முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » சிவஞான சித்தியார் - பரபக்கம்
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பாஞ்சராத்திரி மத மறுதலை
ஆதிதா னாகில் ஆதிக்(கு) அந்தமுண் டாகும் அந்தக் கோதிலான் இறைவ னென்று கூறிடும் வேதம் ஞானச் சோதியாய் நின்றா னாகில் தோய்ந்திடான் மாயை ஞானத் தீதிலா உருவ மென்னில் சேர்ந்திடான் தாதுச் சென்றே. |
271 |
தாதுவா னதுஏ தென்னில் சங்கரன் பலிக்குச் செல்லத் தீதிலாக் கோதண் டத்தைத் திறந்தவன் விட்ட போது போதுவ துதிர மன்றோ போந்துமூர்ச் சித்து வீழ்ந்தான் நாதனார் எழுப்பப் பின்னே நடந்தனன் கிடந்த வன்றான். |
272 |
இச்சையால் உருவங் கொள்வன் அரியெனில் இகழ்வேள் விக்கண் எச்சனாய் உண்ணப் புக்கங் கிருந்தஅன் றீச னாலே அச்சமார் தலைய றுப்புண் டான்தலை யாக்கிக் கொள்ளான் நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொ டுத்தான். |
273 |
நூலினை உரைத்த வேத நூலினை நுவலும் வண்ணம் மால்அருள் செய்தா னென்றாய் மறைநீதி உலகி யற்கை சாலவே தெரியாக தாகிக் கிடந்தநாள் சகத்து யார்க்கும் ஆலின்கீ ழிருந்து வேதம் அருளினான் அறைந்தான் நூலே. |
274 |
அயன்றனைப் பயந்தா னென்றாய் அரிஅயன் சிரஞ்சே திப்பப் பயந்திடான் தலைமால் தானும் படைத்திடான் சிரத்தைக் கிள்ளும் சயந்தரும் அரனைத் தந்தான் அயனென்கை தப்பே யன்றோ தியங்கிடா துணராய் எல்லாஞ் சிவன்செய லென்று தேர்ந்தே. |
275 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 59 | 60 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், நூலினை, னென்றாய், னாகில், இலக்கியங்கள், வேதம்