முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - பாதச்சுவடுகள்.....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - பாதச்சுவடுகள்.....
இனியவளே கோபித்துக்கொள்ளாதே உன் கோவிலோரம் ஒரு குப்பைத்தொட்டியாய் இருந்துவிட்டுப்போகிறேன்...... நீ எடுத்தெறியும் எந்தகுப்பையையும் என் இதயம் ஏற்றுக்கொள்ளும் ஏனென்றால் நானும்-உன்னால் எறியப்பட்டவனல்லவா? உன் பாதங்களைத் தேடி...த்...தேடி.... தேகமிளைத்துவிட்டேன் மீதமிளைக்குமுன் உன் பாதசுவடுகளையாவது பார்க்கமுடியுமா? உலகம் நீயென்றேன் என் திலகம் நீயென்றாய்..... பின்-உன் ஆசை அடுப்பில் வார்த்தை நெருப்பிட்டு என் உயிரை சுட்டுத்தின்றுவிட்டு உப்புகர்ரிக்கிறதென்கிறாய்...... கண்ணே சிரித்துவாழவில்லையாயினும் செத்துப்போகவில்லை நான்.... நீ தின்ற உயிரை திருப்பித்தந்துவிடு இல்லையெனில் நடைபிணமாக இருக்கும் நான் நடவாப்பிணமாகிவிடுவேன்..... நான் உயிர்போக மண்ணல் மடிவேன் உன் நினைவுகள் என்னை எழுப்பிவிடும்...... அந்த உன் நினைவுகளில் நானுமிருக்கிறேன் இந்த நீ-யில் நானில்லை.... இனி நான் வாழ்வது கடினம்தான் ஏனெனில் என்னை நீ பலமுறை சாகடித்துவிட்டாய்.... நீ உயிரோடிருக்கிறாய் என்பதை நான் உயிர்போயினும் உணாவேன் இஃதுண்மையிலுமுன்மை.... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - பாதச்சுவடுகள்..... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான்