திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே மொள்ளா வமுதாமென் றுந்தீபற முளையாது பந்தமென் றுந்தீபற. | 26 |
அவிழ விருக்கு மறிவுட னின்றவர்க் கவிழுமிவ் வல்லலென் றுந்தீபற. அன்றி யவிழாதென் றுந்தீபற. | 27 |
வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர் பித்தேறி னார்களென் றுந்தீபற பெறுவதங் கென்பெணே யுந்தீபற. | 28 |
சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம் எல்லை சிவனுக்கென் றுந்தீபற என்றானா மென் * சொல்கோ முந்தீபற. | 29 |
* செய்கோ |
வீட்டி லிருக்கிலென் னாட்டிலே போகிலென் கூட்டில்வாட் * சாத்திநின் றுந்தீபற கூடப்ப டாததென் றுந்தீபற. | 30 |
* சார்த்தியென் |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவுந்தியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், றுந்தீபற, நூல்கள், சாத்திரங்கள், திருவுந்தியார், சித்தாந்த, இலக்கியங்கள்