புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - கண்ணகி புரட்சிக் காப்பியம்
பதிகம்
இயல் 1
மலைநாட்டு நெடுவேள்குன் றத்தின் வேங்கை மரநிழலில் கண்ணகிதன் வந்து நின்று கலகலெனக் கண்ணீரால் அருவி செய்து குறவர்களின் மனமதுவும் கரையச் செய்தாள்! 'கொலைசெய்யப் பட்டான்என் கணவன் கண்டீர் |
5 |
குற்றமொன்றும் செய்தறியான்; குன்றத் தோரே! இலைஉலகில் பருவுடல்தான் எனினும் அன்னோன் என்னுள்ளதத்து உள்ளிருத்தல் காணுவீரோ'! 'முலைதோன்றி முற்றாமுன் தொட்டுச் சென்றான் முறையில்லா ளிடம்கிடந்தான், இறுதி யாய்என்¢ |
10 |
தலைவாயி லிற்கண்டேன் தாவ லானேன்; தன்வறுமை கூறினான், என்செய் வேன்நான்! கலைச்செல்வி மாதவியின் முத்தம் வாங்கக் கைப்பொருள்கேட் டான்போலும் என்றே எண்ணி நலம்பெய்த என்சிலம்பு தரஇசைந்தேன்¢' |
15 |
'நாமிருவர் இன்புற்று வாழ்வோம்' என்றான். மதுரையிலே வாணிகமே புரிவோம்; நீயும் வாராயோ என அழைக்க விரைந்து சென்றேன் இதன்பின்னர் என்காதல் நோய்மருந்தை இருதுண்டாய்க் கண்டவள் நான்; வாழேன் என்றாள்! |
20 |
எதிரேறும் இளங்கொடி தான் கொழுகொம் பற்றே விழந்ததையும் இறந்ததையும் கண்டு ணர்ந்தே அதிர்ந்தஉளத் தோராகிக் கண்ணீர் மல்க அறஞ்செய்து புறஞ்சென்றார் குன்றவாணர். |
இயல் 2
குன்றத்துக் குறவரெலாம் கைகள் கூப்பிக்¢ | 25 |
கோமான்நின் திறல்வாழ்க! செங்கோல் வாழ்க! என்றைக்கும் தமிழ்வாழ்க என்று வாழ்த்த 'எல்லீரும் நலஞ்சார வாழ்கின்றீரோ ? இன்றுங்கள் முகத்திலொரு புதுமை என்ன என்றசெங் குட்டுவன்பால் குன்ற வாணர்¢ |
30 |
'ஒன்றுண்டே ஒன்றுண்டே உலகுக்கெல்லாம் உணர்வளிப்ப தொன்றுண்டென'¢ றுரைக்க லானார், ஆடலுற்ற பெண்கட்குத் தோற்றுப் போன அழகான பச்சைமயில் எதிரிற் கண்ட காடுபெற்று தீயில்விழும் வேள்குன் றத்தில்¢ |
35 |
கண்ணகிதான் கோவலனை உள்ளத் தேந்தி வீடுபெற்ற தைமன்னன் திருமுன் வைத்தோம் மெய்ம்மைஇது வென்றுரைக்க உயர்க ருத்தில் ஈடுபட்டு உள்ளத்தானாகிமன்னன் இன்னுமுள வரலாற்றை அறியச் சென்றான்¢ |
40 |
அவ்வாறு குட்டவன்சென்றிடஇளங்கோ அடிகளிடத் தும்சொல்லக் குன்ற வாணர் செவ்வையுறு குணவாயிற் கோட்டம் நோக்கிச் சீரூரில் உள்ளவர்கள் அனைவ ரோடும் பெய்வளையின் கோவலனின் செய்தி ஏந்திப்¢ |
45 |
பேருளத்திற் பெறுஞ்செய்தி ஆவல் ஏந்தி எவ்வாறு மலையருவி செலும்? அவ்வாறே ஈரமலைச் சாரல்கடந்தேகினார்கள் |
