முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.002.திருப்புகலூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.002.திருப்புகலூர்

1.002.திருப்புகலூர்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
காவிரி தென்கரைத் தலம், சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
12 |
குறிகலந்தவிசை பாடலினான்நசை நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு முறிகலந்ததொரு தோலரைமேலுடை பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய |
1.002.1 |
சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசை ஏறி வந்து மக்கள் இடும்பிச்சையை விரும்பி ஏற்பவன். இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.
13 |
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மாதிலங்குதிரு மேனியினான்கரு மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ போதிலங்குநசை யால்வரிவண்டிசை |
1.002.2 |
காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.
14 |
பண்ணிலாவும்மறை பாடலினான்இறை பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல் உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின் |
1.002.3 |
இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.
15 |
நீரின்மல்குசடை யன்விடையன்அடை சீரின்மல்குமலை யேசிலையாகமு காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் |
1.002.4 |
கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.
16 |
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் மெய்யநின்றபெரு மானுறையும்மிட பொய்யிலாதமனத் தார்பிரியாது |
1.002.5 |
சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.
17 |
கழலினோசைசிலம் பின்னொலியோசை குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் விழவினோசையடி யார்மிடைவுற்று முழவினோசைமுந் நீரயர்வெய்த |
1.002.6 |
இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூதகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.
18 |
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் |
1.002.7 |
கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச் சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.
19 |
தென்னிலங்கையரை யன்வரைபற்றி தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை மின்னிலங்குசடை யான்மடமாதொடு பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி |
1.002.8 |
அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதி தோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.
20 |
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய போகம்வைத்தபொழி லின்னிழலான்மது |
1.002.9 |
பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.
21 |
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு மெய்தவத்தின்முயல் வாருயர்வானக |
1.002.10 |
எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார் களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.
22 |
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம் பற்றியென்றும்இசை பாடியமாந்தர் குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக |
1.002.11 |
புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள் சேர் புகழைக் கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புகலூராகும், விளங்கும், வாழும், விரும்பி, என்றும், உறையும், செய்யும், அத்தகையோன், தோன்றிய, கடவுள், கடவுள்ளிடமென்பர், திருமுறை, அடியவர்கள், புகலூர், என்பர், போற்றும், நிறைந்த, அடியவர், முதலிய, உறையுமிடம், தொழுது, உயிர்கள், சூழ்ந்த, பொழில், தேனுண்ணும், பாடுபவன், அணிந்தவன், திருச்சிற்றம்பலம், உடையவன், மல்கும்புகலூரே, திருப்புகலூர், மக்கள்