முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.017.திருநாவலூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.017.திருநாவலூர்
7.017.திருநாவலூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நாவலீசுவரர்.
தேவியார் - சுந்தராம்பிகை.
167 |
கோவலன் நான்முகன் வானவர் மேவலர் முப்புரம் தீயெழு ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் நாவல னார்க்கிடம் ஆவது |
7.017.1 |
ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும், அதனால், 'அம்பு எய்தலில் வல்லவர்' எனப் புகழத்தக்கவராயினாரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு, 'திருமால், பிரமன், இந்திரன்' என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரே யாகும்.
168 |
தன்மையி னால்அடி யேனைத்தாம் வன்மைகள் பேசிட வன்றொண்டன் புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் நன்மையி னார்க்கிடம் ஆவது |
7.017.2 |
தமக்கு இயல்பாக உள்ள 'பேரருளுடைமை' என்னுங் குணத்தினால், என் பிழையைத் திருவுளங்கொள்ளாது, அடிமை என்பது ஒன்றையே கருதி, என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந்நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு, 'வன்றொண்டன்' என்பதொரு பதவியைத் தந்தவரும், பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து, எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
169 |
வேகங்கொண் டோடிய வெள்விடை ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் போகங்கொண் டார்கடற் கோடியின் நாகங்கொண் டார்க்கிடம் ஆவது |
7.017.3 |
விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும், மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்டவரும், தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும், பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
170 |
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத் நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது |
7.017.4 |
ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும், ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும், தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு, என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும், நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
171 |
உம்பரார் கோனைத்திண் தோள்முரித் செம்பொனார் தீவண்ணர் தூவண்ண எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் நம்பிரா னார்க்கிடம் ஆவது |
7.017.5 |
தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும், யானையை உரித்தவரும், சிவந்த பொன்போல்வதும், நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும், வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
172 |
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது |
7.017.6 |
திருக்குடமூக்கில் (கும்பகோணம்) திருக்கோவலூர், திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்டவரும், வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடனமாடுதலை மேற்கொண்டவரும், சூரியனை ('பகன்' என்பவனை)க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திருநாவலூரேயாகும்.
173 |
தாயவ ளாய்த்தந்தை ஆகிச் போயக லாமைத்தன் பொன்னடிக் வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் நாயக னார்க்கிடம் ஆவது |
7.017.7 |
எனக்குத் தாயாகியும், தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன்போலும் திருவடிக்கண் அகலாதபடி இருக்க வைத்த, மூங்கில் இடத்தவரும், என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
174 |
வாயாடி மாமறை ஓதிஓர் தீயாடி யார்சினக் கேழலின் வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் நாயாடி யார்க்கிடம் ஆவது |
7.017.8 |
தீயின்கண் நின்று ஆடுபவரும், சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்தவரும், பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
175 |
படமாடு பாம்பணை யானுக்கும் வடமாடு மால்விடை ஏற்றுக்கும் இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் நடமாடி யார்க்கிடம் ஆவது |
7.017.9 |
படமாடுகின்ற, பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும், பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும், மணிவடம் அசைகின்ற ஆனேற்றுக்கும், 'பாகன்' எனப்படும் தன்மையுடையவராய், ஒருநாள் என்னிடம் வந்து, தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட, நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது, நமது திருநாவலூரேயாகும்.
176 |
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் தடுக்கஒண் ணாததோர் வேழத் நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது |
7.017.10 |
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து, உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.
177 |
நாதனுக் கூர்நமக் கூர்நர ஆதரித் தீசனுக் காட்செயும் றோதநற் றக்கவன் றொண்டன்ஆ காதலித் துங்கற்றுங் கேட்பவர் |
7.017.11 |
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும், நமக்கு உரிய ஊரும், நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு, விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு, நல்ல தகுதியை உடையவனும், 'வன்றொண்டன்' என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாவலூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நல்லூரில், நந்திரு, நாவலூரே, திருநாவலூரேயாகும், என்னைத், நிறுத்தி, கொண்டவரும், வைத்தெனை, அடிமையும், கொண்டு, இருப்பது, கொண்டுபோய், இடமாயிருப்பது, இடமாய், ஆளுங்கொண்ட, இறைவர்க்கு, திருவெண்ணெய்நல்லூரில், னார்க்கிடம், இறைவருக்கு, டார்க்கிடம், னார்வெண்ணெய், தலைவரும், பொருளாகக், ஆளுங்கொண்டார், டார்வெண்ணெய், வன்றொண்டன், திருவெண்ணெய், இறைவற்கு, பொருந்திய, யார்க்கிடம், மேற்கொண்டவரும், யார்வெண்ணெய், சென்று, உடையவரும், திருச்சிற்றம்பலம், திருமுறை, என்னும், திருநாவலூரே, வெள்ளிய, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூரிற்