முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.054.திருப்புகலி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.054.திருப்புகலி
2.054.திருப்புகலி
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
திருப்புகலி மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2048 | உருவார்ந்த
மெல்லியலோர் கருவார்ந்த வானுலகங் பொருவார்ந்த தெண்கடலொண் திருவார்ந்த கோயிலே |
2.054.1 |
அழகிய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவரே! தம்மை அடைவோர்க்கு அருள்நிறைந்த வானுலகை வழங்கும் கருத்தால் நீர் கரையோடு பொரும் தெண்கடற்சங்கம் வந்து மகிழும் பூம்புகலியில் உள்ள அழகிய கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டீர் போலும்.
2049 | நீரார்ந்த
செஞ்சடையீர் ஊரார்ந்த சில்பலிய போரார்ந்த தெண்டிரைசென் சீரார்ந்த கோயிலே |
2.054.2 |
கங்கை சூடிய செஞ்சடையீர்! வரிசையாய் அமைந்த கழல்களை அணிந்த பாதத்தை உடையவரே! ஊர்தோறும் சிலவாக இடும் பலியை ஏற்பவரே! உழையாகிய மான் தோலை ஆடையாகப் பூண்டவரே! போர் போன்றுயர்ந்து வரும் அலைகள் சென்றணையும் கடற்சோலைகளைக் கொண்ட அழகிய புகலியில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டு விளங்குகின்றீர்.
2050 | அழிமல்கு
பூம்புனலு மொழிமல்கு மாமறையீர் பொழின்மல்கு வண்டினங்க எழின்மல்கு கோயிலே |
2.054.3 |
மிகுதியாக நிறைந்துள்ள அழகிய கங்கையும் பாம்பும் சடைமீது பொருந்தச் சொற்கள் மிகுந்த நான்மறைகளை ஓதியவரே! கறைக்கண்டமும் எண்தோளும் உடையவரே! பொழில்களில் நிறைந்த வண்டுகள் இன்னிசைபாடும் பூம்புகலியுள் எழில் விளங்கும் கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2051 | கையிலார்ந்த
வெண்மழுவொன் மயிலார்ந்த சாயன்மட பயிலார்ந்த வேதியர்கள் எயிலார்ந்த கோயிலே |
2.054. 4 |
கையில் வெண்மழு ஒன்றை உடையவரே! மயில் போன்ற சாயலை உடைய உமையம்மை அஞ்ச யானையின் தோலை மெய்யில் போர்த்தவரே! மறை பயின்ற வேதியர்களின் பதியாய் விளங்கும் அழகிய புகலியுள் மதில்களால் சூழப்பட்ட கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.
2052 | நாவார்ந்த
பாடலீர் பாவார்ந்த பல்பொருளின் பூவார்ந்த பொய்கைகளும் தேவார்ந்த கோயிலே |
2.054.5 |
நாவிற்பொருந்திய, பாடலைப் பாடுகின்றவரே! ஆடும்பாம்பை இடையிற்கட்டியவரே! பாடலில் பொருந்திய பொருளும் பயனும் ஆனவரே! நான்முகனால் விரும்பப்பெறும் பூக்கள் நிறைந்த பொய்கைகளும் வயல்களும் சூழ்ந்துள்ள பொழில் சூழ்ந்த புகலியில் தெய்வத்தன்மை பொருந்திய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு திகழ்கின்றீர்.
2053 | மண்ணார்ந்த
மண்முழவந் பெண்ணார்ந்த மெய்மகிழப் விண்ணார்ந்த மதியமிடை கண்ணார்ந்த கோயிலே |
2.054.6 |
மார்ச்சனை ஊட்டப்பட்ட (முகப்பு-வலந்தரை) மண்ணாலான (கொட்டு என்பவற்றோடு கூடிய) முழவம் (மிருதங்கம்) ஒலிக்க-இமவான் மகளாகிய பார்வதி தேவி திருமேனியிற் பொருந்தி விளங்க, விரும்பிக் கையில் அனல் கொண்டு ஆடுபவரே! வானத்திற் பொருந்திய மதிமிடையும் மாடங்களைக் கொண்டுள்ள விரிந்த புகலியில் கண்களுக்கு மகிழ்வு தரும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு கலந்துள்ளீர்.
