புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - பாண்டியன் பரிசு
இயல் 51
நீலியொடு அன்னம்.
நினைக்கையிலே என்நெஞ்சம் எரியு தேடி பனைக்கைஉறும் களிறுபோல் தந்தை யாரும் எனைக்கையிலே ஏந்திவளர்த் தார்கள் ஐயோ! உனைக்கையில்வைத் தோம்இப்போ துளத்தில் வைத்தோம் நன்செய்வாய்ச் செந்நெலெலாம் பொன்ம லைபோல் பின்செய்வாய் அருஞ்செயல்கள், அறச்செ யல்கள் முன்செய்வாய் என்றுரைத்த என்பெற் றோர்கள் என்செய்வாய் என்செய்வாய் என்றன் பெண்ணே |
இயல் 52
துயருறும் அன்னத்தை, ஓடம்ஏறி உலவ நீலி அழைத்தாள்.
விழிப்புனலில் குளிப்பவளாய்த் துன்ப ஆற்றின் கொழிப்பாள்நெஞ் சிளகுமொழி! அன்ன மேபூங் செழிப்பினிலே நிழல்சாய்ந்த செய்யாற் றோரம் கழிப்போமே நேரத்தை! என்றாள் நீலி நீர்தேங்கும் செய்யாற்றின் ஓடம், துன்பம் தார்தாங்கும் தட்டம்போல் தன்பால் தாங்கத் ஆர்தாங்கள் எனக்கேட்டும் இன்பம் ஊட்டும் சீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந்தி டாது தேங்கிநிற்கும் புனல்மீது செல்லா நிற்கும் பாங்கிநிற்கப் பார்த்துநின்ற அன்னம் சொல்வாள்: தேங்கிநிற்கும் பொன்னாற்றில் செழுமா ணிக்கச் வாங்கிநிற்கும் ஒளியைப்பார்! காட்சித் தேனில் |
இயல் 53
படகு ஆற்றில் போகும்போது மழையும் பெருங்காற்றும்!
கிழக்கினைநோக் கிப்படகு செல்லும் போதில் வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து மழைக்கண்ணீர் உகுத்ததுவான்! மேற்கி னின்று பழக்குலைமேல் எறிந்தகுறுந் தடியே போலப் தம்மாலா காதென்று கைவிட் டார்கள் இம்மாநி லத்தின்வாழ் விதுவோ என்றே கைம்மீது தலைசாய்த்துக் கதற லானாள்! செம்மானூர்க் கரையினிலோர் குடிசைக் குள்ளே |
இயல் 54
ஆத்தாவோடிருந்த வேலன் ஓடி ஓடத்தை நிறுத்தி,
இருவரையும் தன் குடிசைக்குக் கொணர்ந்தான்.
இருவரையும் தன் குடிசைக்குக் கொணர்ந்தான்.
"விடை"யென்று கேட்டான்சேய்! "நட"என் றாள்தாய்! நெடுமுனையை ஒருகையாற் பற்றி நீந்தி, கடிதினிலே ஓடத்தைக் கரையிற் சேர்த்தான்; துடியிடைக்கும், நீலிக்கும் தோள்கொ டுத்துச் கண்ணேஎன் அன்னமே! நீயோ? நீயோ? மண்ணாள நீபிறந்தி ருக்க ஆற்றில் ஒண்ணுமோ? என்றுரைத்துக் களைப்பு நீக்கி தண்ணென்று தரையிருக்கும் என்று சென்று நனைந்தகுழ லுக்குச்சந் தனம்பு கைத்து பனம்பழத்தின் சாறட்ட பனாட்டும் தேனும் நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன் செங்க ரும்பை புனைந்துவைத்தேன் முல்லையிலே கண்ணி ஒன்று |
இயல் 55
அன்னம் வேலன் அன்புப் பேச்சுகள்.
ஆத்தாவே இவர்யார் என் றன்னம் கேட்டாள்! தீத்தாவும் கண்ணுடையார் வேழ நாட்டார் காத்தாரும் இவர்தாமோ? என்றாள் அன்னம். வாய்த்தீரே மானத்தை உயிரைக் காக்க "ஒருசற்றும் பயனில்லா உடம்பை, வாழ்வோ நரிசற்றும் விலகாத கூட்டைச் சான்றோர் முரசுக்கு வாய்ஓயாக் குறட்டில் மன்னர் ணரசுக்கோ ஆட்படுத்தா திருத்தல் வேண்டும்? எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால் பனையளவு நலமேனும் தன்ன லத்தைப் உனைஒன்று வேண்டுகிறேன் என்னால் ஆவ "இழந்தபாண் டியன்பரிசைத் தருவார்க் கென்னை முழங்கியஓர் சேதியினை அறயீீர் போலும்! பழம்பெரிய பாண்டியனார் பேழைக் குள்ளே கொழுத்தபுகழ் உமக்குண்டு கொண்டு வந்தால்! பேழையின தடையாளம், பறிபோய் விட்ட ஆழஉரைத் திடலானாள் அன்னம்! வேலன் ஏழைமகன்; நரிக்கண்ணர் ஆணை எங்கே பேழையினைக் கொண்டுவந்து தருவேன்; அன்றிப் மாத்தீயன் நரிக்கண்ணன், காணா வண்ணம் காத்தவளும், நேர்நின்றே இன்றும் அன்றும் காத்தவளும், இனிக்காப்பா ளும்,பெண் ணாளின் ஆத்தாவின் இடதுகை நோக்கி நோக்கி |
இயல் 56
கொய்யாக் குடியில் வீரப்பன், ஒரு குடிசையில்
இருக்கிறான்.தோழன் ஒருவன் வருகிறான்.
இருக்கிறான்.தோழன் ஒருவன் வருகிறான்.
செய்யாற்றின் கரையினிலே, செம்மா னூரில் கொய்யாக்கு டிக்குச்சென் றான்வீ ரப்பன், எய்துமோர் கால்நோயால் அவ்வி டத்தில் ஐயாஎன் றொருதோழன் அழைத்தான்; "இந்த "மாட்சியுறும் மன்னவனைப் பின்னால் குத்தி காட்சிக்கோர் ஓவியமாய், வாழ்ந்து வந்த வாட்சுழலால் உயிர்சுழலக் கணக்கில் லாத ஆட்சிக்குப்புறம்பாய்நான் இருக்கும் போதே இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின் றாரே! சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச் வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின் எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்ப தான கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக் இல்லாரும் அங்கில்லை; பிறன் நலத்தை நல்லாரே எல்லாரும் அவ்வை யத்தில் என்றுரைத்தான் வீரப்பன்! தோழன் சொல்வான்: தென்மலையிற் பிறர்அணுகா திருக்கும் வண்ணம் தின்னவரும் பூதமிது என்று சொல்லித் அன்னவரே பேழையினைத் தேட லானார் வீடெல்லாம் தரைமட்டம், ஆல்இ ருந்த காடகழ்ந்த நீரூற்றின் ஆழங் காணில் ஈடற்ற கலைப்பொருள்கள் இருக்கும் மன்றம், நாடழிய ஆளுகின்ற நரிக்கண்ணற்கோ மூட்டையொடு கழுதைநடந் திருக்கும், பின்னே பாட்டையிலே பஞ்சுநிறை கூடை போகும் கூட்டுநீ லச்சாயம் கொண்டு செல்வார், காட்டாளோ பூதமென்பான், அஞ்சி வீழ்வார்! அரண்மனையின் யானைவரப் பூதம் என்றே எருதின்மேல் வீழ்ந்தான்! சாய்ந் ததுவைக் கோலும் இருந்தகொல் லூற்றூக்கா ரன்கு தித்தான்! தெருப்பற்றி எரிகையிலே, பூதம் அங்கே அஞ்சவைக்கும் பூதத்தை அஞ்ச வைக்க கொஞ்சிவிளை யாடவிட்டால் நல்ல தாகும் நெஞ்சில்வைத்தே வீரப்பன், "வேண்டு மானால் வஞ்சமுற்ற நரிக்கண்ணன் ஆட்கள், எந்த "கொண்டுவந்த பேைழையினை மகனி டத்தில் பண்டெனது செயலைஅவன் அறிய நேரும்; தொண்டுகிழ வன்புகன்றான்! "மகனி டத்தில் அண்டையிலே இருந்தஅவன் சொல்ல; ஆம்ஆம் |
இயல் 57
நரிக்கண்ணனின் அமைச்சன் மகனான நீலன், நீலியைக் காணுகின்றான்.
