முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.019.திருநின்றியூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.019.திருநின்றியூர்
7.019.திருநின்றியூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர்.
தேவியார் - உலகநாயகியம்மை.
188 |
அற்றவ னாரடி யார்தமக் பற்றவ னாரெம் பராபரர் என்று கொற்றவ னார்குறு காதவர் செற்றவ னார்க்கிட மாவது |
7.019.1 |
பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும், பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடையவரும், 'எம் இறைவர்' என்று பலராலும் விரும்பப்படுகின்ற தலைவரும், பகைவருடைய ஊரினை, பெரிய, கொடிய அம்பினால் அழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே.
189 |
வாசத்தி னார்மலர்க் கொன்றையுள் பூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம் நேசத்தி னால்என்னை ஆளுங்கொண் தேசத்தி னார்க்கிட மாவது |
7.019.2 |
மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும், அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும், சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும், அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும், நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.
190 |
அங்கையின் மூவிலை வேலர் சங்கையை நீங்க அருளித் மங்கையொர் பாகர் மகிழ்ந்த செங்கயல் பாயும் வயல்பொலி |
7.019.3 |
அகங் கையில் மூவிலை வேலை (சூலத்தை) உடையவரும், தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க, அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து, பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர், உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம், வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே.
191 |
ஆறுகந் தார்அங்கம் நான்மறை ஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக் வேறுகந் தார்விரி நூலுகந் நீறுகந் தார்உறை யும்மிட |
7.019.4 |
வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், நான்கு வேதங்களையும் உடையவரும், எவ்விடத்தும் நிறைந்து நின்று, வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், கங்காதேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும், அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்ற வரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே.
192 |
வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில் அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி தஞ்சங்கொண்டார்தமக் கென்றும் நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது |
7.019.5 |
வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராதவரும், 'நறுநெய், தயிர், பால்' முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும், திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்டவரும், தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.
193 |
ஆர்த்தவர் ஆடர வம்மரை போர்த்தவர் ஆனையின் தோலுடல் பார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம் சேர்த்தவ ருக்குறை யும்மிட |
7.019.6 |
அரையில் புலியினது பசுந்தோலையும், ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும், உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும், அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும், பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரம தேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றியூரேயாகும்.
194 |
தலையிடை யார்பலி சென்றகந் தோறுந் மலையுடை யாள்ஒரு பாகம்வைத் அலையுடை யார்சடை எட்டுஞ் நிலையுடை யார்உறை யும்மிட |
7.019.7 |
தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடையசெல்வரும், மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்தவரும், மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம்.
195 |
எட்டுகந் தார்திசை யேழுகந் இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும் பட்டுகும் பாரிடைக் காலனைக் சிட்டுகந் தார்க்கிட மாவது |
7.019.8 |
திசைகள் எட்டினையும், ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும், மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழி பாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு, பிச்சையேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்புகின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.
196 |
காலமும் ஞாயிறு மாகிநின் சீலமுஞ் செய்கையுங் கண்டுகப் மாலொடு நான்முகன் இந்திரன் நீலநஞ் சுண்டவ ருக்கிட |
7.019.9 |
காலமும், அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும், தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும், செயல்களையும் கண்டு அவர்களை விரும்புகின்றவரும், நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு, அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் 'திருமால், பிரமன், இந்திரன்' முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும், திருநின்றியூரே இடமாய் நிற்கும்.
197 |
வாயார் மனத்தால் நினைக்கு தூயார் சுடுபொடி ஆடிய மேனியர் மேயார் விடையுகந் தேறிய சேயார் அடியார்க் கணியவர் |
7.019.10 |
வாயார வாழ்த்தி, மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும், அரியதவக் கோலத்தை உடைய தூயவரும், வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும், இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும், தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே.
198 |
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை சீருஞ் சிவகதி யாய்இருந ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல் பாரும் விசும்புந் தொழப்பர |
7.019.11 |
திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய, பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், வினை நீங்கப் பெற்று, மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் வணங்கும் படி, சிவபெருமானது திருவடியை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநின்றியூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நின்றியூரே, திருநின்றியூரே, உடையவரும், இடமாய், நிற்பது, நிறைந்த, எழுந்தருளியிருக்கின்ற, மாந்திரு, கொண்டவரும், இறைவருக்கு, இறைவர், நந்திரு, விரும்பி, யும்மிட, நிறைந்து, இந்திரன், மனத்தால், என்றும், இறைவர்க்கு, காலமும், கொண்டு, னார்க்கிட, திருச்சிற்றம்பலம், திருமுறை, இருப்பவரும், திருநின்றியூர், கையில், மூவிலை, நஞ்சினை