முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.060.திருப்பாசூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.060.திருப்பாசூர்
2.060.திருப்பாசூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பாசூர்நாதர்.
தேவியார் - பசுபதிநாயகியம்மை.
2113 | சிந்தை
யிடையார் தலையின் மிசையார் வந்து மாலை வைகும் போழ்தென் மைந்தா மணாளா வென்ன மகிழ்வா பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த |
2.060. 1 |
மனத்திலும் தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
2114 | பேரும்
பொழுதும் பெயரும் பொழுதும் றாருந் தனையு மடியா ரேத்த ஊரு மரவ முடையார் வாழு பாரின் மிசையார் பாட லோவாப் |
2.060. 2 |
இடம் விட்டுச்செல்லும் போதும், வரும்போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்.
2115 | கையாற்
றொழுது தலைசாய்த் துள்ளங் மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு பைவாய் நாகங் கோடலீனும் |
2.060. 3 |
கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக் காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.
2116 | பொங்கா
டரவும் புனலுஞ் சடைமேற் கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் தங்கா தலியுந் தாமும் வாழு பைங்கான் முல்லை பல்லரும் பீனும் |
2.060. 4 |
சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும்.
2117 | ஆடற்
புரியு மைவா யரவொன் சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் வாடற் றலையிற் பலிதேர் கையா பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் |
2.060.5 |
ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும்.
2118 | கானின்
றதிரக் கனல்வாய் நாகங் தோலொன் றுடையார் விடையார் தம்மைத் மால்கொண் டோட மையல் தீர்ப்பா பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த |
2.060.6 |
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலைஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத்தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆம்.
2119 | கண்ணி
னயலே கண்ணொன் றுடையார் எண்ணுந் தனையு மடியா ரேத்த உண்ணின் றுருக வுகவை தருவா பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே. |
2.060. 7 |
இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசைபோல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும்.
2120 | தேசு குன்றாத்
தெண்ணீ ரிலங்கைக் கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் பேசிப் பிதற்றப் பெருமை தருவா பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த |
2.060. 8 |
புகழ்குன்றாத தௌந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப் பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.
2121 | நகுவாய்
மலர்மே லயனு நாகத் புகுவா யறியார் புறநின் றோரார் செகுவா யுகுபற் றலைசேர் கையா பகுவாய் நாரை யாரல் வாரும் |
2.060.9 |
விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகு மிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுலுடைய தலையோடு சேர்ந்தகையினை உடையவர். சிவபெருமான் அவரது ஊர் பிளந்த வாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வெளவி உண்ணும் பாசூராகும்.
2122 | தூய
வெயினின் றுழல்வார் துவர்தோ நாவில் வெய்ய சொல்லித் திரிவார் காவல் வேவக் கணையொன் றெய்தா பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் |
2.060.10 |
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.
2123 | ஞான முணர்வான்
காழி ஞான தேனும் வண்டு மின்னிசை பாடுந் கானம் முறைவார் கழல்சேர் பாட ஊன மிலரா யும்பர் வானத் |
2.060. 11 |
கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாசூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பாசூரே, ரூர்போலும், சூழ்ந்த, பாசூர், பாசூராகும், திருப்பாசூர், பாடும், வாழும், மூர்போலும், றுடையார், நின்று, தேனும், சோலைப், பயில்பூஞ், தம்மைத், உறையும், தம்மையே, பேசிப், தருபவர், குயில்கள், உடையவர், பெருமை, நிறைந்த, சோலைகள், திருமுறை, பசுமையான, திருச்சிற்றம்பலம், மிசையார், பொழுதும், வருள்செய்வார், தாமும், மைந்தா, கொன்றை, உள்ளம், லோவாப், செல்வர்