இயல் 3
குன்றத்துக் குறவரெலாம் வழிந டந்து குணவாயிற் கோட்டத்தைச் சேர்ந்து - இளங்கோ |
50 |
என்றுரைக்கும் அடிகளிடம் நெடுவேள் குன்றில் இரண்டுள்ளம் ஒன்றிலொன்று இணைந்த வண்ணம் சென்றனவே! கோவலனை ஏந்தும் நெஞ்சச் சேயிழையாள் கண்ணகியைப் பெற்ற தான நான்றான வீட்டுலகம் இன்று பெற்ற |
55 |
நற்புகழை முன்பெற்றதில்லை என்றார். அந்நேரம் செங்குட்டு வன்பாற் சென்றே அடிகளிடம் வந்திருந்த சாத்த னாரும் முன்நிகழ்ந்த கண்ணகியின் செய்தி யெல்லாம் மு¬யாகக் கேள்வியுற்ற படியே சொல்ல |
60 |
இந்நிகழ்வைக் காப்பியமாய் இயற்ற வோநான்? எனக்கோட்டார் அடிகளார்! "நன்று நன்று முந்நாடு பற்றியதாம் அதுமுடிக்கும் முழுத்தகுதி நுமக்கென்றார்" சாத்தனாரும் புலப்பெரியார் சாத்தனார் இருந்து கேட்டார் |
65 |
புரைதீர்த்த அடிகளார் உரைத்தார்! அந்தச் சிலப்பதிகா ரப்பருநூல் எனை அழைத்துத் தனித்தமிழில் சிலபாட்டால் அடிகள் உள்ளம் கலப்பற்ற பசுப்பாலே யாக மக்கள் கவிந்துண்ணத் தருகஎனச் சொன்ன தாலே |
70 |
சொலப்புகுந்தேன் என் தமிழர் இருந்து கேட்பார் தூயதமிழ்ச் சுவைசுண்டு வாழ்வார் நன்றே! |
புகார் காண்டம்
இயல் 4
வரம்பற்ற செல்வத்தான் வாய்மை மிக்கான் மாசாத்து வான்உரைப்பான் "பெரியீர்! என்றன் திருமகனாம் கோவலற்கு மாநாய் கர்தம் |
75 |
செல்வியாம் கண்ணகியைக் கொடுப்ப தற்குப் பெருமனது கொள்கின்றார் மகன்ம ணந்தால் பெருமைஎன் கின்றேன்நான் ஆத லாலே திருமணத்தை முடித்துவைப்பீர்" என்று சொல்லச் சேந்தனார் எழுந்திருந்து செப்பலுற்றார். |
80 |
செந்தமிழ்நான் மறைமுறையும் செத்த தேயோ? செம்மலுளம் மங்க¬யுளம் ஒன்று பட்டால் அந்நிலைதான் மணமென்பார் அதனை விட்டே அப்பன்மார் ஒப்புவதால் ஆவ தென்ன? தந்தைதரப் படும்பொருளா மங்கை நல்லாள்? |
85 |
தகுவதன்றே தகுவதன்றே என்று சொன்னார் வந்திருந்த ஆரியனும் நடுநடுங்கி வாய்திறந்து தமிழ்குலைக்கத் தொடங்கலானான் சாகுமுன்வி வாஹத்தை நடத்திக் கண்ணால் தரிசிக்க வேணுமென்று நாய்கர் சொன்னார் |
90 |
ஆகாகா எண்றேன்நான் ஆரியர்கள் அப்பன்மார் உடம்பட்டாள் விவாஹம் செய்வாள். ஆகாது த்ரமிளர்க்கே இவ்வி வாஹம்! ஆணதிணாள் எணை அளைத்தார் நாணும் வந்தேன்! போகாயோ என்றுரைத்தாள் போகிண் றேணே |
95 |
புன்னாக்க வேண்டாம்என் உடம்பை என்றான் |
இயல் 5
