முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - தத்துவமும்..... மகத்துவமும்.......
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - தத்துவமும்..... மகத்துவமும்.......
நான் பச்சைமண் சிலை செய்வாயோ? இல்லை-இது சேறென்று எடுத்தெறிவாயோ? என்னைக் குருடனாக்கு, செவிடனாக்கு தயவுசெய்து உன்னால்-நான் சீராகும் வேளையில் சிதறடித்துவிட்டாயே....... என்னை நீ என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் நீயே எனக்கு தத்துவம் என் வாழ்வின் மகத்துவம்.... வி‘ஷமும்..... தீர்த்தமாகும்..... பாவை இதழில் கோவை பழுத்தது பார்க்க நினைத்தேன் விஷத்தைத் தெளித்தது தெளித்த விஷம் தீர்த்தமானது அள்ளிக்குடித்தேன்-என் ஆயுள் கூடுது...... எனக்கென்று நீ எதையும் இழக்கவேண்டாம் உன் தாலிக்கு என்னை கயிறாக்கு மஞ்சள் பூசும்போதாவது தொடுவாயல்லவா...? நீ இறக்கின்ற நாளை எனக்குமட்டும் எபதிக்கொடு நான் இறக்கும் நாளை எமனுக்கு எழுதவேண்டும்.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - தத்துவமும்..... மகத்துவமும்....... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான்