புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - தமிழச்சியின் கத்தி
1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்; ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது. நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு பாளைய மாகப் பகுக்கப் பட்டது; பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்; பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த் தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள். தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்; தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்; தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது. சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன் இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர். சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத் தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு. புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்; வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில் தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான். தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்: உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று! திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக் குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான். சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான். அருகில் என்றான் அன்புறு திம்மன். சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும் திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்! மாடு கறந்து வழங்கினான் பாலும்; ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன். திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித் உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர். திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள் எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க் கொள்ளும் உள்ளம் கொண்டவள் பிள்ளை இல்லாதவள் ஆத லாலே! |
2. சுதரிசன் சூழ்ச்சி
எண்சீர் விருத்தம்
சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்; எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல் இதையறியான் திம்மன்ஒரு கவட மில்லான்; கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்; உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும் தளதளத்த கனியாகிப் போன தாலே மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்; குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த 'விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த மருந்தேனும் வந்தவர்கள் பசித் திருக்க இருந்துவரும் பண்பாகும். எனினும் வந்தோன் துரும்பேனும் நினையாத தாலே இந்நாள் 'குதிரைகண்டு வருகின்றேன்' என்று திம்மன் முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து அதிராத மொழியாலே அதிரும் ஆசை 'இதுகேட்பாய் சுப்பம்மா சும்மா வாநீ 'ஏன்'என்று வந்துநின்றாள். 'சுப்பம் மாநீ நானிருக்கும் செஞ்சிக்கு வருகின் றாயா? மான்அங்கே திரிவதுண்டு மயில்கள் ஆடும் கானத்தில் வள்ளிபோல் தனியாய் இங்கே 'இல்லையே! நான்வேல னோடு தானே சொல்லினாள்; சுதரிசனின் வஞ்சம் கண்டாள்; இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம் வல்லை' என்று முணுமுணுத்தாள். சுதரி சன்சிங்க் 'சுப்பம்மா வுக்கிழைத்த தீமை தன்னைச் தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம் அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால் 'அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய். தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர் திரும்புகின்ற பக்கமெலாம் காட்டு மேடு விருந்தாக்கிப் போட்டஉன்னை மறக்க மாட்டேன் கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும். இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான் 'குளக்கரைக்குப் போ'என்றேன் நீயும் போனாய் உளம்சம்ம தித்ததா? வந்தோம் உன்பால்! இளக்கார மாய்ப்பேசும் ஊர்பெண் ணென்றால் ஒருமணிநே ரம்பழகி னாலும் நல்லார் பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப் ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான் வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கி உன்னை இரண்டுநா ளில்வருவேன் உன்க ருத்தை வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு! கருதாதே நம்நட்பைப் புதிய தென்று! பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை! |
3. திம்மன் பூரிப்பு
தென்பாங்கு-கண்ணிகள்
'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு சொற்போக்கில் வந்தவிருந் தாளி - அவன் பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும் - நம் புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன் 'தென்னைஇளந் தோப்புமுதி ராதா? - நம் சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில் என்னஇருந் தாலும்சுபே தாரை - நான் நம்குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட பங்கமென்று நாமும்அறி வோமே - இதில் 'தங்கமயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல் பொங்குதடி நெஞ்சில்எனக் காசை - செஞ்சிப் தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல தென்னையையும் குத்தகைக்கு விட்டுப் - புன் பின்னும் உள்ள காலிகன்று விற்று - நல்ல சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல நாளைஇங்கு நல்லுசுபே தாரும் - வந்து காளைஒன்றை விற்றுவரு கின்றேன் - உன் வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல சீருடைய தாகிய தென்பாங்கு - கறி நேரில்வட பாங்கும்மிக வேண்டும் - நல்ல பாண்டியனின் வாளையொத்த வாளை - மீன் தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந் வேண்டியதைத் தின்னட்டும் சுபேதார்' - என்று தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத் |
4. சுதரிசன் நினைவு
எண்சீர் விருத்தம்
செஞ்சிக்குச் சென்றிருந்த சுதரி சன்சிங்க் வஞ்சியிடம் நினைவுமாய் இருந்தான். அன்று கொஞ்சமுமே தூங்காமல் விடியு மட்டும் நஞ்சான வேலையிலே மாட்டிக் கொண்டான்! 'தெற்குவா சல்காப்போன் எவன்காண்' என்று நிற்கும்சிப் பாய்உரைத்தான். சுதரி சன்சிங்க் முற்றிலுமே அவள்நினைவால் நலிந்தே னப்பா விற்புருவ அம்புவிழி பாய்ந்த தோஎன் அப்படியோர் மங்கையினைப் பார்த்த தில்லை. ஒப்படியென் றால்அவளோ ஒப்ப மாட்டாள். கைப்பிடியில் வைத்துவிட்டால் என்க ருத்துக் எப்படியும் போய்ச்சேர வேண்டும்' என்றான் |
5. அவன் பொய்யுரை
பஃறொடை வெண்பா
'என்மீதில் ஆசைஅவட் கில்லா மலும்இல்லை; என்மீதில் ஆசையே இல்லா தவள்போலே ஏன்நடந்தாள் என்றுகேள்; என்னை இன்னானென்று தான்அறிவ தற்குள்தன் னைக்காட்டிக் கொள்வாளா? மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல் கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை! அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்? என்மீதில் ஆசையே இல்லாதவள் போலும் வீட்டுக்கா ரன்மேல் விருப்பமுடை யாள்போலும் காட்ட நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே! வஞ்சி திறமை வரைதல் எளிதா? குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி உறுதி குறித்தாள் உனக்குத் தெரியாமல். மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை. ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில்உட் கார்ந்திருந்தேன்; உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என்முகந்தான் கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி! 'தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி சன்கணவன் ஆவதென்றோ' என்பதவள் கவலை. இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்; பொன்னங் கதிர்கிழக்கிற் பூக்கா திருக்குதடா! சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான் காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா! மாவின் வடுப்போன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும் கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்! யாவரும் தம்அடிமை என்னும் இரண்டுதடும் கோவைப் பழமிரண்டின் கொத்து! நகைமுல்லை! அன்னம் பழித்தும் அகத்தில் குடிபுகுந்தும் பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்! கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப் பிடிபோல் அடிகள் பெயர்க்கையிலே அம்மங்கை கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள் பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போடுமடா! அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள் என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு! நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால் கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப் பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை மூச்சுடையேன் கண்டுவிட்டேன்; செத்தால் முகமறப்பேன்' என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி ஒன்றொன்றாய்ப் போபோஎன் றோட்டி ஒருசேவல் நெட்டைக் கழுத்தை வளைக்க நெடும்பரியைத் தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக் கண்ட இனியகற் கண்டு! |
6. சுப்பம்மா தொல்லை
கலிவெண்பா
அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்; 'எப்போது வந்தீர்கள்?' என்றெழுந்தான் - 'இப்போது தான்வந்தேன்' என்றான் சுதரிசன். 'தங்கட்கு மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால் இங்கே இருங்கள் இதோவருகின் றே'னென்று தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச் சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில் செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில் வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க் பக்கத்தில் நின்றிருந்தான்; பார்த்துவிட்டாள் - திக்கென்று தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன?' என்றுரைத்தாள். 'தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் - சாப்பிட்டுச் செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர் அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார். அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன் திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். ஐம்பது வராகன் அரசாங்கச் - சம்பளத்தை வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்; தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம் அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில் இப்போது கையில் இருப்பாக - முப்பத்து மூவா யிரவரா கன்சேர்த்து மூலையிலே யாவருங் காணாமல் இருத்தினோம்; - சாவுவந்தால் யாரெடுத்துப் போவாரோ? பெண்டுபிள்ளை யாருமில்லை. ஊரெடுத்துப் போவதிலும் உங்கட்குச் - சேருவதில் ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள் இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும்; - என்பிள்ளை வேறு பிறர்பிள்ளை வேறா? இதைநீயே கூறுவாய்' என்று சுதரிசன் - கூறினான். 'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள். வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண்ணென்று தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை என்று நினைத்த சுதரிசன் திண்ணைக்கே ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்; 'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ? - தேடிப்பார்' என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து 'சுப்பம்மா ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொருநாள் செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள் முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே. சிற்றினச் சிவப்போ குருவிரத்தம் - உற்றதுபோல் கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல் தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான் - தேவை யுண்டா? என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கதுஏன்?' என்றுசுப் பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள். திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னுமென்ன பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள் தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே 'இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை?'என்றான். 'அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம்' என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே 'இன்றுகறி என்ன?' எனக்கேட்டான் - ஒன்றுமே பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான். கூசாது பின்னும் குறுக்கிட்டு - 'நீசாது வேலைஎலாம் செய்கின்றாய்; வேறு துணையில்லை காலையிலி ருந்துநான் காணுகின்றேன் - பாலைக் கறப்பாயா? எங்கே கறபார்ப்போம்' என்றான். அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில் அரிசி எடுத்தாள். அவனும் அரிசி பெரிசிதன் என்றுரைத்தான். பேசாள் - 'ஒருசிறிய குச்சிகொடு பற்குத்த' என்பான். கொடுத்திட்டால் மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? - சீச்சீ இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப் புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல் திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில் திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - 'இம்மட்டும் வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு மூலையிலே தூங்கினாய் முண்டமே! - பாலைவற்றக் காய்ச்'சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக் கீச்சென்று பேசாக் கிளி. |
7. திம்மன் ஆவல்
தென்பாங்கு-கண்ணிகள்
காலை உணவருந்திச் - சுதரிசன் ஓலைத் தடுக்கினிலே - திண்ணைதனில் 'வேலை கிடைக்கும்என்றீர் - உடனே நாலைந்து நாட்களுக்குப் - பிறகு என்றுதிம் மன்வினவச் - சுதரிசன் இன்று கிளம்பிவந்தால் - நல்லபயன் ஒன்றும் பெரிதில்லைகாண் - திம்ம,நீ மன்னர் இடத்தினிலே - உன்னையும் காட்டி முடித்தவுடன் - கட்டளையும் வீட்டுக்கு நீவரலாம் - சிலநாள் போட்ட தலைப்பாகை - கழற்றிடப் மாட்டிய சட்டையினைக் - கழற்றியும் எண்பது பேருக்குநான் - உதவிகள் மண்ணில் இருப்பவர்கள் - நொடியினில் கண்ணிருக் கும்போதே - இவ்வரிய நண்ணும் அனைவருக்கும் - இயன்றிடும் வண்டியினை அமர்த்து - விரைவினில் உண்டி முடிந்தவுடன் - வண்டிதான் நொண்டி எருதெனினும் - செஞ்சியினை கண்டிடும் பத்துமணி - இரவினில் வீட்டையும் பேசிவிட்டேன் - இருவரை கோட்டையிற் சிப்பாயாய் - அமரும் காட்டு மனிதர்அல்லர் - என்றுநான் கேட்டு மகிழ்ந்தார்கள் - நிழல்போல் திம்மன் இதுகேட்டான் - கிளம்பிடத் 'பொம்மை வரும்'என்றதும் - குழந்தைகள் 'உம்'என்று தான்குதித்தான் - விரைவினில் அம்முடி வின்படியே - தொடங்கினர் |
8. காடு
எண்சீர் விருத்தம்
'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக் தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச் வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும் குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம்; கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினநு ழைக்குள். உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்; சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்; எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை. இதோகுதிரை என்றார்கள் வந்த வர்கள்; பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே இறங்கி'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான். 'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்; 'உறங்குபவர் யார்உள்ளே?' என்று கேட்டார். என்றுரைத்தான். 'இன்னும்யார்?' என்று கேட்டார். கன்னலைப்போல் மொழியுடையாள் துடிது டித்தாள்! தன்கதையைக் கூறினான்; கேட்டார். அன்னோர் பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப் தமிழ்மொழியை இகழ்கின்றான், தமிழர் தம்மைத் தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத் சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச் அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சி யாளும் வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே! இல்லயெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்; 'போகின்றாய்?போ! பிறன்பால் வால்கு ழைக்கப் போ!கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம் சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத் 'போகின்றேன் என்னிடத்தில் கத்தி ஒன்று ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி! 'தந்தோம்எம் தங்கச்சி வெல்க! வெல்க! வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை. பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப் |
9. சிங்கம்
தென்பாங்கு-கண்ணிகள்
'காட்டு வழிதனிலே சிங்கமே! - எம்மைக் ஓட்டம் பிடித்துவிட்ட சிங்கமே! - உங்கள் நீட்டிய உங்கள்கத்தி கள்ளரைக் - கண்டு கூட்டி வழிநடந்து வந்திரே' - என்று 'அங்கே வழிமறித்த யாவரும் - திரு இங்கே எமக்கவர் விரோதிகள் - தக்க உங்கட் கிடர்புரிய எண்ணிடார் - இந்த எங்கே உமைவிடுத்த போதிலும் - உங்கட் |
10. சுப்பம்மா
எண்சீர் விருத்தம்
இவ்வாறு கூறிப்பின் சுதரி சன்சிங்க் அவ்விடத்தில் தனிக்குடிசை ஒன்றில் நீவிர் செவ்வையுற ஏற்பாடு செய்வேன்; என்றன் எவ்விதத்தும் விடிந்தவுடன் வருவேன்' இங்கே கைவேலைக் காள்கொடுத்தான்; துணைகொ டுத்தான்; வைவேலை நிகர்கண்ணாள் கண்ணு றக்கம் பொய்வேலைச் சுதரிசன்செய் திடஇ ருக்கும் மெய்யாக வேலைஉண்டோ? அவ்வா றொன்றும் |
11. பொன்துளிர்
எண்சீர் விருத்தம்
சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின் தொப்பெனவே இல்லாது மறையும் வண்ணம் அப்போதில் சுப்பம்மா 'அத்தான்' என்றாள்; 'இப்படிப்போ' என்றுபகல் இருளைத் தள்ளி 'அம்மா'என் றிருகையை மேலே தூக்கி திம்மன்எழுந் தான்!அவனும், சுப்பம் மாவும் அம்மலையின் தோற்றத்தைக் கண்டார். காலை செம்மையுறத் தழுவியதால் மலைகோட் டைமேல் |
12. வானப்படம்
தென்பாங்கு - கண்ணிகள்
'பொன்னான வானப் படத்தில் - வியிரப் தன்னேர் இலாதமலை எழுதித் - திகழ் உன்னை மகிழ்வித்த காட்சி - எனக்கும் என்றுரைத் தான்நல்ல திம்மன் - அந்த 'விண்மீதில் அண்ணாந்த குன்றம் - அதனை ஒண்ணீழல் செய்திடும் சோலை - யதனை கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி மங்கையும் திம்மனும் இயற்கை - அழகில் செங்கையில் மூட்டையொடு வந்தான் - 'புதுமை அங்காந்த வாயோடு திம்மன் - விரைவில் 'சிங்கன் முயற்சி வீணாமோ? - புதிய இந்தா இதைப்போடு! சட்டை! - இதுவும் இந்தா இதைப்போடு! பாகை! - இன்னும் செந்தாழை மடல்போன்ற கத்தி - இடையில் வந்துபோ என்னோடு திம்மா! - விரைவில் |
13. புதிய சிப்பாய்
எண்சீர் விருத்தம்
'சுதரிசன்சிங்க் செய்தநன்றி பெரிது கண்டாய்! இதற்கிடையில் சுதரிசன்சிங்க் 'நாளைக் குத்தான் 'அதுவரைக்கும் நான்தனியாய் இருப்ப துண்டோ 'இதுசரிதான் இன்றிரவே உனைய னுப்ப 'சிங்குநமக் கிருபெண்கள் துணைவைத் தாரே 'இங்கெதற்கும் அச்சமில்லை சுப்பம் மாநீ பொங்கிவரும் மகிழ்ச்சியிலே பூரித் தானாய்ப் சுங்குவிட்ட தலைப்பாகை கட்டிக் கொண்டு |
14. அன்றிரவு
அகவல்
மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச் சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக் குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்! சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த குப்பும் முருகியும் செப்பினார் தேறுதல். குப்பு 'மங்கையே, சிப்பாய் இப்போது வருவார்; அதற்குள் வருத்தமேன்?' என்றாள். முருகி, 'இதற்கே உருகுகின் றாயே சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர் மாசக் கணக்காய் வாரக் கணக்காய் வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்; எப்படி உன்னுளம் ஒப்பும்?' என்றாள். கோதைசுப் பம்மா கூறு கின்றாள்: 'புயற்காற்று வந்து போகாது தடுப்பினும் அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது; நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது; பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே! வீட்டை விட்டவர் வௌியே செல்வது கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே! அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம். அயல்போ வாரெனில் அதுவும் எங்கே? வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து வீடு, மற்றொரு வீடு, தோப்பு மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே இப்போ தென்ன இருக்கும் மணி?