முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்

5.திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
(திருப்பெருந்துறையில் அருளியது)
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)
வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. | 25 |
வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக் கேடன் என்பாய் போல இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான் ஆனவாறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? | 26 |
ஆயநான் மறையனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர் பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. | 27 |
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப் பேசிப் பூசின்தான் திருமேனி நிறைப் பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. | 28 |
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன் வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத் திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. | 29 |
சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. | 30 |
தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. | 31 |
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. | 32 |
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற செச்சை மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. | 33 |
தேவர்க்கோ அறியாத தேவ தேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. | 34 |
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எம்பெருமான், எல்லாம், காத்து, அந்தம், எந்தாய், புகுந்து, நின்று, காட்டி, அறியாத, ஆட்கொண்டாய், ஆட்கொண்டான், பெரும், வண்ணம்தான், பிறவாமல், அடியார், நெஞ்சாய், பெருமானே, ஆட்கொண்டு, முனைவனே, வெள்ளம், நாயினேன், பேசிப்