உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவைந்தெழுத்து திருக்கூத்து
நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்து அஞ்சு எழுத்தால் உற்று உருவாய் நின்று ஆடல் உள்ளபடி - பெற்றிடநான் விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே! தண்ணார் அருளாலே சாற்று. | 31 |
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக் கேள் - சிட்டன் சிவாயநம எனும் திரு எழுத்து அஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான். | 32 |
ஆடும்படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே நாடும் திருவடியிலே நகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகரும்முகம் வாமுடியப் பார். | 33 |
சேர்க்கும் துடி சிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரம் அதுதான். | 34 |
ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது பெற்றார் பிறப்பு அற்றார் பின். | 35 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், விளக்கம், உண்மை, சாத்திரங்கள், சித்தாந்த, மகரம், நகரம், அற்றார், அம்பலத்தான், சிகரம், நின்று, இலக்கியங்கள், உற்று, ஆடல், கேள்