2054 | களிபுல்கு
வல்லவுண அளிபுல்கு பூமுடியீர் தௌபுலகு தேனினமு ஒளிபுல்கு கோயிலே |
2.054.7 |
களிப்புமிக்க வலிய அவுணர்களின் மூன்று ஊர்கள் எரியுமாறு கணை எய்தவரே! வண்டுகள் சூழும் மலர்முடியை உடைய 120 வரே! தேவர்கள் வழிபட அருள் புரிந்தவரே! வண்டுகள் சூழும் தௌந்த தேன் நிறைந்த மலருட் பொருந்திய மணம் கமழும் புகலியில் உள்ள ஒளி பொருந்திய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2055 | பரந்தோங்கு
பல்புகழ்சே டுரந்தோன்றும் பாடல்கேட் புரந்தோன்று மும்மதிலு வரந்தோன்று கோயிலே |
2.054.8 |
பரவிய பல்புகழை உடைய இராவணனைக் கயிலை மலைக்கீழ் அகப்படுத்திப் பொருள்நிறைந்த அவன் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்நாள் அருளியவரே! தம்மோடு மகிழ்வில்லாத அசுரர்களின் மும்மதில்களையும் எரியச் செய்தவரே! அழகிய புகலியில் அருள் நலம் தோன்றும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.
2056 | சலந்தாங்கு
தாமரைமே கலந்தோங்கி வந்திழிந்துங் புலந்தாங்கி யைம்புலனுஞ் நலந்தாங்கு கோயிலே |
2.054. 9 |
நீரிற்பொருந்திய தாமரை மேல் உறையும் பிரமனும், உலகை அளந்த திருமாலும் கூடி உயர்ந்து சென்றும் அகழ்ந்து சென்றும் காண இயலாதவாறு கனல் உருவம் கொண்டவரே! மெய்யுணர்வு பெற்று ஐம்புலன்களையும் செற்றவர் வாழும் அழகிய புகலியுள் நன்மைகளைக் கொண்ட கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.
2057 | நெடிதாய
வன்சமணு கடிதாய கட்டுரையாற் பொடியாரு மேனியினீர் வடிவாருங் கோயிலே |
2.054.10 |
காலம் நீட்டித்துச் சொல்லும் வலிய சமணர்களும், நிறைவாக ஒன்றைக் கூறாத சாக்கியரும் கடுமையான சொற்களால் பழித்துப் பேச, மேலானதொரு மெய்ப் பொருளாக விளங்குபவரே! பொடிபூசியவரே! புகலிப்பதியுள் மறையவர் விரும்பி ஏத்த அங்குள்ள அழகிய கோயிலையே உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.
2058 | ஒப்பரிய
பூம்புகலி அப்பரிசிற் பதியான செப்பரிய தண்டமிழாற் எப்பரிசி லிடர்நீங்கி |
2.054.11 |
ஒப்பில்லாத அழகிய புகலிப்பதியுள் ஓங்கிய கோயிலுள் மேவிய இறைவனை மேலாம் தகைமை உடைய புகலியுள் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லுதற்கு அருமையாக விளங்கும் தண்டமிழால் ஆராய்ந்துரைத்த பாடல்களாகிய இவற்றை ஓதவல்லவர் எவ்வகையிலும் இடர்கள் நீங்கி இமையோருலகில் நிலைத்து இருப்பார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயிலே, கோயிலை, கோயிலாகக், கொண்டு, கோயிலாக, புகலியில், பொருந்திய, இருப்பிடமாகக், பூம்புகலி, நிறைந்த, கொண்டுள்ளீர், புகலியுள், திருப்புகலி, வண்டுகள், விளங்கும், உடையவரே, சூழும், திருமுறை, மகிழ்கின்றீர், சென்றும், புகலிப்பதியுள், கோயிலையே, மகிழ்ந்தீரே, கொண்டவரே, செஞ்சடையீர், திகழ்ந்தீரே, கையில், கோயிலாகத், பொய்கைகளும், திருச்சிற்றம்பலம்