கண்ணகிஎன் றொருபெண்ணை மணப்பாய் என்றேன,¢ கட்டளையை என்மகனும் ஒப்பி னான்இவ் வண்ணாந்தான் திருமணத்தை முடித்து வைப்போன் ஆரியனே ஆதலினால் அவனை வைத்தேன், |
100 |
கண்ணிருக்கும் போதேநான் காண வேண்டும் காளையுடன் பாவையினை மணவ றைக்குள் எண்ணநிறைவேற்றிவைப்பீரெனக்கும் பிட்டான்! மாசாத்து வான்சொல்லை ஏற்றார் ஊரார்! ஆயினுமச் சேந்தனார் எழுந்தி ருந்தார் |
105 |
அத்தனையும் ஆரியமாய் இருக்கவேண்டாம் தீயவிளை வுண்டாகும் ஆத லாலே செந்தமிழால் அவையத்தால் வாழ்ந்த லன்றி நாயைப்போல் குரைப்பதனால் நம்பால் வேண்டாம்! நரியைப்போல் ஊளையிடல் நம்பால் வேண்டாம்! |
110 |
நீயென்ன சொல்லுகின்றாய் என்று கேட்க நின்றிருந்த ஆரியனும் நிகழ்த்தலானான். மந்த்ரங்கள் ஆரியத்தால் செய்ய வேண்டும் மட்டுமுள்ள சடங்குகளும் அப்ப டித்தான் பிந்திஅந்த வதூவரரை ஒன்று சேர்க்கப் |
115 |
பெரியதொரு சடங்குண்டே! மந்த்ர முண்டே அந்தஎலாம் செய்யத்தான் வேண்டும் ஆனால் பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்தமட்டும் குடுக்கனுமோ குடுக்கவேனும் என்றுரைத்தான் எல்லாரும் சிரிப்பில் ஆழ்ந்தார் |
120 |
இயல் 6
சோடித்த யானையின்மேற் பொன்னம் பாரி தூக்கிஅதில் மாநாய்கன் பாக்கி யத்தை ஈடில்மா சாத்துவான் இளங்க ளிற்றை இழையாலும் பட்டாலும் பூக்க ளாலும் மூடியுடல் மூடாத இருமுகங்கள் |
125 |
முத்¢துநிலா பொற்சுடரே எனவிளங்க நாடிநகர் வலம்புரிந்தார் பல்லியங்கள் நாற்றிசையும் அமிழ்தென்று பாய்ச்சு வித்தார் ஆடிக்கொண் டேசென்றார் அழகு மாதர் அசைந்துகொண் டிருந்ததுவே மக்கள் வெள்ளம்! |
130 |
பாடிக்கொண் டேசென்றார் பழந்த மிழ்ப்பண்! பறந்தனவே புலிக்கொடிகள் வான ளாவிப் பீடுடைய ஓரறிஞன் இங்குக் காணும் பெருங்கற்புக் கண்ணகிதான் கோவலன்தான் நாடுடையீர்! இந்நாளே மணங்காண்பார்கள் |
135 |
நன்மணத்தை வாழ்த்திடவே வருவீரென்பான்! மணிக்குவியல் மீதிலொரு மலர்முகத்தில் வந்துவந்து வழுக்கிவிழும் இரண்டு கண்கள் அணித்திருந்து பார்த்தவர்கள் 'அன்புளங்கள் அணைந்துவரும் நிலைஇதுவாம்' எனவி யப்பார்! |
140 |
பணித்திடினும் பணிவல்லார் இயற்ற ஒண்ணாப் பாவைஒன்றும் வீரம்ஒன்றும் பெண்மாப் பிள்ளை! மணக்கின்றார் வாழியவே என்பார் கண்டோர்; மணமக்கள் நகர்சுற்றி இல்லம் சேர்ந்தார். |
இயல் 7
மணம் நடக்கும் மணிவீடும் பல்லியத்தால் | 145 |
