முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.066.திருச்சண்பைநகர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.066.திருச்சண்பைநகர்
1.066.திருச்சண்பைநகர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
712 |
பங்கமேறு மதிசேர்சடையார் அங்கமாறு மறைநான்கவையு வங்கமேவு கடல்வாழ்பரதர் சங்கமேறி முத்தமீனுஞ் |
1.066.1 |
மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய இறைவர் கலை குறைந்த பிறை மதி சேர்ந்த சடையினர். விடைஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.
713 |
சூதகஞ்சேர் கொங்கையாளோர் போதகஞ்சேர் புண்ணியனார் மேதகஞ்சேர் மேகமந்தண் சாதகஞ்சேர் பாளைநீர்சேர் |
1.066.2 |
வானகத்தே திரிந்து வாழும் சாதகப் பறவைகள் உண்ணுமாறு மேன்மை பொருந்திய மேகங்கள் பெய்த மழை நீர் அழகிய குளிர்ந்த சோலைகளில் விளங்கும் தெங்கு கமுகு இவற்றின் பாளைகளில் சேரும் சண்பை நகர் இறைவர். சூது ஆடு கருவி போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். ஒளி பொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களின் தலைவர்.
714 |
மகரத்தாடு கொடியோனுடலம் நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் பகரத்தாரா வன்னம்பகன்றில் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் |
1.066.3 |
எல்லோரும் புகழத்தாரா அன்னம் அன்றில் முதலிய பறவைகள் தம் திருவடிகளை வணங்கிப் போற்றுமாறு தகரம் புன்னை தாழை முதலிய மரங்களின் பொழில்கள் சூழ்ந்த சண்பை நகரில் விளங்கும் இறைவர், மகர மீன் வடிவு எழுதப்பட்டு ஆடும் கொடியை உடைய மன்மதனது உடலை நீங்குமாறு செய்து, அழகில் தன்னொப்பில்லாத அவனுடைய மனைவி வேண்ட அவள் கண்களுக்கு மட்டும் மன்மதனைப் புலனாகுமாறு அருள் செய்த நீலகண்டர் ஆவார்.
715 |
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த தெய்வர்செய்ய வுருவர்கரிய கையர்கட்டங் கத்தர்கரியி சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் |
1.066.4 |
அன்போடு சைவர்களும் பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார். அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர் - யானைத் தோலைப் போர்த்தியவர்.
716 |
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் குலமார்கயிலைக் குன்றதுடைய நலமார்வெள்ளை நாளிகேரம் சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் |
1.066.5 |
மக்கட்கு நன்மை தரும் மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின் மருப்புப் போலத் தோன்றும் சோலை வளம் மிக்க சண்பைநகர் இறைவர் மரக்கலங்கள் நிறைந்த கடலிடையே தோன்றிய விடத்தை உண்டு அமரர்கட்கு அமுதம் அருள் செய்தவர். மலைக் குலங்களில் மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து ஆனேற்றை ஊர்ந்து வருபவர்.
717 |
மாகரஞ்சே ரத்தியின்றோல் சூகரஞ்சே ரெயிறுபூண்ட ஆகரஞ்சே ரிப்பிமுத்தை சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் |
1.066.6 |
கடலில் வாழும் சிப்பிகள் தந்த முத்துக்களை அழகியதாய்க் குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் உந்தி வந்து சேர்க்கும் சண்பை நகர் இறைவன் நீண்ட கையினை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துள்ள திருமேனியில் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்ட ஒளி வடிவினன்.
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 1.053.7 |
718 |
இருளைப்புரையு நிறத்திலரக்கன் அருளைச்செய்யு மம்மானேரா மருளைச்சுரும்பு பாடியளக்கர் றரளத்தோடு பவளமீனுஞ் |
1.066.8 |
அழகிய மணத்தோடு மருள் என்னும் பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரிய நிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.
719 |
மண்டான்முழுது முண்டமாலு எண்தானறியா வண்ணநின்ற தண்டார்குவளைக் கள்ளருந்தித் பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் |
1.066.9 |
தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால் தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர் மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன்.
720 |
போதியாரும் பிண்டியாரும் நீதியாகக் கொண்டங்கருளு மாதிசித்தர் மாமறையின் சாதிகீத வர்த்தமானர் |
1.066.10 |
அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பை நகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ் மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.
721 |
வந்தியோடு பூசையல்லாப் சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் அந்திவண்ணன் றன்னையழகார் சிந்தைசெய்து பாடவல்லார் |
1.066.11 |
அடியவர்கள் வந்தனையோடு பூசை செய்யும் காலங்கள் அல்லாத ஏனைய பொழுதுகளில் வேதப் பொருள்களைப் பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும் தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய, மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை, ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சண்பைநகர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நகராரே, இறைவர், விளங்கும், முதலிய, இறைவன், பொருந்திய, வாழும், சண்பைநகர், யானையின், சேர்க்கும், வண்டுகள், சிவகதி, முழுவதையும், திருமுறை, திருச்சிற்றம்பலம், பறவைகள், நகரில், திருச்சண்பைநகர், குளிர்ந்த, முத்துக்களை, கடலிடையே, வழிபடும்