உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிவ தத்துவம்
வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம் சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் - நித்தமாம் சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல் சத்திசிவம் காண் அவைகள் தாம். | 21 |
சுத்தவித்தை ஞானம்மிகும் தொன்மையாம் ஈசுரம்தான் அத்தன் தொழில் அதிகம் ஆக்கிடும் - ஒத்த இவை சாதாக்கியம் என்றும் சத்தி சிவம் கிரியை ஆதார ஞான உரு ஆம். | 22 |
ஆணவம், கன்மம்
ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக மாறா மலம் இரண்டும் வாசொல்லக் - கூறில் அறியாமை ஆணவம் நீ ஆன சுகம் துக்கம் குறியா வினை என்று கொள். | 23 |
ஆன்ம ரூபம்
ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும் மாறா அருளால் வகுத்துரைத்தீர் - வேறு ஆகா என்னை எனக்கு அறியக் காட்டீர் இவை கண்டேன் உன்னரிய தேசிகரே! உற்று | 24 |
நன்றா உரைக்கக்கேள் நல்ல சித்தின் முன் அசித்து இங்கு ஒன்றாது சித்து அசித்தை ஓராது - நின்று இவற்றை அன்றே பகுத்து அறிவது ஆன்மாவே என்றுமறை குன்றாமல் ஓதும் குறித்து. | 25 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், உண்மை, சாத்திரங்கள், சித்தாந்த, விளக்கம், தத்துவமும், மாறா, ஆறாறு, இலக்கியங்கள், தத்துவங்கள், சுத்தவித்தை, ஆணவம்