உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அத்துவித முத்தி
முத்திதனை அடைந்தோர் முந்துபழம் போது அங்கி வித்தகமாம் வீணை இவையிற்றின் - ஒத்த இரதம்மணம் வெம்மை எழில்நாதம் போல விரவுவர் என்று ஓதும் விதி. | 46 |
தத்துவங்கள் எல்லாம் சகசமாக ஆன்மாவில் பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் - முத்திதனில் சித்தமலம் அற்றார் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஓதியிடும் தான். | 47 |
ஆதவன் தன் சன்னிதியில் அம்புலியின் ஆர்சோதி பேதம் அற நிற்கின்ற பெற்றிபோல் - நாதாந்தத்து அண்ணல் துரிவடியில் ஆன்மா அணைந்து இனபக் கண்ணில் அழுந்தியிடும் காண். | 48 |
சென்று இவன் தான் ஒன்றில் சிவபூரணம் சிதையும் அன்றுஅவன் தான் ஒன்றுமெனில் அன்னியமாம் - இன்றுஇரண்டும் அற்ற நிலை ஏதுஎன்னில் ஆதித்தன் அந்தன்விழிக் குற்றம் அற நின்றதுபோல் கொள். | 49 |
வாக்கு மனம் இறந்த வான் கருணையாளன் உருத் தாக்கு அறவே நிற்கும் தனிமுதல்வா! - நீக்காப் பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய் கதியிடத்தும் மூன்றினையும் காட்டு. | 50 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை விளக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், தான், விளக்கம், உண்மை, சாத்திரங்கள், சித்தாந்த, பெற்றிபோல், நிற்கின்ற, இலக்கியங்கள்