அமைச்சன்மக னானஓர் நீலன் என்பான் இமைக்கின்ற நேரமதும், வீணாக் காமல் நமக்குவரு மோஎன்று நினைத்தா னாகி சிமிழ்க்காத கண்ணோடு தெருக்கள்தோறும் அன்னத்தைத் தேடுகையில், நீலி அங்கே இன்னவளை ஆராய்வேன் எனநெ ருங்கி கன்னலொன்று காலடியிற் கிடைத்த தைப்போல் உன்னிடத்தில் சொல்லிவிட வேண்டும்; என்னை என்தந்தை என்னிடத்தில் இன்று வந்தார்; என்றுரைத்தார். யானுரைத்தேன் இவ்வை யத்தில் பொன்வேலி தனில்உண்டு! நீலி என்று இன்னுயிரைப் போன்றுள்ளாள்! அவளை யன்றி மாந்தளிரால் மெல்லுடலும், மணக்கும் செந்தா சாய்ந்துதிடீர் எனவிழுந்தார் என்றன் தந்தை! வாய்ந்திருக்கும் பிள்ளைநீ பாங்கி யைப்போய் தீர்ந்ததினி அவளிடத்தில் சென்ற உள்ளம் என்னநீ நினைக்கின்றாய்? அன்னத் திற்கே அன்னத்தை ஏன்மணக்க லாகா தென்றால், பொன்னுக்குப் பித்தளையோ ஒத்த தாகும்? மின்னலிடை, கன்னல் மொழி, இன்னும் சொன்னால் ஒளியேனும் வானத்தை மறத்தல் கூடும் எளியேனும் உனைமறத்தல் உண்டோ? அன்றி கிளியேனும், குயிலேனும் கேட்டால் நாணக் துளியேனும் அறிவதுகூ டாது; சின்னச் விழிபார்க்க எண்ணிடுமே உன்னை! யாரும் வழிபார்த்து நிற்குமிடம் சொன்னால் நீயோ ஒழிபார்த்துப் பார்த்துநீ! என்கின் றாயோ, குழிபார்க்கத் தான்வருதல் முன்னே சொன்னால் "மன்றிரண்டு தெரியுமன்றோ? அவற்றில் நெல்லி இன்றிரண்டு நாட்களிலே வருவேன்! வந்தால் ஒன்றிரண்டு பேசியபின் சுப்பல் ஒன்றை பொன்திரண்டு வந்தாலும் சரிதான் என்னைப் "எத்தடையும் இல்லையடி மாம ரத்தை சொத்தடையக் கவர்ந்ததன்றி அன்னத் துக்கும் இத்தடைகள் நீங்குதற்கு முயல்கின் றாளா? கொத்தடையும் மலர்க்குழலே என்னி டத்தில் "கூடுவிட்டுத் தாயைவிட்டுப் பறந்து விட்ட வீடுவிட்டு வேலைவிட்ட ஆத்தா, வேலன், தேடிவிட்டால் கிடைத்துவிடு மோஅப் பேழை? மூடிவிட்டார் பேழையினை! அவர்கள் கொஞ்சம் இடக்கையோ ஆத்தாவுக் கில்லை! இவ்வா நடக்கையிலே ஊன்றுதற்கோ கணுக்கா லில்லை! எடுக்கையிலே அமைவுற்ற மேனி யாட்கோ படுக்கையிலும் விழிக்கையிலும் பலகை ஓலைப் எதுமுடியும் அவராலே?" என்றாள் நீலி! புதுமுடிவேந் தன்விட்ட மறவர் தம்மைப் முதுமுடியான் கதிர்வேலன் பெற்றெ டுத்த 'இதுமுடிய இதுசெய்வாய்' என்று கூறி ஆத்தாவின் துணைவர்யார்? அறியேன்" என்றான் கூத்தாடிப் பிழைப்பார்போல் தோன்று கின்றார், பார்த்தாயா என்னென்ன உடைகள் என்றான், நீத்தாரின் உடை,பலவும் கண்டேன் என்றாள். "போவிரைவில்" என்றுரைத்தாள் ஆத்தா! அன்னோர் வாவிரைவில் என்றுரைத்தால் வருவார் போலும்! தீவிரைவில் கொல்லுதல்போல் பூதம் வந்து நீ விரைவில் போஉன்றன் குடிசைக் கென்றான். "ஊருக்குள் பூதமெனப் புளுகி னோரின் நேருக்கு நேரடையும் தீமை தன்னை சீருக்கு வாய்த்திருக்கும் அன்பே, பூதச் தேருக்குச் செப்பனிட்ட முட்டுக் கட்டை "உன்னகத்தை யறிவதற்கே இதனைச் சொன்னேன் தன்னகத்தில் வளர்ந்துவரும் மடமை யின்பேர் சொன்னகற்றோர் மொழியினைநான் ஒப்பு கின்றேன். பொன்னகத்தில் தமிழகத்தில் தாய கத்தில் "திங்களிடம் குளிர்போலும் கதிர வன்பால் உங்களிடம் எனக்குள்ள அன்பின் மீதில் தங்களிடம் நோக்கியே செல்ல வேண்டும் இங்குவரக் கூடுமன்றோ?" என்றாள் நீலி! "என்பொருட்டு நின்னழகை அன்பை ஈந்தாய் நின்பொருட்டு அவளுக்கோர் நன்மை செய்ய யின்பொருட்டுப் பொருள், ஆவி உடல்வேண் டாமல் தன்பொருட்டு வாழ்வானோர் ஏழை! மக்கள் "மின்னையும்பன் மலர்களையும் கொண்டி யாக்கை தன்னையும்நான் அறியேனே! வேழ நாடு என்னையுந்தன் தொண்டரொடு சேர்த்துக் கொள்ள பொன்னையும்வார்ப் படநுண்மை தனையும் வையப் நலங்கெடவே கதிர்நாட்டை ஏப்ப மிட்ட குலுங்குநகை முத்தாகக் கொழிக்கும் பெண்ணே! விலங்குபழக் கிடுவானின் வெள்ளா டொன்று தெலுங்கினிலே பாடிடுமோர் தமிழன் செய்கை கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக் வேப்பங்காய்! அவனுமெனை விதைபற் றாத தீப்பொங்கும் மலையடியில் வாழு கின்றேன் தோப்பிங்கே காணுகின்றேன்! குடியி ருப்பேன் கரும்பல்ல; அதுபிழிந்த சாறே போலும் இரும்பல்ல! நான்சொல்வேன் ஏற்றுக் கொள்வாள்! அரும்பல்ல; கண்ணல்ல அவ்வா றேசெய்! திரும்பல்லல் தீரென்று செப்பிச் சென்றான். |
இயல் 58
ஊர்ப்பேச்சு!
இத்தனைநாள் ஆயிற்றே பேழை எங்கே? முத்தன்ன வெண்ணகையாள் திரும ணந்தான் வைத்தவர்கண் ஏமாறக் கவர்ந்து சென்றோர் எத்தனவன் தானெடுத்துப் பேழை தன்னை நற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்கு பொற்பேழை கிடைத்திட்டால் நரிக்கண் ணற்குப் சொற்பலவும் விரிப்பார்கள் சிலர்! இப் பூதத் தெற்குமலை காடுநகர் நாடு யாவும் |
இயல் 59
வேழ மன்னனும் அமைச்சனும்!
வேழவனும் அமைச்சனொடு வீற்றி ருந்தான் பாழைடைந்த இருள்வீட்டில் விளக்கு, வானப் வாழஒரு பாண்டியனார் பரிசு வேண்டி பேழையினை நரிக்கண்ணன் தானும் தேடிப் அப்பேழை நரிக்கண்ண னிடத்தே யில்லை, ஒப்பேதும் இல்லாத மங்கை யன்னம் செப்பினாள்! அதிலென்ன ஐயப் பாடு? கைப்பேழை தனிலுண்டு! கிடைத்தால் நெஞ்சக் |
இயல் 60
நரிக்கண்ணன் பேழை தேடுவாரை மேற்பார்வை பார்த்துத் திரிகிறான்.
