முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 6.082.திருச்சாய்க்காடு
ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 6.082.திருச்சாய்க்காடு
6.082.திருச்சாய்க்காடு
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்.
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
2898 | வானத் திளமதியும் பாம்புந் தம்மில் தேனைத் திளைத்துண்டு வண்டு பாடுந் ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும் தேனொத் தடியார்க் கினியார் போலும் |
6.082.1 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே வானத்து விளங்கிய இளமதியும்பாம்பும் தம்முள் நிலவும் பகை நீங்கி வாழ அவற்றை நீள் சடைமேல் வைத்தவரும், வண்டு தேனை உண்டு மகிழ்ந்து பாடும் தில்லையில் நடனமாடும் தேவரும், ஞானமாகிய ஒளிப்பிழம்பாய் நின்றவரும், நன்மையும் தீமையும் ஆனவரும், அடியார்க்குத் தேன் போன்று தித்திப்பவரும் ஆவார்.
2899 | விண்ணோர் பரவநஞ் சுண்டார் போலும் அண்ணா மலையுறையும் அண்ணல் போலும் பண்ணார் களிவண்டு பாடி யாடும் திண்ணார் புகார்முத் தலைக்குந் தெண்ணீர்த் |
6.082.2 |
மணல்செறிந்த புகாரின்கண் முத்துக்களை எறி கின்ற தௌந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விண்ணோர்கள் தொழுதுவேண்ட நஞ்சுண்டவரும், பரந்த துருத்தியிடத்தும் வேள்விக்குடியிடத்தும் உறைபவரும், அண்ணா மலையில் உறையும் அண்ணலவரும், அதியரைய மங்கையில் அமர்ந்தவரும், மிக்குப் பொருந்திய மதுக்களிப்பையுடைய வண்டுகள் பண்ணினைப் பாடிப்பறந்துலவும் பராய்த்துறையிடத்து மேவிய பரமரும் ஆவார்.
2900 | கானிரிய வேழ முரித்தார் போலும் வானிய வருபுரமூன் றெரித்தார் போலும் ஊனிரியத் தலைகலனா வுடையார் போலும் தேனிரிய மீன்பாயுந் தெண்ணீர்ப் பொய்கைத் |
6.082.3 |
மலர்களிடத்துத் தேன் ஒழுகும் வண்ணம் மீன்கள் அவற்றைத் தாக்குகின்ற தௌந்த நீர்ப் பொய்கைகள் மிக்க திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே காட்டினின்றும் மற்ற விலங்குகள் நீங்கிப்போமாறுவரும் களிற்றியானையை உரித்தவரும், காவிரிப்பூம்பட்டினத்து உள்ளவரும், தேவர்கள் கெட்டோடும் வண்ணம் வானத்தில் பறந்து வரும் திரிபுரங்களையும் எரித்தவரும், வடகயிலையைத் தம் இருக்கையாகக் கொண்டவரும், தசை நீங்கிய அத்தலையை உண்கலமாக உடையவரும், பிரளய காலத்து ஊழி வெள்ளத்து மேலே உயர்ந்து விளங்கும் தோணிபுரத்து உறையும் ஒப்பற்றவரும் ஆவார்.
2901 | ஊனுற்ற வெண்டலைசேர் கையர் போலும் மானுற்ற கரதலமொன் றுடையார் போலும் கானுற்ற ஆட லமர்ந்தார் போலும் தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றுந் |
6.082.4 |
தேன் நிறைந்த சோலைகளின் நடுவில் விளங்கித் தோன்றும் திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, தசை பொருந்தி இருந்த வெள்ளிய தலையோடு சேர்ந்த கையினரும், பல ஊழிகளைக் கண்டவரும், மான் பொருந்திய கரதலம் ஒன்றுடைய வரும், திருமறைக்காட்டை அணுகியுள்ள கோடிக்கரையில் மகிழ்ந்து உறைபவரும், காட்டில் ஆடலை விரும்பியவரும், காமனைக் கண்ணிடத்துத் தோன்றிய அழலால் அழித்தவரும் ஆவார்.
2902 | கார்மல்கு கொன்றையந் தாரார் போலும் பார்மல்கி யேத்தப் படுவார் போலும் ஊர்மல்கு பிச்சைக் குழன்றார் போலும் சீர்மல்கு பாட லுகந்தார் போலும் |
6.082.5 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே கார் காலத்தில் நிரம்பப்பூக்கும் கொன்றைப் பூவாலாகிய தாரினை உடையவரும், காலனை ஓருதையால் வீழக்கண்டவரும், நிறைந்து நின்று பூமியினுள்ளாரால் புகழப் படுபவரும், திருப்பருப்பதத்தில் எக்காலத்தும் மகிழ்ந்து நின்றவரும், மிக்க பிச்சை பெறுதற்காக ஊரின்கண் அலைபவரும், ஓத்தூரை ஒருகாலும் நீங்காதவரும், தாள அறுதியுடன் கூடிய பாடலை விரும்புபவரும் ஆவார்.