அவர் எப்போது வருவார்?' என்று கேட்டாள்! குப்பு,மணி ஆறென்று கூறினாள்! முருகி விளக்கு வைக்கும் வேளை என்றாள்! குப்பு, முருகி, சுப்பம்மா இவர் இருந்த இடமோ திருந்தாக் குடிசை! நாற்பு றம்சுவர் நடுவி லேஓர் அறையு மில்லை. மறைவு மில்லை. வீட்டு வாசல், தோட்ட வாசல் இருவா சல்களும் நரிநுழை போலக் குள்ள மாகவும் குறுக லாகவும் இருந்தன. முருகி எழுந்து விளக்கை ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வட்டித்தாள். குப்பு மகிழ்ந்து குந்தினாள் சாப்பிட. சுப்பம் மாமுகம் சுருக்கிக் கூறுவாள்: 'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்; முதலில் நீங்கள் முடிப்பீர்' என்றனள். குப்பு 'வாவா சுப்பம் மாநீ இப்படி வா!நான் செப்புவ தைக்கேள். வருவா ரோஅவர் வரமாட் டாரோ? சிப்பாய் வேலை அப்படிப் பட்டது. உண்டு காத்திரு. சிப்பாய் வந்தால் உண்பார்; உணவு மண்ணாய் விடாது. சொல்வதைக் கேள்'என்று சொல்லவே மங்கை 'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள். காலம் போகக் கதைகள் நடந்தன. முருகி வரலாறு முடிந்ததும் குப்பு மாமியார் கதையை வளர்த்தினாள். பிறகு மூவரும் தனித்தனி மூன்று பாயில் தலையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர். அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய் 'என்னடி முருகி' என்ற ஒருகுரல் கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய் 'ஏனிந் நேரம்' என்று வரவேற்று வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள். இருவரு மாக ஒரேபாய் தன்னில் உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது! சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்? முருகியும் அவனும் அருகில் நெருங்கி உரையாடு கின்றனர். உறவும் உண்டோ? என்று பலவா றெண்ணி இருக்கையில் முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான். குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச் சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள். 'மேல்என் னென்ன விளையுமோ? கண்ணிலாள் போல்இவ் விருளில் புரளு கின்றேன்; சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள் பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ?' என்று நினைத்தாள்; இடையில் கத்தியை இன்னொரு தரம்பார்த்துப் பின்னும் மறைத்தாள். கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும் சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில் ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள். கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக் கருதினாள்; ஆயினும் களையுண் டானதால் இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக் கரும்பாம் பாம்துயில் கவர இரவு போயிற்றே! இரவு போயிற்றே! |
15. மகிழ்ந்திரு
தென்பாங்கு -- கண்ணிகள்
நீரடை பாசியில் | |
தாமரை பூத்தது | போலே - நல்ல |
நீலத் திரைகடல் | மேலே - பெருங் |
காரிருள் நீக்கக் | |
கதிர்வந்து பூத்ததி | னாலே |
வாரிச் சுருட்டி | |
எழுந்தனன் சிங்கனப் | போது - உடை |
மாற்றினன் தன்னுடல் | மீது - அவன் |
நேரில் அழைத்தனன் | |
வந்துநின் றாளந்த | மாது. |
'ஆயிரம் பேரொடு | |
திம்மனும் அங்கிருக் | கின்றான் - கவாத் |
தாரம்பம் செய்திருக் | கின்றான் - அவன் |
ஞாயிறு செல்லத்திங் | |
கட்கிழ மைவரு | கின்றான். |
போயிருந் தாலென்ன | |
அச்சம் உனக்கென்ன | இங்கு? - ந |
பொன்போலப் பாயில்உ | றங்கு - இரு |
தாய்மாரும் உண்டு | |
துயர்செய்வ தெந்தக்கு | ரங்கு? |
ஆவிஉன் மேல்வைத்த | |
திம்ம னிடத்திலும் | சென்று - நான் |