தென்மலையில் தேடுகின்ற கூட்டம், காட்டில் இன்னல்விளைத் திடுங்கூட்டம், வீடு தோறும் பன்னுமிவை அனைத்துக்கும் மேற்பார் வைக்குப் சென்றுசென்று நிலையறிவான் எவ்வி டத்தும் தட்டுப்பட் டதுவோடா பேழை என்று வெட்டுப்ப டாதிருக்க வேண்டும் பேழை முட்டுப்ப டாதுழைப்பீர்! கிடைத்தால் பேழை சிட்டுப்ப றந்ததுபோல் தெருவில் ஓடித் தெருத்தோறும் வாழ்வாரை ஒருங்க ழைத்துச் ஒருபேழை தனைத்தந்தேன் அதனை வாங்கி பெருமக்கள் தமையெல்லாம் உளம்வ ருத்திப் எரிமூளும் கண்ணாலே அஞ்ச வைப்பான் |
இயல் 61
அன்னம் குதிரை ஏறிப் பேழைக்குப் புலன் கேட்டாள்.
ஓடிக்கொண் டேயிருக்கும் குதிரை, காதில் ஆடிக்கொண் டேயிருக்கும் நெற்றித் தொங்கல்! தேடிக்கொண் டேஇருந்தாள் பேழை தன்னைத் பாடிக்கொண் டேஇருந்தாள் நிலைமை பற்றிப் "பண்டிருந்த பாண்டியனார் பரிசை, என்றன் கண்டிருந்த துண்டென்றால் கூறு வீரோ? வண்டிருந்து பண்பாடிக் கொண்டி ருக்கும் தொண்டிருந்த உள்ளத்தீர்! மறவர் மக்காள்! நீர்அடையும் விழியுடையாள்தெருக்கள் தோறும் சீரடைய வேண்டுமெனில் எல்லா மாண்பும் பாராடையும் தீமையெல்லாம் நீங்கி நல்ல பேரடைய வேண்டுமெனில் பேழை வேண்டும்! |
இயல் 62
அன்னம் அலைந்து, பின் ஒரு சோலை அடைந்தாள்.
அகல்வானில் விட்டு விட்டு மின்னல் போல பகல்வானம் மாணிக்கப் புனலா டுங்கால் புகலானாள்; குதிரையினை விட்டாள்! அங்குப் துகிர்உடலில் மணந்தடவ இசைய ரங்கு தாமரைக்கண் இமைஇதழோ அசைய வில்லை பூமறைப்ப தைப்போலும் எழிற்கன் னத்தில் நீமறைக்கா தேஉன்றன் இன்ப யாழை தீமையிலா உயிர்பருகக் கிடந்தாள்; வையம் மீதுயர்ந்த இருதோள்கள் ஒளியை வாரி ஊதுகின்ற வளைகொம்பின் புருவத் தின்மேல் மோதுகின்ற இளங்களிறு போல்ந டந்து காதலில்லை அவன்கண்ணில்! தேன்பற் றாத கிளிக்கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை! ஒளித்திரைபோல் தலைமயிர்சிங் கத்தின் தோற்றம்! துளித்தநறுந் தேனென்று சொல்லும் சொல்லைத் தொடங்குகுரல், முழங்குகின்ற கடலே! ஆனால் களிக்கஒரு காதலில்லை அன்னோன் கண்ணில்! அடுக்கிவைத்த அழகழகாம் உறுப்புக் கள்மேல் தடுக்கிவிழும்; எழும்ஒன்றில் சறுக்கி வீழும்! எடுக்கஎடுக் கக்குறையாச் சுவையின் ஊற்றை துடிக்குமோர் காதலில்லை அன்னோன் கண்ணில்! தீங்கைஇனிப் பொறேனென்னும் கண்கள்! என்றன் வேங்கைஅவன்! அஞ்சாதே என்ற பேச்சு ஏங்கையிலே எனைமீட்டான்! ஓடம் விட்டே பாங்குறஓர் காதலில்லை அன்னோன் கண்ணில்! விழியில்லை; உணர்வில்லை; குடிசை தன்னில் மொழியில்லை இதுமருந்தே எனும்ப டிக்கு வழியில்லை என்றிருந்த என்கண் முன்னே எழுகின்ற காதலில்லை அன்னோன் கண்ணில்! |
இயல் 63
இவ்வாறு அன்னம் துயில்கையில் அங்கே ஓர் துறவி வந்தான்.
நனவுலகில் இவ்வண்ணம் இருந்தாள் அன்னம்! கனவுலகில் இலக்கியத்தைத் தொடர்வா ளானாள்; கனிஇதழில் புதைத்துடலை ஒருக்க ணித்துக் இனிநானும் இவ்வுடலும் புளியும் ஓடும் துவராடை உடுத்திருந்தான்! தோலின் ஆடை தவறாமல் கைப்பிடியாய்ப் பிடித்தி ருந்தான்! எவரேனும் எதிர்க்கையிலே உதவு மென்றே கவிகைஇவை யல்லாமல் எல்லாம் நீத்த |
இயல் 64
அன்னம் துறவியைக் கண்டு திடுக்கிட்டாள்.
வெண்தாடி நிலம்புரள மேல்நி மிர்ந்த கொண்டாடும் கற்பாறை போலி ருந்தான் வண்டோடு பூவிதழும் பறக்கக் காற்று திண்டாட வைக்கையிலே இமைதி றந்தாள்! விரைந்தெழுந்தே ஆடைதனை ஒதுக்கி நின்று "தெரிந்துகொண்டேன் நின்உள்ளம் வாழ்க நன்றே! வரும்சிறிதும் வருந்தாதே" என்று சொல்ல "அருங்கிளியே உனக்கான ஆட வன்பால் பெரியானைக் கைகூப்பிக் குதிரை ஏறிப் அருகினிலே வேலன்வரக் கண்டாள். கையால் "தெருவினிலே நின்றிருப்பேன் வரவு நோக்கிச் "இரு" என்றான். செம்மானூர்க் குடிசை சேர்ந்தாள்; |
இயல் 65
தென்மலையில் நரிக்கண்ணன் ஆட்கள் பேழைக்குத் தோண்டினார்கள்.
அப்போது அங்கு ஓர் பூதம் வௌிப்பட்டது. எல்லோரும் பறந்தார்கள். நரிக் கண்ணனிடம் சொன்னார்கள்.
அப்போது அங்கு ஓர் பூதம் வௌிப்பட்டது. எல்லோரும் பறந்தார்கள். நரிக் கண்ணனிடம் சொன்னார்கள்.
தென்மலையில் பேழையினைத் தேடு கின்றார் சின்னகுகை புகுந்திடுவார்! மாலைப் போதும் மின்னிற்றுப் பெருங்கூச்சல் கேட்ட தங்கே! நின்றதொரு நெடும்பூதம்! நரிக்கண் ணன்பால் ஓடினான் நரிக்கண்ணன் தென்ம லைக்கே; ஆடியதும், நெடுவேலைச் சுழற்றி நின்றே மூடிவைத்த தெருக்கதவை உதைத்துத் தள்ளி பாடுபட்டு நான்கண்ட சூழ்ச்சி தன்னைப் நரிக்கண்ணன் எண்ணினான்! பூதந் தன்னை பெரிதாகும் நிலைகண்டான்! நடுக்கம் கொண்டான்! தெரியாமல் இருந்தேனே எனமு டித்தான்! அரைக்காதம் அதைநினைத்தான்! ஓட லானான்! வடதிசையைத் தான்மறந்து மேற்கு நோக்கி தடதடென ஆயிரம்பேர் எதிவந் தார்கள்; கொடும்பூதம் வந்ததெனக் கூறி னார்கள்; பிடித்தான்பின் ஓட்டத்தைக் கிழக்கு நோக்கிப் |
இயல் 66
நரிக்கண்ணன் , அவன் கூட்டம், பூதம் பூதம் என்று அரண்மனையை காலி செய்தார்கள்.
அன்னம் உள் நுழைந்தாள். வேலன் முதலியவரும் சேர்ந்தார்கள்.
அன்னம் உள் நுழைந்தாள். வேலன் முதலியவரும் சேர்ந்தார்கள்.
அரண்மனையில் நரிக்கண்ணன் ஆட்கள், பெண்கள், பெரும்பூத மாய்த்தோன்றக் கதறி, ஓடிப் பரணுக்குள் குடிபுகுந்தார்! இவ்வா றாகப் திரண்மலைத்தோள் வேலனொடும் நீலி யோடும் "ஆளுயரம் இருந்ததுவாம் நரியார் பூதம்! தோளுயர்ந்த இரட்டையாட் பூத மன்றோ கோளுக்குக் கோள், பொய்க்குப் பொய்யே வேண்டும்; நாளும்எழில் நாட்டார்கள் பூத மென்று "சிரித்துவிளை யாடஇது நேரமன்றே! இருப்பவனோர் திருடனென இயம்பு கின்றார் "இருக்கட்டும்! நீலிநீ துறவி யாரை நெருப்பிற்கு நீருண்டு தணிக்க! அன்னம் துறவுடையார் "பேழைஅகப் படும்" என் கின்றார்! அறிவுடையார் பிறர்தம்மை நம்பித் தம்பால் முறையாமோ இமைப்பொழுதே அமைதி கேட்டேன் நிறைவுறும்உன் மொழியான குளிர்ம ரத்து கரும்பெடுத்துப் பிழிந்ததுவும் என்சொல் தானோ? அரும்பெடுத்துக் கொட்டியதும் என்சிரிப்போ? சுரும்பெடுத்த இசைபோலும் சொல்லெ டுத்தால் இரும்பெடுத்துச் செய்திருக்கும் என்றன் காதில் பிள்ளைநிலை என்னுமொரு கனியின் சாறும் கொள்ளைபடப் பெய்துவைத்த இளமை என்னும் மொள்ளையிலே "உயிர்" என்பார் பார்த்தி ருத்தல் அள்ளையிலே காதல்,அதை அருந்தல் இன்பம்! |
இயல் 67
அதற்குள் துறவி வந்து சேர்ந்தான்.
மற்றுமொரு பேச்செடுத்தாள் அன்னம். அங்கே ஒற்றைஎரு திழுத்துவந்த வண்டி விட்டே கற்றைமலர்க் குழலுடையாள் நீலி யோடு மற்றவரைப் புறம்போக்கி வேலன் காதில் நீலியவள் விடைபெற்று வௌியிற் சென்றாள் சேலின்விழி மகிழ்ச்சியினால் மின்னும்! வாயின் வேலியிட்ட நன்செயிலே விதைத்த வித்தும் மேலும்அவன் அடிமையுளம் உடையான் அல்லன், |
இயல் 68
நீலியும் நீலனும் பேசியிருந்தார்கள் நீலன் வீட்டில்.
ஓதுகின்றான் நீலியுடம் நீலன்: "என்றன் பூதமென ஒன்றில்லை என்று முன்பு மோதுதல்போல் வரும்பூதம் பார்த்தாய் அன்றோ? தீதுசெய வரக்கூடும்!" என்று கூறித் "முன்வந்த பூதத்தை நரிவி டுத்தான்! பின்வந்த பூதத்தை இளைய அன்னம் என்னபொருள் இதற்கென்று நீலன் கேட்டான். ஒன்றுமே விளங்கவில்லை என்றான் நீலன்; "வாட்படையும் வேற்படையும் கண்டு நெஞ்சம் ஆட்படைதான் அடிப்படையோ? அஞ்சி ஓடி "மீட்படையா மக்கட்கு மீட்பும், சற்றும் தோட்படையால் வையத்தை வெல்லும் வேலன் "ஆள்பிடிக்கு மோஅவளுக்" கென்று கேட்டான். வாள்பிடித்த றுத்தெடுத்த செம்ம ரத்தில் தாள்பிடித்து வாழ்கின்றாள் அன்னம்! வேலன் தோள்பிடிக்கும்; சுவையெல்லாம் பிடித்தெ டுத்த "எம்சொத்தே கதிர்நாடு, நாமே ஆள்வோம் பஞ்சொத்துப் பறக்கின்றார் நாட்டு மக்கள்! பிஞ்சொத்த கண்ணாளுக் கிந்த நாட்டைப் நெஞ்சொத்த நாமிருவர் மணமு டித்து அன்னத்தை நான்காண வேண்டும் என்றேன் ''சொன்னத்தை நான்மறந்து போக வில்லை என்னத்துக் கவள்நம்ப வேண்டும்? அன்னாள் "பொன்னொத்த பேழைக்கு முயல்கின் றாளா? "ஒருதுறவி வேலனுக்கே ஆன மட்டும் தருவதாய் உரைக்கின்றான். பேழைக் காகச் வரும்பேழை என்றுதான் நினைக்கின் றேன்நான் பெரும்பூதம் விட்டதுவும் துறவி வேலை! வட்டிலிட்ட வெற்றிலைக்குச் சீவல் நெய்யால் தட்டிலிட்டுச் செம்பினிலே இன்பால் பெய்து பட்டிலிட்ட மேல்விரிப்பில் பூவ டிப்பைப் கட்டிலிட்ட அறைகாட்டி நீலி தோள்மேல் |
இயல் 69
நரிக்கண்ணன் அஞ்சியோடி அடைந்த ஆனையூர்ப் பள்ளியில் தன் ஆட்களிடமும்,
அமைச்சனிடமும் பேசியிருந்தான்.
அமைச்சனிடமும் பேசியிருந்தான்.
சென்றடைந்த ஆனையூர்ப் பள்ளி தன்னில் "இன்றடைந்த பூதத்தை இதற்கு முன்னே குன்றடைந்த நம்ஆட்கள் கண்டதுண்டோ! "என்றுமிதைக் கண்டறியோம் கேட்டோ மில்லை" "ஆனையூர் தனில்வந்தோம் இவ்வி டத்தில் பானையினைத் தலைகவிழ்த்துச் செய்த தைப்போல் ஏனிதற்கு நாமஞ்ச வேண்டும்?" என்றான். தேனிதழாள் நீலியிடம் பெற்ற நல்ல |
இயல் 70
இங்கு வந்த நீலன் நரிக்கண்ணனை அஞ்சாதிருக்கச் சொல்கின்றான்.
"பூதத்துக் கஞ்சுவதோ வேந்தே? அஃது, ஊதப்ப றக்குமொரு சருகு! வற்றி தோதாக ஒருதுறவி இந்தச் சூழ்ச்சி காதலனும், துறந்தானும் அரண்ம னைக்குள் அரண்மனையில் தேடுகின்றார்! அவ்வி டந்தான் விரைந்தங்கு வாரீரோ" என்றான் நீலன்! பொருந்தும்இது! நடவுங்கள் அரண்ம னைக்குள் இருந்தங்குப் பேழையினை நாமே தேடி "இங்கிருந்தே, எல்லாரும் பூதங் கள்போல் அங்கிருக்கும் ஊர்மக்கள் அஞ்சிப் போவார்; சிங்கம்வரக் கண்டஒரு மானைப் போல எங்கிருக்கும் ஆட்களையும்அழைப்பீர்" என்றான் |
இயல் 71
நீலன் அரண்மனையில் அன்னத்தின் கூட்டத்தைக் கண்டு நரிக்கண்ணன் முதலியவர்கள்
பூதமாக வர இருப்பதைக் கூறினான்.
பூதமாக வர இருப்பதைக் கூறினான்.
அரண்மனையை நோக்கிவந்த நீலன், "நீலி பெருமைபெறும் வேலனார், துறவி யார்க்கும் வருவதையும் அறியீரோ? உயிர்பி ழைப்பீர் அரசன்மகள் உள்ளழைத்தாள், நீலன் சென்றான். "இன்றிரவு பூதங்கள் நூறு வந்தே ஒன்றதிலே நரிப்பூதம்! மற்ற எல்லாம் நன்றிதனை நானறிவேன்! நானோ அந்த என்னுயிர்போன் றாள்;அவளோ தங்கள் தோழி! துறவியார் இவர்தாமோ! வேல னாரும் நிறையஎனக் கன்புண்டு தங்கள் மீதில்! பிறகெல்லாம் பேசலாம்! வருந்தீ மைக்குப் "இறையவரின் அமைச்சருக்கு மகனா ரேநீர் என்றவுடன் துறவியவன் "நீல னாரே சென்றெதிர்ப்போம்! உம்தந்தை அடையா ளத்தைச் என்றுரைத்தான். அதுகேட்ட நீலன், "தந்தை மன்னன் அடையாளமோ தலையில் மாம்பூ பறந்ததுவே லன்குதிரை! அன்னம் ஓர்பால் "பிறந்ததுநம் விடுதலை நாள்! பிறந்த தின்பம்! மறந்ததுவும் உண்டோநம் வாளும் தோளும் அறைந்தார்கள் வெல்முரசம்! தோழர் எல்லாம் கணக்காயர் வந்திட்டார்! தம்பால் நாளும் துணைத்தோழர் வந்திட்டார்! நாட்டின் அன்பு பணிக்காக உயிர்என்று கொதித்து வந்தார்! பிணக்காடு செய்கருவி அனைத்தும் தீட்டிப் |
இயல் 72
அன்னம் வேழ மன்னனைக் கண்டு பேசலுற்றாள்.
வஞ்சியவள் வேழனிடம் சென்றாள், "ஐயா நெஞ்சுறுதி கொண்டவரும் அதைஎ திர்க்க அஞ்சல்எனத் தாங்களுமோர் சொல்லைச் சொல்லி கெஞ்சுபவர் சார்பில்நான் கெஞ்சு கின்றேன் முதலிலொரு சிறுபூதம் வந்த தென்றார்! கதிர்நாடு பட்டதுபஞ் சும்ப டாது இதுபூதம் அதுபூதம் எனந டுங்கி புதுமன்னன் நாடாள வந்தான்; பூதம் அஞ்சவைக்கும் பூதத்தை எதிர்த்துக் கொல்வார் வஞ்சிஎழில் அன்னமே இதுநம் ஆணை! மிஞ்சவிடக் கூடாது பொல்லாங் கெல்லாம் நஞ்சுக்கு மருந்தையா தங்கள் ஆணை இழந்தானோர் ஏழை,பெருஞ் செல்வம் பெற்றான் பழந்தானா என்றான்வே லன்.பழுத்த நுழைந்தாளைத் துறவியவன் கேட்கப் பூதம், முழந்தாளை முறிஎன்றார் மன்னர் என்று |
இயல் 73
இரவில் நூறு பூதம் வருவதாக அன்னத்தின் ஆள் வந்து
அன்னம் முதலியவரிடம் கூறினான்.
சேறுண்டு நடவுண்டென் றிருப்பார் தாமும் வீறுண்டு வாளுண்டென் றிருப்பார் தாமும் சோறுண்டு மனைமக்க ளோடு சென்று நூறுண்டு பூதங்கள் வருவ தைநான் "வாளெடுப்பீர் இடக்கையில் பலகை கொள்வீர்! தோளெடுக்கும் முன்பகையின் உயிரெ டுப்பீர்! தேளெடுத்து வைத்ததென இருக்கும்; வேம்பின் தாளெடுப்பீர் நடப்பீர்கள் வேல னாரே |
இயல் 74
அன்னம் நரிக்கண்ணனை மாய்த்தாள்.
ஞாயிற்றின் ஒளிமுகத்து வேலன், அன்னம் போயிற்றுக் கூட்டமிது!பூதக் கூட்டம் ஆயிற்றா உமைக்காத்துக் கொள்வீர் என்றான் காயிற்று வீழ்வதுபோல் நரிக்கண் ணன்தன் நாற்புறத்தும் வளைத்தார்கள் பகைக் கூட்டத்தை; ஏற்புரைத்து மற்றவரின் உயிரை வாங்கி மாற்றமுறத் தீய்த்துப்பின் பிணத்தை எல்லாம் வீற்றிருந்த துறவியவன் நடந்த எல்லாம் |
இயல் 75
நீலன் தந்தையும் நரிக்கண்ணன் அமைச்சனுமாகிய
ஒருவன் துறவிபால் நடந்தவை கூறினான்.
ஒருவன் துறவிபால் நடந்தவை கூறினான்.
தீப்பட்ட காட்டினிலே வேங்கை யோடு சாப்பாட்டுப் பொன்னப்பன் தானும் செத்தான்; காப்பாற்றும் எனநினைத்தார்! அதனால் மாண்டார்! வேப்பிலைக்கை யுடையயெனைப் புறம்வி டுத்து தேரோடு வீதியிலே கதிர்நாட் டானின் காரோடு நிகர்குழலாள் அரசி தன்னைக் சீரோடு வாழ்ந்திருக்க நினைத்தான்; அந்தத் வேரோடும் தீர்த்திட்டான்! இரங்கு கின்றேன். பூதமெனச் சொல்வதெல்லாம் மனிதர் என்று புகல்வதற்கே பிணத்தையெலாம் வரிசை யாக்கி மீதமுள்ள அமைச்சரையாம் அழைத்து வந்தோம்! ஓதுவதால் வேழநாட் டரசன் எண்ணம் தீதொன்றும் இல்லைஇனித் துயில்வீர் என்று |
இயல் 76
வேலன் நெஞ்சம் அன்னத்தின் மேல்!
சன்னலிலே தென்றல்வந்து குளிர்வி ளைக்கும்! மென்மையுறு பஞ்சணையோ துயில்க என்று கன்னலிலே சாறெடுத்துத் தமிழ்கு ழைத்துக் அன்னத்தின் மேல்வைத்தான் நெஞ்சை வேலன், விண்ணிடையே பன்னூறா யிரம்மீன் கட்கு மண்ணிடையே பெண்ணினத்துக் கொருத்தி அன்றோ? கண்ணிடையே மலர்க்காடா னாளே! உள்ளக் நுண்ணிடையாள் எனக்குத்தா னோஅல் லாது தேனைப்போல் மொழியுடையாள்; அன்ற லர்ந்த மீனைப்போல் விழியுடையாள்; விட்ட திர்ந்த வானைப்போல் உயர்வாழ்வு வாய்ந்தாள்; என்றன் மானைப்போன் றாள்எனக்குத் தானோ அன்றி பயிரடைந்த ஊட்டத்தி னூடு தோன்றும் உயிரடைந்த ஓவியமோ! அச்சில் வார்த்த பெயரடைந்த பெருவாழ்வு வாய்ந்தாள்! என்மேல் உயர்வடைந்தாள் எனக்குதா னோஅல் லாமே திருந்தாதோ முல்லையெனச் சிரிப்பாள்! நன்றே அருந்தாதோ தும்பியென வாய்ம லர்வாள்! வருந்தாதோ எனஆளும் வாழ்வு வாய்ந்தாள்! இருந்தாளே எனக்குத்தா னோஅல் லாமே கொம்பென்றால் அவள்மெய்யைத் தார்வ ருந்தும்! கொடிஎன்றால் அவளிடையை மின்வ ருந்தும்! அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்! செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள் நம்பென்பாள்!" எனக்குத்தா னோஅல் லாது பொன்னிழையால் பூப்போட்ட நீலப் பட்டுப் புன்னைமரம் மலர்குலுங்க நடந்த தென்ன மன்னுமிள வரசிஎனும் வாழ்வு வாய்ந்தாள் அன்னமவள் எனக்குத்தா னோஅல் லாமே ஆடப்போம் புனலிலெலாம் அவளே; காற்றில் தேடப்போம் பொருளிலெலாம் அவளே; நேரில் பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில் வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன் |
இயல் 77
ஊர்ப் பேச்சு.
வடிந்ததுவே கருவண்ண இரவும்! ஆர்ந்து ஒடிந்தது தீயோன்பிடித்த கொடுங்கோல்! வானில் முடிந்ததுபூ தச்சூழ்ச்சி எனம கிழ்ந்தார்! கடிந்துரைத்தார் நரியானைக் கைகள் கொட்டிக் அரசனிது கேள்வியுற்றான், வியந்தான்! சென்றே வரும்இந்த நிலைக்கிரக்கம் கொண்டா னேனும் கருதினான்; பூதமென வந்த தாலே ஒருகூட்டம் உண்டென்றால் அதனை நான்தான் தொல்லைஇனிக் கதிர்நாட்டுக் கில்லை பூதச் "வில்லைநிகர் நுதலுடைய அன்னம், பேழை கல்லையெலாம் மலையையெலாம் கட்டி டங்கள் இல்லைஇது வரைக்குமே அருமைப் பேழை வேழவனோ இவ்வாறு கூறக் கேட்டு பேழையினைக் காண்பதுவும் எந்த நாளோ! ஏழெட்டு நாட்களிலே பேழை கிட்டா மாழையெனும் தங்களரும் மருக ருக்கு |
இயல் 78
வேழமன்னன் "ஏழுநாளில் பேழை அகப்படா விட்டால் கதிர்நாடு
மாழைக்கு முடிசூட்டப் படும்"
என்று பறை அறைவித்தான்.
என்று பறை அறைவித்தான்.
எவரெதனைச் சொன்னாலும் ஆம் ஆம் என்றே தவறொன்றுமில்லைஇதில் ஏழு நாட்கள் நவிலலுற்றான் எவ்விடத்தும் வள்ளு வன்போய்! இவண்ஏழு நாட்களிலே பேழை காணா சிறுகுடிலில் நல்ஆத்தா இருந்தாள்! ஆங்கே இறையவனாம் வேழத்தான் சொன்ன வண்ணம் அறையாயோ ஒருவழியை ஆத்தா என்றே பெறுவாய்நீ என்றாரே அவரைக் காணப் இடைத்துகிலால் கண்துடைத்தே அன்ன மேஎன் நொடிப்போதும் சோர்வின்றிப் பேழை தன்னை துடிக்கும்நரிக் கண்ணனவன் ஒழிந்தான்; நீயே கொடிக்குநிகர் இடையாளே கதிர்நாட் டாட்சி வாயோரம் "உயிர்வாங்கும் சிரிப்பு" மின்னி மாயாத என்நெஞ்சம் சென்று சென்று தீயோரும் என்நிலைமை அறிந்தால், என்றன் பாயோரம் ஆத்தாவின் மடியின் மீது நான்குநாள் ஆயினவே! பேழை தன்னை நான்கேட்க வில்லையே மலர்மு கத்தில் வான்முகிலில் பெருங்கடலின் கீழ்ப்பால் இந்த ஊன்செவியில் நான்கேட்கப் பெற்றால் என்றன் எனத்துடித்தே எழுந்திடுவாள்! வீதி நோக்கி இனித்தேடும் இடம்இல்லை எனமு டித்தும் தனித்தாளும் அரசுபோல் துறவி யங்கே கனிச்சாற்றை நிகர்க்கின்ற தமிழ றிந்த கணக்காயர், "அறிஞரே, துறவி யாரே, தணிக்காத காதலனார் வேலன் கொள்ளத் "துணுக்கமுறு கின்றதுவே என்றன் உள்ளம் பிணக்கங்கள் வஞ்சங்கள் பிறக்கும், தூய ஆயினும்நான் பேழைதனை நாளைக் கீவேன் தூயஅவ் வன்னமும்இக் கதிர்நா டாளத் ஆயவெலம் நான்முடிப்பேன், என்று ரைத்தான். ஆயிழையாள் நீலியவள் பொதுமன் றத்தில் |
இயல் 79
நீலன் நீலி பேச்சு
அன்பாகப் பேசியும்கை தொட்டும், தோளை இன்பாக இரவுகழித் திடலாம் என்றே "முன்பாகச் சொல்லடிநீ பேழை பற்றி "பின்பாகட் டும்சற்றே தமிழும் அன்பும் "மகிழ்ச்சிக்கோர் அடிப்படைதான் பேழைச் செய்தி புகழ்ச்சிக்கே உரியவளாம் அன்னத் திற்குப் இகழ்ச்சிமுடி வடையுமடி! நமது நெஞ்சம் தொகுத்துவைத்த முத்தங்கள்; கொடுக்கல், வாங்கல் நாளைக்குப் பேழைவரும் என்றாள் நீலி! காளைக்கும் மங்கைக்கும் கணக்கா யர்க்கும் பாளைக்கு நிகரானநகைமு கத்தாய் வேளைக்கு விடைகொடுப்பாய் என்று கூறி |
இயல் 80
நீலன் வீடுசென்று, பேழையோடு வருவோனை மறித்துப்
பறிக்கச் சொல்லி ஆட்களை ஏவினான்.
பறிக்கச் சொல்லி ஆட்களை ஏவினான்.
வீடடைந்தான் நீலனவன்! பொழுதோ இன்னும் காடடைந்த விலங்குகள்போல் உலவ லானார் கூடடைந்த கிளிபோலக் குடிசை தன்னில் ஓடிடுங்கள் என்றகுரல் கேட்கும் ஓர்பால்! எவனேனும் பேழையொடு செல்வா னாயின் நவிலுமோர் குரல்! நீண்ட வாள்ம றைத்து சுவரைப்போய்ப் பார்என்பான் ஒருவன்! பேழை அவனைமறி என்றொருவன் கூறக் கேட்டே ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை காலடிஓ சைகாட்டா தொருவன் சென்று வேலடியை ஆள்என்று நெருங்கி முட்கள் மேலெழுந்த நிலவிலும்,இத் தொல்லை யாயின் ஆளொருவன் வரக்கண்டால் ஐந்து பேர்கள் நாளிரவு மெதுவாக நடக்கக் கீழ்ப்பால் வேலையிலே கதிர்நாட்டின் மேற்கி னின்று வாளோடும் வருகின்றான்! அவனைச் சூழ்ந்து |
இயல் 81
வேலன் பேழை தூக்கிக் குதிரைமேல் வர, எதிரிகள்
எதிர்க்க - வேலன் ஆட்களும் கை கலந்தார்கள்.
எதிர்க்க - வேலன் ஆட்களும் கை கலந்தார்கள்.
சீழ்க்கையடித் தேஒருவன், வேலன்! பேழை! வாழ்க்கையிலே வன்பிணிகள் பாய்ந்த தைப்போல் தாழ்க்கையின்றி எதித்தார்வே லன்கூட் டத்தார்! கீழ்க்கடலின் மிசைவந்த பரிதி அங்கே கணக்காயர் மாணவரும், வீரப் பர்க்குக் பிணக்காடு செய்கின்றார்! பகைவர் தாமும் அணைத்தபடி வாள்சுழற்றும்வேலன் தன்னை தணற்காடாய்ச் சூழ்கையிலே பேழை காக்கத் பறந்ததுவே லன்குதிரை தெற்கு நோக்கி! சிறந்தகணக் காயர்நெடும் பரியும் ஆங்கே மறைந்திடுவான் வேலன்ஒரு காட்டில்! மேட்டில் அறிந்துபகை பாயுங்கால் குதிரை தன்னை தன்னருமைப் பேழையொடு குதிரை தன்னைத் பின்தொடரும் பகைவர்சிலர் சோர்ந்து நிற்பார்! இன்னல்தரும் பகைவர்தொகை குறையும் அங்கே! மின்னொளியாள் இன்னுயிர்போல் வாள்அன் னத்தின் |
இயல் 82
துறவியிடம் வேலன் நிலையைச் சொல்லுகிறான் ஒருவன்.
துறவியிடம் வந்தொருவன் வணங்கி நின்று திறல்வேலன் பேழையுடன் திரியா நின்றான்! முறைமையுடன் வேலனிடம் கிடைத்த பேழை துறவிஉளம் கலங்கினான், வேழ வன்பால் அவ்வேழ மன்னவனால் கதிர்நா டெங்கும் எவ்விடத்தும் தீங்கில்லை; நகர்க்காப் பாளர் கவ்விற்று மாலைஇருள்! வேலன் தன்னைக் இவ்வளவில் வேலனையும் கொன்றி ருப்பார் நரிவாழ்வு வேரோடு சாய்ந்த பின்னும் இருப்பவர்தாம் யாரென்று கேட்பார் சில்லோர்! எழிற்பேழை வேண்டும்! அதை வேலன் பெற்றான்; ஒருபொருளிற் பற்றுடையார் அறத்தால் கொள்வார்; குடிசையிலே நல்லாத்தா மயக்கத்தாலே விடிந்ததுவும் தானறியாள்! பரிதி மேற்கில் படிந்ததுத னிக்குடிலில்! விளக்கு மில்லை! உடல்நோகத் தீக்கடைந்தாள்! விளக்கை ஏற்றி |
இயல் 83
ஆத்தாவுடன் படுத்திருந்த அன்னம் விடியலில் காணவில்லை.
