சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஐம்மலம்
மோகமிக வுயிர்கடொறு முடனாய் நிற்க மூலவா ணவமொன்று முயங்கி நின்று பாகமிக வுதவுதிரோ தாயி யொன்று பகர்மாயை யொன்றுபடர் கன்ம மொன்று தேகமுறு கரணமொடு புவன போகச் செயலாரு மாமாயைச் திரட்சி யொன்றென் றாகமல மைந்தென்ப ரைந்து மாறா தருளென்ப தரிதென்ப ரறிந்து ளோரே. |
அவத்தை இயல்பு
1.கேவலாவத்தை
ஓங்கிவரும் பலவுயிர்கண் மூன்றவத்தை பற்றி யுற்றிடும்கே வலசகல சுத்தமென வுணர்க வீங்குவருங் கலாதியொடு குறியுருவ மொன்று மின்றிமல மன்றியொன்று மில்லையெனு மியல்பா யாங்கறிவை யறிவரிதாய் அறிகருவி யணையா வாதலினா லிருண்மருவு மலர்விழிபோல துவாய் நீங்கும்வகை யின்றி நித்த வியாபகமா யங்க ணிற்பதுகே வலமென்று நிகழ்த்து நூலே. |
ஐக்கியவாத மதமும் மறுப்பும்
இன்மைமல மாயைகன்ம மென்றிரண்டே யிறைதான் இலங்குபல வுயிர்களு முன்புரிந்த விருவினையின் தன்மைகளா லெவர்களுக்குந் தனுகரண புவனந் தந்திடுமிங் கதனாலே யிருபயனுஞ் சார்ந்து கன்மமெலா நேராக நேராதன் மருவக் கடவுளரு ளாலெவையுங் கழித்திடுவ னதனாற் பின்மலமா னவையணுகா பெருகொளிமுன்புளதே பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே. |
மலத்தின் உண்மை
மாயைமுத லெனவினையின் பான்மைமுதலெனவே மன்னுபனை விதைமரபின் மயங்குமலம் சுத்தற் கேயுநெறி யென்கொலத னியல்பாயின் முத்தி என்பதென்மற் றிவை நிற்க விருங்கலாதி யுணர்வாய் மேய பினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கு மிகுமுலகந்த னிலென்னிலி வைவிடுங்கா லுணர்வுள் தோயுநெறி யிலதாத லறியாமை யெனநீ சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே. அந்நியமா னவையுணர்த்தி யநந்நியமாய் நிறைந்த வறிவறியா மையினானு மருணிலவுங் காலந் தன்னிலவ னேயாவு மாய்நின்ற தொன்மை தாமுணர்த லானுமுயிர் தானென வொன்றிலதாய் மன்னியிடு மலமாயை கன்மங்கண் மாறி வந்திடுமிங் கிதுவழுவா தாதலினான் மனத்தால் உன்னரிய திருவருளை யொழியமல முளதென் றுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா முனக்கே. |
2. சகலாவத்தை
மலமும் மாயையும் முரனுவன:
நால்வகை வாக்குகள்
புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதன் மாயை பொருந்தியிடு மரனருளாற் போதந் தீபஞ் சகலமெலா முடனாய வாறு போலுந் தருமருளை மலமுயிர்கள் சாராமன் மறைக்கு மிகலிவரு மியையுணரி னிருள்வெளியாந் தன்மை எய்தும் வகை தன்செய்தி யிலங்கும் விந்து பகர்வரிய வுணர்வாகி யொளியா யுள்ளப் பான்மையினால் ஒரு நாதம் படரும் தானே. வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம் வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர் சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற் சேர்ந்துவரு மவைமருவு முருவெவையுந் தெரித்து முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளணர்வா யோசை முழங்கியிடு மத்திமைதான் வைகரியிலுதானன் பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின் பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவப்பிரகாசம், சாத்திரங்கள், சித்தாந்த, தானே, ளோரே, இலக்கியங்கள், நிற்க, மொன்று