மணமுரசால் பூமழையால் வான்வ ரைக்கும் இணைந்த பெரும் பந்தரினால் முத்துத் தொங்கல் இனியநறும் பூத்தொங்கல் கமுகு வாழை அணைந்ததனால் நகர்நடுவில் அழகின் காடே அணைவாரின் கண்கவர்ந்தே மனம்கவர்ந்தே |
150 |
இணையற்ற தாயிற்று! நாட்டு மக்கள், ஏந்திழைமா ரோடுவரத் தொடங்கினார்கள்! மாசாத்து வானோடு மனையும் மற்றும் மாநாய்க னோடுதன் மனையும் ஆகத் தேசுற்ற மணவீட்டின் வாயில் முன்னே |
155 |
தெருநோக்கி வருவாரின் வரவு நோக்கிப் பூசற்கு நறுந்தேய்வும் பூணத் தாரும் போடற்கு நறுஞ்சுருளும் வணங்கக் கையும் பேசற்குச் செந்தமிழும் முற்படுத்திப் பின்பாரார்; நின்றிருந்தார் அன்பார்ந்தாராய்! |
160 |
தெருமறையத் தௌ¤த்திருந்த பசுங்கோரைப்புல் சேவடியும் பூவடியும் மேல்வருங்கால் சரசரெனும்! பூவடிகள் சிலம்பு பாடும்! தத்தும்பொற் குத்துவிளக் காம்இ ளைஞர் விரைந்தோட மார்பணிகள் கணக ணென்னும்! |
165 |
வெறுவெளியில் பெருகுபுனல் மணிவெள் ளம்போல் அரிவையுடன் அழகன்என நாட்டு மக்கள் அனைவருமே மணவீட்டை அடைகின்றார்கள். |
இயல் 8
அன்பரசி ஆணழகு கன்னல் பொன்னன் ஆடுமயில் அறிவழகன் அன்னம் நல்லான் |
170 |
தென்னழகு தமிழப்பன் முத்து முல்லை தேன்மொழியாள் மறவர்மணி திங்கள் செல்வன் பொன்னோடை பொன்னப்பன் கிள்ளை சேரன் புத்தமுது தமிழரசு தங்கம் சோழன் இன்பத்தேன் இளவழகன் ஒளவை வேந்தன் |
175 |
இருங்கோவேள் வயவேங்கை எல்லி நல்லி, திருவிளக்கு மதியழகன் நிலவு செங்கோல் தேனருவி அருளப்பன் தோகை பாரி மருக்கொழுந்து பொன்வண்ணன் அல்லி வள்ளல் மல்லிகை மாவளவன் காவேரி சிங்கம் |
180 |
கரும்புபெருந் தகைமுத்தப் பந்தல் சேந்தன் கயற்கண்ணி காத்தமுத்து வீரி மன்னன் முருகாத்தாள் புகழேந்தி தேனி மானன் முத்தம்மா தமிழ்வாணன் தாயார் வேலன் அழகம்மை ஆளவந்தான் வேனில் தென்றல் |
185 |
ஆரமுது தமிழத்தொண்டன் இலந்தை பொன்வேல் மழைமுத்து மன்னர்மன்னன் தத்தை எட்டி மணியம்மை பொன்முடிதே னாறு தென்னன் மொழியரசி இளந்திரையன் புன்னை நன்னன் முத்துநகை மாவரசு முதலியோரை |
190 |
அழைத்தார்கள் வருகென்றே நலஞ்செய் தார்கள் அணிஅணியாய் அனைவருமே உட்சென்றார்கள்¢ |
இயல் 9
வாழியவே மணமக்கள் என்று சான்றோர் வாழ்த்தியபின் வாழ்வரசி மாரும் மற்றும் வாழ்விலுயர் பெரியோரும் அமளி நோக்கி |
195 |