சேயிழையாள் துயில்கிடந்த இடத்தில் தோய்ந்த வாயிலிலும் உட்புறத்தும் வௌிப்பு றத்தும் தூயவளே அன்னமே என்று கூவிச் நீயோடி இறந்திட்டாய் எனத்து டித்தாள்! அன்னத்தைச் செங்குருதி சாயக் குத்தி புன்னையடி யிற்புதைத்தார் என்றன் ஆத்தா சொன்னபடி துடித்தழுது புரண்டாள் நீலி! சின்னக்குடி லில்குருதி வெள்ளம் கண்டு |
இயல் 84
அதேநேரம் பேழையோடு வேலன் வந்தான்.
இக்கொடிய காட்சியினை வேலன் கண்டான். பொற்கொடி எங்கே? என்று விரைந்து கேட்டான். அக்கொடியார் சாக்குத்திப் பட்ட புன்னை தைக்கின்ற வேல்நூறும் அம்பு நூறும் ஐயகோ என அலறி என்றன் வாழ்வும் கையாலும் தலைமோதி "கண்ணே உன்றன் பொய்யாத பாண்டியனார் பரிசை, உண்மை வையாயோ என்றாயே வஞ்சி, தூக்கி |
இயல் 85
நரிகள் மண்ணைத்தூற்றும் இடுகாடு; வேலன் அங்குச் சென்றான் அலறி.
எங்குள்ளாய் உடன்வைத்துக் கொள்வாய்" என்றே அங்குள்ள புன்னையினை எண்ணி வேலன் பொங்குதுயர் காணவும்பொ றாத தாகி மங்காமல் விழிக்கும்நரி மண்ணை எற்ற பிணமேடு தனைக்கண்டான்; நெஞ்சி ரண்டாய்ப் தணலேறிச் சுட்டதுபோல் துடித்தான்! காணத் மணல்மீது தான்வைத்தே பேழை தன்னை உணர்வேதும் கலங்கியதோ எனநி னைத்தான். "சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச் குவிக்கின்ற காதலொளி விழிக்கும், கார்போல் உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே அவிந்தனையே திருவிளக்கே! இந்த வையம் படித்ததுண்டு; கேட்டதுண்டு; கண்ட தென்ன? தடித்தஉடல் பெருநெறியிற் சென்ற தில்லை; வடித்தெடுத்த மொழியாளே, மலர்க்கண் காட்டி முடித்தனையே திருவிளக்கே! இந்த வையம் பிறக்கமுடி யாதினிமேல் பெண் ஒருத்தி! மறக்கமுடி யாதஎல்லாம் பேசி, இன்ப சிறக்கஒரு முறையேனும் மூழ்க வில்லை! இறப்பதுவோ திருவிளக்கே! இந்த வையம் மோதல் ஒன்றோ? எதிர்ப்பொன்றோ இப்பே ழைக்கு? ஈதல் ஒன்று மற்றொன்று சாதல் என்றே காதலன்றோ என்வெற்றி! கண்தி றந்து சாதலுண்டோ திருவிளக்கே! இந்த வையம் வெண்ணிலவை எட்டிவிட்டேன் என்றி ருந்தேன்; பண்ணமைந்த தமிழ்ப்பொதிகை எனக்கே என்றேன்; திண்ணெனவே இழந்தேனே, பசியைப் போக்கத் மண்ணடைந்தாய் திருவிளக்கே! இந்த வையம் கடைவிழியில் நிலவுசெயும் உனது சாயல் இடையழகு மின்னலிடை இல்லை யேசெவ் உடையெல்லாம் நீலமணி கடலோ நாணும்! மடிந்தாயோ திருவிளக்கே! இந்த வையம் |
இயல் 86
வேலன் பிணத்தைத் தோண்டி மடியிற் சாத்தினான்.
நிலவு அப்போது முகிலில் மறைந்திருந்தது.
நிலவு அப்போது முகிலில் மறைந்திருந்தது.
புதைத்தாரோ இரக்கமிலார் பொன்னு டம்பைப் பதைத்தானாய்ப் பிணப்புதையல் தோண்டிக் கூட்டைப் ஒதுக்கிமுழு நிலாமுகிலில் புதைந்த தாலே கொதித்துள்ளம், கண்ணேஎன் கண்ணே என்று 'முத்தமடி' கடைசிமுறை! ஒன்றே ஒன்று தொத்துகிளி யே என்று மலர்க்கன் னத்தைத் மொய்த்தமுகில் கிழித்துவௌிப் பட்ட தாலே கொத்தாகக் குழல்கழன்ற நிலையும் கண்டான்! |
இயல் 87
பின்னர் நிலா வௌிப்படவே, பிணத்தின் அழகற்ற
நிலை கண்டான்; எறிந்தான் பிணத்தை! வெறுத்துரைத்தான் பெண்ணுலகை!
நிலை கண்டான்; எறிந்தான் பிணத்தை! வெறுத்துரைத்தான் பெண்ணுலகை!
சீ! என்று பிணமெறிந்து விரைந் தெழுந்து ஏ!இதற்குத் தானா? இவ்வழியு டற்கா? வாயெச்சில் கண்டாலும் அருவ ருக்கும்! ஈயருந்த அழகுதசை எறும்பு மொய்க்க பேன்நாறி வீழ்குழலைத் தேனா றென்றும் மேல்நாறும் சளிமூக்கை எட்பூ என்றும் ஊன்நாறும் ஊத்தைப்பல் வாய்உ தட்டை தோல்நாறும் கன்னம்கண் ணாடி என்றும் உடல்சுமக்கும் உரல்போலும் இடையை, வானின் கொடுங்குள்ள வாத்துநடை அன்ன மென்றும் இடும்பையிலே இடும்குதிகால் சுவடி என்றும் கெடும்படியே சொல்லிவைத்தார் புலவர், நேரில் கண்ணுக்கு மையிட்டும் காதில் மூக்கில் ஒண்ணாத குழலுக்கு மலர்கள் இட்டும் பெண்ணென்று வந்தவளை இட்ட வெல்லாம் மண்ணுக்கு வைத்தசுமை; வாழ்வின் நஞ்சு மாவடுவென் றால்விழியை மரமே நாணும்! காவடிபோ லும்தோளை மூங்கில் என்றால் நாவடுச்சொல் தேனென்றால் வண்டோ ஒப்பும்? சாவடியின் கால்விலங்கு நிகர்க ழுத்தைச் தேன்பாதி கொடுநஞ்சு பாதி என்றும் வான்பாதி படுசூறை பாதி என்றும் ஊன்பாதி பெருநோயும் பாதி என்றும் நான்பாதி நீபாதி என்பர் ஆயின் இருளெல்லாம் பகலாக எண்ணி, நாளும் தெருளில்லா நெஞ்சுடையேன் அலைந்தேன், இன்பம் அருளில்லா வாட்படைக்கும் வேற்ப டைக்கும் பொருளில்லாப் பெண்மையைநான் பொருளா யெண்ணிப் தாய்க்கேனும் தொண்டுசெயார்! அன்பு கொண்ட போய்த்தூய தொண்டுசெயார்! தமிழ்வ ளர்க்கும் ராய்த்திகழத் தொண்டுசெயார்! அடிமை மாற நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார் பெண்ணினத்தைத் தூற்றலுற்றான்; பெண்ணி னத்தைப் கண்ணிழந்தான் போலிருந்தான்; எதையும் அங்குக் உண்ணுவதும் தீர்ந்திட்டான். மெய்வெ றுத்தான்! பண்படுத்த முடியாதோ உலகை என்றான்! |
இயல் 88
பெண்ணுலகை ஏசுகின்ற வேலனின் பின் அன்னம் வந்து நின்று அழைத்தாள்.