ஆறுதல் கூறுவேன் | இன்று - நீ |
தேவை இருப்பதைக் | |
கேள்இங்குத் தங்குதல் | நன்று. |
கோவை படர்ந்திட்ட | |
கொய்யாப் பழந்தரும் | தோட்டம் - இங்குக் |
கூவும் பறவையின் | கூட்டம் - மிக |
நாவிற்றுப் போகும் இனிக்கும் பழச்சுளை | ஊட்டம். |
தெற்குப் புறத்தினில் | |
ஓடி உலாவிடும் | மானும் - அங்குச் |
செந்தினை மாவோடு | தேனும் - உண்டு |
சற்றே ஒழிந்திடில் | |
செல்லுவ துண்டங்கு | நானும்! |
சிற்றோடை நீரைச் | |
சிறுத்தையின் குட்டி | குடிக்கும் - அதைச் |
செந்நாய் தொடர்ந்து | கடிக்கும் - அங்கே |
உற்ற வரிப்புலி< | |
நாயின் கழுத்தை | ஒடிக்கும். |
மாங்குயில் கூவிஇவ் | |
வண்ணத் தமிழ்மொழி | விற்கும் - இந்த |
வையமெலாம் அதைக் | கற்கும் - களி |
தாங்காது தோகை | |
விரித்தாடி மாமயில் | நிற்கும். |
பாங்கிலோர் காட்டில் | |
படர்கொடி ஊஞ்சலில் | மந்தி - ஒரு |
பாறையின் உச்சியை | உந்தி - உயர் |
மூங்கில் கடுவனை | |
முத்தமிடும் அன்பு | சிந்தி |
கைவைத்த தாவில் பறித்திட லாகும்ப | லாக்காய் - நீ |
கால்வைத்த தாவில்க | ளாக்காய் - வெறும் |
பொய்யல்ல நீஇதைப் | |
போயறி வாய்காலப் | போக்காய். |
ஐவிரல் கூட்டி | |
இசைத்திடும் யாழ்கண்ட | துண்டு - யாழின் |
அப்பனன் றோவரி | வண்டு? - மக்கள் |
உய்யும் படிக்கல்ல | |
வோஇவை செய்தன | தொண்டு? |
'போய்வரு வேன்'என்று | |
சொல்லிச் சுதரிசன் | போனான் - அந்தப் |
பூவையின் மேல்மைய | லானான் - அவன் |
வாய்மட்டும் நல்லது; | |
உள்ளம் நினைத்திடில் | ஈனன். |
தூய்மொழி யாளும் | |
சுதரிச னைநம்ப | வில்லை - என்று |
தொலையுமோ இப்பெருந் | தொல்லை - என்று |
வாய்மொழி இன்றி | |
இருந்தனள் அக்கொடி | முல்லை. |
16. சுதரிசன் மயக்கம்
அறுசீர் விருத்தம்
சுதரிசன் தொலைந்தான்! அன்னோன் 'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்' சுதரிசன் புகழை யெல்லாம் புதுத்தொல்லை யதனில் மங்கை அழகுள்ள ஆளாம் எங்கும் ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும் ஒழுகுமாம் காதில் தேனாய் எழுதினால் ஓவி யத்தை நடுப்பகல் உணவா யிற்று; எடுத்தனர் பேச்சை. நங்கை துடித்தனள். 'எனக்குத் தூக்கம் படுத்தனள்; கண்கள் மூடிப் 'பகலெலாம் கணவ ருக்குப் முகங்காட்டிப் போவ தற்கும் நகம்பார்த்துத் தலைகு னிந்து அகம்கெட்ட மாதர் வந்தே உணவுண்டாள் நங்கை அங்கே முணுமுணு என்று பேசி அணுகினார் நங்கை யண்டை தணல்நிகர் சுதரி சன்சிங்க் எதிரினில் சுதரி சன்சிங்க் புதுமலர் முகமேன் வாடிப் குதித்தாடும் பெண்நீ சோர்ந்து அதைஉரை' என்றான். நங்கை 'திம்மனைச் சிங்கம் வந்தா செம்மையாய் இருப்பாய்' என்றான். அம்மங்கை முருகி சென்றாள் 'உம்'என்றாள்; திகைத்தாள் நங்கை! 'நங்கையே இதனைக் கேட்பாய் இங்குநல் லுத்தி யோகம் பொங்கிடும் என்னா சைக்குப் செங்கையால் தொடு; மறுத்தால் 'நான்எதிர் பார்த்த வண்ணம் யான்இங்குத் தனித்தி ருக்க ஏன்என்று கேட்பா ரில்லை தேன்ஒத்த மொழியால் அந்தத் 'கொண்டவர்க் குத்தி யோகம் அண்டமே புரண்டிட் டாலும் அண்டையில் வந்துட் கார்ந்தீர் வண்கையால் 'தொடு' மறுத்தால் உலகில்நான் விரும்பும் பண்டம் தலைமிசை ஆணை யிட்டுச் நிலைகெட்ட பின்னர் இந்த மலையும்தூ ளாகும் நல்ல கொண்டஎண் ணத்தை மாற்றிக் கண்டத்தை விரும்பும்; கைக்கு கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக் கொண்டொரு நிலையிற் சேர்ப்பார் என்றனள். சுதரி சன்சிங்க் 'நன்றுநீ சொன்னாய் பெண்ணே! இன்றிங்கு நடந்த வற்றைத் என்றனன் கெஞ்சி னான்;'போய் இருளினில் நடந்து போனான் இருளினை உளமாய்க் கொண்ட அருளினால் கூறு கின்றாள் 'ஒருபோதும் இனிநீர் இந்த ஆயிரம் வந்திட் டாலும் போயினும் தீயார் நட்பிற் தாயினும் நல்லார் என்று வாயினால் சொல்லிக் காட்ட கண்ணகி என்னும் இந்தத் பெண்கதை கேட்டி ருப்பீர்; பெண்களே நீரும்! அந்தப் எண்ணமேன் இவ்வா றானீர்? 'யாம்என்ன செய்து விட்டோம்? தீமையைக் கண்டு விட்டாய்? சாமிக்குத் தெரியும் எங்கள் ஏமுரு கியேஇ தென்ன 'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள் பங்கமோ இதுதான்? மேலும் தங்கமா யிற்றே! சிங்கு எங்களை இகழ்ந்த தென்ன?' |
17. சுப்பம்மா நிலை
அறுசீர் விருத்தம்
