முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - நெஞ்சத்தில் நெருப்பாய்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - நெஞ்சத்தில் நெருப்பாய்....
ஓர் நாள் எழுதப்ட்ட கடிதம் எறியப்பட்டது வடிக்கப்பட்ட கவிதை வதைக்கப்பட்து மனதுகுள் செதுக்கப்பட்ட சிற்பம் சிதைக்கப்பட்டது அப்டியென்றால் முந்தைய ஆண்டுகளில் நான் முழ்கி இருந்தது, இல்லை.....இல்லை.... முழ்கி இறந்தது அவள் இதயத்திலா? இல்லை இதழ் சிரிப்பிலா? என் இதய தூசுகளை ஒட்டடை அடிக்கத்தான் அவளை நேசித்தேன், நேசித்தவள் நெஞ்சத்தில் நெருப்பானாள். நெருப்பென்னை சுடவில்லை அவள் நேச விழிகள்தான் என்னை..... சுடும்போது வலிக்கவிலை சுட்ட வடுக்ளை சுமகும்போதுதான்...... உனை விட்டிலாய் சுற்றிவந்தேன் நீ விளக்காய் சுட்டுவிட்டாய் என்னை ஏமாற்றியவள்மீது எனக்கு கோபமில்லை ஏமர்ந்து போன என்மீது மட்டுமே.... தொலைந்துபோன என் முகவரியை தோண்டியெடுத்து தூய்மைப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம் அதற்காக, எத்தனைச் சுமைகளையம் சுமக்க என் முதுகை தட்டிக்கொடுத்து தயார் செய்துவிட்டேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - நெஞ்சத்தில் நெருப்பாய்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - இல்லை