முதுவையம்! தீச்செயலால் முடிந்த வையம்! அதுபோதில் பின்புறத்தில் அன்னம் வந்தே இதுவைய மாஎன்றான்! "உள்ளேன்" என்றாள்! புதுவையம்! புதுவையம்! இதுதான் என்றான்; திகழ்வேலன் பாண்டியனார் பரிசு தன்னைச் புகழ்க்குரிய பேழையினைக் கொள்க" என்றான்! மகிழ்ச்சியொடு கீழ்அமைத்தாள்; திறந்தாள்: கண்ணால் முகம்தாழ்த்திக் கால்விரலால் தரையைக் கீறி |
இயல் 89
வேலன் நடந்ததை உரைத்தான்.
"ஆம்"என்றான், அள்ளூற! "இனிமேல் உம்மை அத்தான்என் றழைத்திடுவேன்" என்றாள் அன்னம்! "தூமணியே செய்"என்றான்! "என்னை வந்து தொடுங்கள்அத்தான்" என்றுரைத்தாள்! தீர்ந்த பின்னர் "மாமயிலே இனிமெதுவாய் நடப்பாய்" என்று "தீமையுறு பிணமென்ன? இறந்த தாகச் "தெங்குபெருங் குலைசுமந்த தைப்போல் பேழை செங்கையிலே சுமந்துகுடி சைபு குந்தேன். மங்கைஎழில் அன்னமெங்கே என்று கேட்டேன். செங்குருதி தோய்ந்திருத்தல் கண்டேன். அங்கே செவ்விழியால் நீர்பெருக இருந்தாள் நீலி! இங்குவந்தேன்; சரி, அதுபோ கட்டும் பெண்ணே! இன்பமன்றோ நடைமுத்தம்" என்றான் வேலன். |
இயல் 90
அன்னம், நீலன் வீட்டில் இருந்ததையும் குடிசைக்கு
வந்தபோது ஆத்தா வியப்புற்றுச் சொன்னதையும் சொல்கிறாள்.
வந்தபோது ஆத்தா வியப்புற்றுச் சொன்னதையும் சொல்கிறாள்.
"உம்அன்னை யுடன் துயின்றேன். விடியு முன்னே அம்மருங்கில் தீயவர்கள் எனைஎ திர்த்தார்! செம்மையுற இருஎன்றான்; வௌியிற் சென்றால் இம்மதியின் ஒளியினிலே குடிசை வந்தேன்; நானிறந்து போனேனாம்! புன்னை யண்டை தேனிதழாள் நீலிஇது சொன்னாள்! அந்தச் ஊன்உகுத்த செங்குருதி குடிசை தன்னில் போனதுயிர் எனும்படியே அருமை ஆத்தா |
இயல் 91
வேலன், நீலனுடைய சூழ்ச்சியைக் கூறினான்.
"என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன் இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான் என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான். கன்னலின்சா றென்கின்றார் மெய்யா?" என்றான்; "நானில்லை எனத்தெரிந்தால் நீரு மில்லை. தானிந்த நாட்டினையும், எனையும் பெற்றுத் தேனில்லை எனில்நல்ல வண்டு மில்லை ஏனறிய வில்லை? இருக்கட்டும்; தென்றல் |
இயல் 92
அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.
வேழவனின் படைமறவர் காப்ப ளிக்க வாழ்கஎன வாழ்த்துரைத்த வண்ணம் வந்தார்! பேழையினைக் கண்டார்கள் வேல னோடு தாழுமுழுத் துறவியவன் வந்தான்! ஆத்தா வெற்றியெல்லாம் நீர்அருளிச் செய்தீர் என்று உற்றபெரு வாழ்வனைத்தும் நீவிர் தந்தீர் பெற்றவன்தன் பிள்ளைக்கு நலத்தைச் செய்தான் ஒற்றுநரை முடிநீக்கி வீரப் பன்தன் |
இயல் 93
முடிசூட்டு விழா அறிவிப்பு.
தெருவெல்லாம் மறுநாளே முரச றைந்து பெருநாடெல் லாம்உரைத்தார்; வான்ம றைத்துப் இருள்நாடா திருக்கும்வகை விளக்கும் இட்டார்; வருகாலிற் சிலம்பசைய மாதர் இல்லம் அரசிருக்கைப் பெருங்கூடம் சிறக்க, ஆங்கே முரசெழுப்பக் கருவியெலாம் இசையெ ழுப்ப வரிசையொடு காத்திருக்க வேழ நாட்டு திருமணமும் இது" என்றான்! "கதிர்நாட் டாட்சித் |
இயல் 94
அன்னம் வேலன் மண வாழ்த்து!
தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார்; தமிழி சைக்குத் அமுதமொழி மங்கைமார் மலர்பொ ழிந்தே தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன் கமழ்கின்ற பெருங்கூடம் விட்ட கன்றார் மணித்தவிசில் வீற்றிருந்த பசிய கிள்ளை அணித்தான குளிர்புனலை ஏந்தி முல்லை தணிக்காத காதலொடும் அன்புள் ளானைத் பணிச்சியரால் உளவறிந்தே விரைவில் அன்னம் |
முற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாண்டியன் பரிசு - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - அன்னம், என்றான், என்றாள், வேண்டும், நரிக்கண்ணன், என்றன், என்றும், நோக்கி, கின்றார், எல்லாம், அன்னத், மக்கள், பாண்டியனார், நரிக்கண், கண்டான், மில்லை, சில்லோர், வந்தான், சொல்வான், கேட்டான், டத்தில், பூதத்தை, கணக்காயர், அன்னத்தின், நெஞ்சம், சொன்னான், குதிரை, சென்றாள், தாமும், என்பார், வில்லை, சாகத்தான், சென்று, அன்னமே, திருவிளக்கே, போலும், தொண்டுசெயார், தென்மலையில், லானான், குடிசை, கின்றேன், வாய்ந்தாள், னைக்குள், சென்றான், எனக்கிங், துறவியவன், தன்னில், ஒருவன், கதிர்நாட், வண்ணம், காதில், கூட்டம், டுக்கே, அன்னோன், என்றுரைத்தான், செங்குருதி, உயிர்வண், யாரும், கதிர்நாட்டின், காதலில்லை, என்றார், யார்க்கும், தேனிலைஎன், பின்னர், கொண்டான், கத்தில், பெரும்பூதம், பெண்ணே, கூறினான், நாணும், அன்னத்தை, தேனிதழாள், தன்னைத், கண்ணில், போதில், வன்பால், படைமறவர், ஆட்கள், மென்றும், தைப்போல், பிறந்துள், வந்தார், ருந்தும், மன்னர், விட்டு, வீரப்பன், பேழையினைக், இருக்கும், கொண்டு, எனக்குத்தா, என்பான், சொல்லி, மறத்தல், றிருப்பார், கூடும், முன்னே, ஆத்தாவின், தங்கள், கண்டேன், சொன்னாள், எவ்விடத்தும், கதிர்நா, அரண்மனையில், ருந்தார், வந்திட்டார், பேழையினைப், வாழ்வு, றார்கள், சென்றார், நேரில், வாரீரோ, பூதங்கள், நாட்டு, அப்போது, புன்னை, கதிர்நாடு, செய்தார், இருக்கட்டும், புதுமை, கேட்டு, வீழ்ந்தான், செல்வார், மட்டம், அமைச்சன், என்னிடத்தில், கொண்டார், எனத்து, என்றுரைத்தார், பேழையினைத், யத்தில், லானார், இன்பம், வார்கள், போகும், னின்று, என்னுமொரு, கிடைத்த, குடிசையிலே, வந்தால், சொன்னால், நாட்களிலே, தென்றல், வேண்டுமெனில், தன்னைக், டேயிருக்கும், தூக்கி, பேச்சு, கண்டாள், இருந்தாள், விட்டே, என்னும், ஓர்பால், என்றுரைத்தாள், யில்லை, பேழையினை, வார்போல், விரைவில், நீலியவள், ருந்தான், துண்டோ, நீவிர், நின்று