விடிந்தது சுப்பம் மாவும் வடிந்தது கண்ணீர்! மெய்யும் ஒடிந்தது! தேனி தழ்தான் இடிந்தது! 'செய்வ தென்ன' காலையில் உணவை உண்டார் 'மாலையில் வருவோம் நாங்கள் மூலையில் தூங்கி டாதே; வேலையைப் பார்; சமைத்துக் தனிமையில் இருந்தாள் அந்தத் இனிமையில் தோய்வாள் அந்த நனிமையற் பெருக்கால் என்ன இனிமெய்யாய் இங்கி ருத்தல் |
18. திம்மன் நிலை
எண்சீர் விருத்தம்
கோட்டையிலே அடைப்பட்டுக் கிடந்தான் வீட்டில் ஓட்டையிலே ஒழுகுவது போலே நீரை வாட்டமுறும் முகமுமாய் இருந்தான். என்றன் வாட்டுகின்றார்! கவாத்தெங்கே? வீணில் தூங்க ஏதோஓர் சூழ்ச்சிஇதில் இருக்கக் கூடும். மாதுதனை எனைவிட்டுப் பிரிப்ப தற்கே தீதேதோ கண்டதால் அன்றோ, அன்று 'தாதுசிங்கைக் கேட்கின்றேன்; வீடு செல்லத் 'எதற்கிங்கே நான்பத்தொன் பதுநாள் தங்கி 'அதற்கென்ன காரணமோ அறியேன்; அந்த மிதக்கின்ற பாய்க்கப்பல் மூழ்கிப் போக கொதிக்கின்ற மனத்தோடு கோட்டைக் குள்ளே கோட்டைக்குள் இவ்விருளாம் கரிய பாம்பு காட்டைநிகர் சேரியிலே அந்தப் பாம்பு 'தோட்டமுண்டு; வயலுண்டு; போக வேண்டாம் கேட்டேனா கிளிக்குச்சொல் வதுபோல் சொன்னாள் |
19. சுதரிசன் நிலை
தென்பாங்கு - கண்ணிகள்
மாவடு வொத்த விழிக்கும் - அவள் காவடிப் பிச்சைஎன் றேனே - அந்தக் தூவடி என்உடல் மீதில் - உன் ஆவி நிலைத்திடும் என்றேன் - அவள் என்று சுதரிசன் எண்ணி - எண்ணி ஒன்று நினைத்தனன் சூழ்ச்சி - மிக பின்புறக் கோட்டையை நாடிச் - சில தன்துணை வர்களைக் கண்டான் - கண்டு கோட்டையில் வேறொரு பக்கம் - வந்து நாட்டம் அனைத்தும் உரைத்தான் - அவர் 'பாட்டு நிகர் மொழியாளை - என் காட்டுவேன் வேடிக்கை' என்றே - சிங்கன் |
20. இங்கே செல்லாது
தென்பாங்கு - கண்ணிகள்
தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம் தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர் ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல் ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை தீய முருகியுங் குப்பும் இருந்தனர் வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு 'ஆயிரம் ஆயிரம் ஆக வராகன் தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும் என்று வௌியினில் கேட்ட குரலினை கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர் புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும் சின்ன விளக்கை அவித்துக் கதவைத் மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள் அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல் மங்கையின் மேல்ஒரு கைவந்து பட்டது. இங்குச்செல் லாதென்று மங்கைசொன் னாள்!வந்த * சுப்பம்மாமேல் ஒரு கைபட்டது. உடனே சுப்பம்மாவின் வாள் அக்கையின்மேல் பட்டவுடன் அக்கை எடுபட்டது. மேலும் நடப்பது யாதென்று மங்கை ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக மூலைக்கு மூலை வழிபார்த் தாள்புகை ஏலுமட் டும்இரு தாழைத் திறந்திட கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன! ஆரங்கே' என்றனன்; தாழைத் திறந்தனன்; கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது ஆரங்கே' என்றவன் சுதரிசன் என்பதை கத்தியை நீட்டினாள்; 'தீஎன்னை வாட்டினும் முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும் தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர் |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழச்சியின் கத்தி - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - திம்மன், என்றான், சுதரிசன், சுப்பம்மா, சுப்பம், வேண்டும், சுதரிசன்சிங்க், கின்றான், சிப்பாய், என்றாள், முருகி, சன்சிங்க், என்றார், எண்சீர், குப்பு, தென்பாங்கு, விருத்தம், சிங்கன், சிங்கமே, கேட்டார், கண்ணிகள், சொன்னான், சென்றான், திம்மனும், சுதரிசனின், திருக்குதடா, என்றுரைத்தான், அவனும், மாவும், என்றுரைத்தாள், வண்டிக், சுபேதார், பட்டது, இருந்த, இடையில், அருகில், இப்போது, எப்போது, பெண்ணே, திட்டான், இன்னும், செஞ்சி, செய்வேன், கின்றாள், தமிழன், கொண்டு, என்மீதில், வந்தான், கின்றேன், பின்னும், காட்டு