2903 | மாவாய் பிளந்துகந்த மாலுஞ் செய்ய மூவாத மேனி முதல்வர் போலும் கோவாய முனிதன்மேல் வந்த கூற்றைக் தேவாதி தேவர்க் கரியார் போலும் |
6.082.6 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, கேசி என்னும் குதிரையின் வாயைக் கிழித்து மகிழ்ந்த திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கின்ற நான்முகனும் ஆகிய இருவரும் தாமேயாய் நின்றவரும், என்றும் மாறுபடாமல் ஒருபடித்தாய்த் திகழும் மேனியுடைய முதல்வரும், முதுகுன்றமாகிய மூதூரினரும், முனிவர் தலைவனாகிய மார்க்கண்டேயன் மேல் வந்த கூற்றுவனை ஒலிக்கும் கழல் அணிந்த பாதத்தால் அன்று உதைத்தழித்தவரும் தேவர்க்குத் தலைவர் ஆகியபிரம விட்டுணு இந்திரர்க்கு அரியவரும் ஆவார்.
2904 | கடுவெளியோ டோரைந்து மானார் போலுங் இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் படியொருவ ரில்லாப் படியார் போலும் செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும் |
6.082.7 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, பெரிய ஆகாயத்தோடு கூட்டி எண்ணப்படுகின்ற ஐம்பூதங்களும் ஆனவரும், காரோணத்தலங்களில் என்றும் இருப்பவரும், இடிக்கும் குரலைக் கொண்ட வாயையுடைய பூதப்படையினரும், ஏகம்பத்தை விரும்பி அதன் கண் இருந்தவரும் பிறர் ஒருவரும் ஒப்பில்லாத இயல்பினை உடையவரும், பாண்டிக்கொடுமுடியையும் தம் ஊராகக் கொண்டவரும் அடியாருடைய துன்பத்திற்குக் காரணமான நோயைத் தீர்ப்பவரும் ஆவார்.
2905 | விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும் மலையினார் மங்கை மணாளர் போலும் தொலைவிலார் புரமூன்றுந் தொலைத்தார் போலும் சிலையினார் செங்க ணரவர் போலும் |
6.082.8 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, விலையில்லாத மாலையணிந்தமார்பரும், வெண்ணீற்றை மெய்யிற் பூசிய விகிர்தரும், (மற்றையாரின் வேறுபட்டவர்) மலையரையன் மங்கையின் மணாளரும், மாற்பேற்றினைத் தம் இடமாய்க் கொண்டு மகிழ்ந்தவரும், தோல்வி அறியாத பகைவருடைய மூன்று புரங்களையும் தொலைத்தவரும், சோற்றுத்துறை, துருத்தி ஆகிய தலங்களில் உள்ளவரும், வில்லில் நாணாகப்பூட்டிய பாம்பினை உடையவரும் ஆவார்.
2906 | அல்லல் அடியார்க் கறுப்பார் போலும் நல்லமும் நல்லூரும் மேயார் போலும் முல்லை முகைநகையாள் பாகர் போலும் தில்லை நடமாடுந் தேவர் போலும் |
6.082.9 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே, அடியாருடைய அல்லலை அறுப்பவரும், தம்மை அடைந்தார்க்கு அமருலக ஆட்சியை அளிப்பவரும், நல்லத்திலும் நல்லூரிலும் பொருந்தி நின்றுகாட்சி அளிப்பவரும், நள்ளாற்றை என்றும் பிரியாதவரும், முல்லைமொட்டுப் போன்ற பற்களை உடைய பார்வதியின் பாகரும், உயர்திணை யஃறிணைப் பொருள்கள் யாவற்றிற்கும் முன்னே தோன்றியவரும், தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் தேவரும் ஆவார்.
2907 | உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால் நிறைப்பெருந்தோள் இருபதும்பொன் முடிகள் பத்தும் பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும் சிறப்புடைய அடியார்கட் கினியார் போலும் |
6.082.10 |
திருச்சாய்க்காட்டில் இனிதுறையும் செல்வரே! எடுத்த வினையை முடிப்பதில்தீவிரம் மிக்க இராவணன் ஊக்கம் மிக்கு அழகிய கயிலை மலையைக் கையால் பெயர்த்தலும், உமையாள் அஞ்ச, வெற்றி நிறைதலையுடைய அவன் பெருந்தோள்கள் இருபதும் முடிகள் பத்தும் சோர்ந்து நிலத்தில் வீழும் வண்ணம் கால்விரலை ஊன்றிய நிமலரும், பிறைச் சந்திரனை அணியாகச் சடையிடத்துக் கொண்ட பெருமானாரும், பெண்ணுருவும் ஆணுருவும் கலந்து நின்ற அம்மையப்பரும், பதிஞானச் சிறப்புடைய அடியவர்களுக்கு இனியவரும் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 80 | 81 | 82 | 83 | 84 | ... | 98 | 99 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சாய்க்காடு - ஆறாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - செல்வரே, இனிதுறையும், டினிதுறையுஞ், திருச்சாய்க்காட்டில், செல்வர், போலும்திருச்சாய்க்காட், நின்றார், மகிழ்ந்து, என்றும், உடையவரும், வண்ணம், நின்றவரும், தாமேயாய், திருச்சிற்றம்பலம், பொருந்தி, மகிழ்ந்தார், திருமுறை, அடியாருடைய, முடிகள், இராவணன், அளிப்பவரும், கொண்டவரும், உள்ளவரும், திருச்சாய்க்காடு, தேவரும், மானார், ஆனவரும், உறைபவரும், நடமாடுந், பொருந்திய, உறையும், கினியார்