லயன்றிருமால் நாதனே யிவனென்று தீதிலா அந்தணர்கள் மாதரா ளவளோடு |
2.057. 9 |
தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் போற்றியும் உம்மைக் காணாது பின் இவனே பரம்பொருள் என்று விரும்பி ஏத்த மகிழ்ந்து, அவர்கட்கு அருள் செய்தவரே! தீதில்லாத அந்தணர்கள் முத்தீயோம்பும் திருநல்லூரில் மன்னும் கோயிலில் உமையம்மையரோடு மகிழ்ந்து உறைகின்றீர்.
2090 | பொல்லாத
சமணரொடு றல்லாதா ரறவுரைவிட் நல்லார்க ளந்தணர்கள் மல்லார்ந்த கோயிலே |
2.057.10 |
பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2091 | கொந்தணவும்
பொழில்புடைசூழ் செந்தமிழின் சம்பந்தன் பந்தணவு மெல்விரலாள் சிந்தனையா லுரைசெய்வார் |
2.057. 11 |
பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள் பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநல்லூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநல்லூர், கோயிலாக, திருநல்லூரில், கோயிலே, மகிழ்ந்தீரே, கோயிலையே, பொருந்திய, விளங்கும், கொண்டு, கோயிலாகக், உமையம்மை, மகிழ்கின்றீர், அந்தணர்கள், உறைகின்றீர், சூழ்ந்த, மகிழ்ந்து, மென்மையான, குளிர்ந்த, பைம்பொழிலின், பாகமாகு, வண்டுபாடுந், மாண்பினீர், வானளாவிய, அனலையும், இருப்பிடமாகக், காணாது, பொல்லாத, மனலுமேந்தி, பாகமாக, மாண்புடையவரே, மெல்விரலாள், கங்கையையும், உடையவரே, சடைகள், வயலுஞ்சூழ்ந்த, பயில்கின்றீர், திருமுறை, திருச்சிற்றம்பலம், தண்புனலும், வெண்மழுவு, கைகளில், மடையில், பிறையையும், நிறைந்த, கொள்கையீர், விரும்பி