கோவலனைக் கண்ணகியை வருக என்றார் நாழிகையின் அரைக்காலிற் முக்காற் பங்கும் நஞ்சென்பார் பஞ்சணைக்கா வரமறுப்பார்? யாழ்ஒன்றும் இசைஒன்றும் அமளி ஏற எல்லாரும் வாழ்த்துரைத்துத் திரும்பலானார்? |
200 |
திருந்துண்ட மணமக்கள் இருவ ரோடும் சேர்ந்துண்ட நாட்டுமக்கள் தேய்வு பூசி வருந்துண்ட அடைகாயின் சுருளை மென்று வாய்நிறைத்து முகமுயர்த்தி இதழ்விள் ளாமல் விருந்துண்ட சிறப்பினையும் விரிக்கலானார் |
205 |
விழும்எச்சில் கண்டவர்கள் சிரிக்கலானார் 0மருந்துண்டேன் விருந்துண்கி லேன்நான் என்றோன் மலைவாழை மட்டும்நூ றுண்டேன் என்றான் கறிவகையும் பண்ணியத்து வகையும் நல்ல கனிவகையும் என்நாவைக் கவர்ந்த தாலே |
210 |
நிறைமூக்கைப் பிடிக்கநான் உண்டு விட்டேன் நிலைகடுமை என்றுமதி அழகன் சொன்னான் நிறைவயிறு குறைவதற்கு நீள்துரும்பை நீஉள்ளே செலுத்தென்று தென்றல் சொல்லச் சிறுதுரும்பு செல்லஇடம் இருந்தால் வட்டில் |
215 |
தேம்பாகை விட்டிரேன் என்றான் அன்னோன். |
இயல் 10
கடைத்தெருவில் நடுத்தெருவில் காட்டில் மேட்டில் கால்நடையால் ஊர்திகளால் செல்வோர் யாரும் படைத்திட்ட உணவுகளைப் புகழலானார் பாங்கெல்லாம் புதுப்பாங்கென்பான்ஒருத்தன் |
220 |
வடையினிலே நெய்ஒழுகிற் றென்றான் திண்ணன் நெய்யினிலே வடைஒழுகிற்றென்றான் வேங்கை! குடத்தளவு முக்கனியா என்றான் முத்தன்! குண்டான்தே னாஅதற்கே என்றான் எட்டி! இந்நாட்டு விருந்துமுறை மாற வேண்டும் |
225 |
இங்குண்டோம் வீட்டுக்கும் எடுத்துச் சென்று பின்னாளும் வைத்துண்போம் என்ப தில்லை! பேராசை கொண்டிவ்வாறுரைத்தான் பொன்னன்! பின்னாளில் பிறர்வீடு செல்க என்று பெரியண்ணன் சொல்லவே பொன்னன், "ஏடா! |
230 |
இந்நாட்டில் எவன்வீட்டில் புத்துருக்கில் இலைசோறு, கறியெல்லாம் மிதக்கும்" என்றான்! அவரைக்காய் உப்புநெய் கடுகு தேங்காய் ஐம்பொருளைக் கூட்டமுதில் அறியலானேன் அவற்றோடு மற்றொன்றும் உண்டு போலும்! |
235 |
எனினுமதன் பேரறியேன் என்றான் ஆண்டான்! அவைஐந்தின் கூட்டத்தால் மற்றொன்றுண்டாம்; அதன் பெயர்தான் உயிர்ச்சுவைஎன்றுரைத்தான் தேவன் எவைஎவையோ பேசுவார் அவற்றிலெல்லாம் இன்விருந்தைப் புகழாத எழுத்தே இல்லை! |
240 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணகி புரட்சிக் காப்பியம் - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - என்றான், வேண்டும், மக்கள், பொன்னன், மாசாத்து, மணமக்கள்