திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
முத்தி * முதலுக்கே மோகக் கொடிபடர்ந் தத்தி பழுத்ததென் றுந்தீபற அப்பழ முண்ணாதே யுந்தீபற. | 41 |
* முதற் கொடிக்கே |
அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற குறைவற்ற செல்வமென் றுந்தீபற. | 42 |
காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற வறட்டுப் பசுக்களென் றுந்தீபற. | 43 |
சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர வந்தவர் வாழ்கவென் றுந்தீபற மடவா ளுடனேயென் றுந்தீபற. | 44 |
வைய முழுது மலக்கயங் கண்டிடும் உய்யவந் தானுரை யுந்தீபற உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற. | 45 |
திருவுந்தியார் முற்றும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, திருவுந்தியார், நூல்கள், சித்தாந்த, சாத்திரங்கள், யுந்தீபற, இலக்கியங்கள்