முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.055.திருத்தலைச்சங்காடு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.055.திருத்தலைச்சங்காடு
2.055.திருத்தலைச்சங்காடு
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர்.
தேவியார் - சௌந்தரியம்மை.
2059 | நலச்சங்க
வெண்குழையுந் சொலச்சங்கை யில்லாதீர் குலைச்செங்காய்ப் பைங்கமுகின் தலைச்சங்கைக் கோயிலே |
2.055.1 |
அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க் குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2060 | துணிமல்கு
கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர் மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லா மாண்பானீர் பிணிமல்கு நூன்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. |
2.055.2 |
துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீல மணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச் சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்.
2061 | சீர்கொண்ட
பாடலீர் செங்கண்வெள்ளே றூர்தியீர் நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத் தார்கொண்ட நூன்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை ஏர்கொண்ட கோயிலே கோயிலாக விருந்தீரே. |
2.055. 3 |
சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்.
2062 | வேடஞ்சூழ்
கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள் ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக் கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும் மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. |
2.055. 4 |
தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச் சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடி தோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2063 | சூலஞ்சேர்
கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர் நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமே னீரேற்றீர் ஆலஞ்சேர் தண்கான லன்னமன்னுந் தலைச்சங்கைக் கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. |
2.055.5 |
சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச் சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2064 | நிலிநீரொ
டாகாச புலநீர்மை புறங்கண்டார் சலநீத ரல்லாதார் நலநீர கோயிலே |
2.055. 6 |
நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூத வடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாத தக்கோர் வாழும் தலைச் சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்
2065 | அடிபுல்கு
பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக் கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங்கூடினீர் பொடிபுல்கு நூன்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக் கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே. |
2.055. 7 |
திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடி போன்ற மென்மையான சாயலை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடி பூசிப்பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரி நூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம்கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2066 | திரையார்ந்த
மாகடல்சூழ் வரையார்ந்த தோளடர அரையார்ந்த மேகலையீ நிரையார்ந்த கோயிலே |
2.055.8 |
திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கி வாழும் தலைச் சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2067 | பாயோங்கு
பாம்பணைமே போயோங்கிக் காண்கிலார் தீயோங்கு மறையாளர் சேயோங்கு கோயிலே |
2.055. 9 |
பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காண இயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப் படுபவரே! முத்தீ வளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2068 | அலையாரும்
புனல்துறந்த தொலையாதங் கலர்தூற்றத் தலையான நால்வேதந் நிலையார்ந்த கோயிலே |
2.055.10 |
அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங் களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2069 | நளிரும்
புனற்காழி குளிருந் தலைச்சங்கை ஒளிரும் பிறையானை மிளிருந் திரைசூழ்ந்த |
2.055. 11 |
குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தலைச்சங்காடு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயிலே, கோயிலை, கொண்டுள்ளீர், வாழும், கோயிலாகக், கோயிலாக, தலைச்சங்கை, உடையவரே, சங்கையில், தலைச்சங்கைக், தலைச்சங்கையில், விளங்கும், அந்தணர், நூன்மார்பர், குளிர்ந்த, இருப்பிடமாகக், தக்கோர், போற்றோவார், திருமுறை, ஒளிரும், சாக்கியர், அமைந்த, அணிந்த, கொண்டவரே, திருத்தலைச்சங்காடு, கண்டத்தீர், உடுத்த, சிவந்த, இடமாகக், தக்கோர்வாழுந், கொண்டு, திருச்சிற்றம்பலம், நின்று