முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - சுபக்கம்
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சுபக்கம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் வணக்கம்
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே திருகோட்டும் அயன்திருமால் செல்வமுமொன் |
1 |
பாயிரம்
அறுவகை சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாம் குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்(கு) அறிவினில் அருளால் மன்னி அம்மையோ டப்ப னாகிச் செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம். |
2 |
என்னைஇப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும் மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல் சென்னியிற் கொண்டு சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றாம். |
3 |
பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர் கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன் புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம். |
4 |
மறையினான் அயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றும் குறைவிலா அளவி னானுங் கூறொனா தாதி நின்ற இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்து மன்றே. |
5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், நின்ற, இலக்கியங்கள்