முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - பரபக்கம்
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஆமையாய் மேருத் தாங்கி அடைகலாய்க் கிடந்த போது நாமெனா உலகா தார நாதனென் றகந்தை பண்ண ஆமெனா ரன்று மென்னார் அமரரு மானார் பார்த்துத் தாமநாள் ஆமையாரைத் தகர்த்தோடு தரித்தா ரன்றே. |
281 |
எழுதலம் இடந்து பன்றி யாய்இருங் கொம்பி லேற்றுத் தொழுதுல கிறைஞ்ச நின்ற சோதிநா னென்ற போதன்(று) அழுதல மந்து வீழ அருங்கோடு பறித்த தணிந்தான் கழுதல மந்த காட்டில் ஆடிடுங் கடவு ளன்றே. |
282 |
இங்கடா வுளனோ மாலென் றிரணியன் தூணை எற்ற உங்கடா மோத ரன்றான் உரநர சிங்க மாகி எங்கடா போவ தென்னா உடல்பிளந் திறையா னென்ன அங்கடா சிம்பு ளாகி யெடுத்தடர்த் தான் அரன்றான். |
283 |
தானமென் றிரந்து செல்லத் தனக்குமூ வடிகொடுப்ப வானமும் அளந்து கொண்டு மாபலி தன்னைப் பின்னை ஈனமாஞ் சிறையி லிட்டான் இறையன்றொன் றீந்தோன் தங்கட்(கு) ஊனஞ்செய் திடுவோர் தாங்கள் உத்தம ரல்ல ராகும். |
284 |
மாயமான் தன்னைப் பொய்ம்மா னெனஅறி யாத ரக்கன் மாயையி லகப்பட் டுத்தன் மலைவியைக் கொடுத்தான் தன்னை மாயைக்குத் கர்த்தா வென்பை மதிகெட்டபே கவனைக் கொன்று நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பாவ நணுகி டாதே. |
285 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 59 | 60 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், சித்தியார், தன்னைப், இலக்கியங்கள்