முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.073.திருப்பிரமபுரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.073.திருப்பிரமபுரம்
2.073.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2256 | விளங்கியசீர்ப்
பிரமனூர் வேணுபுரம் வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் |
2.073. 1 |
இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப் பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2257 | திருவளருங்
கழுமலமே கொச்சை தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் |
2.073. 2 |
பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.
2258 | வாய்ந்தபுகழ்
மறைவளருந் தோணிபுரம் ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ |
2.073.3 |
சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2259 | மாமலையாள்
கணவன்மகிழ் வெங்குருமாப் சேமமதில் புடைதிகழுங் கழுமலமே பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் |
2.073.4 |
பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2260 | தரைத்தேவர்
பணிசண்பை தமிழ்க்காழி விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர் திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச் உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ |
2.073.5 |
உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.
2261 | புண்டரிகத்
தார்வயல்சூழ் புறவமிகு எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற் அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை |
2.073. 6 |
வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2262 | வண்மைவளர்
வரத்தயனூர் வானவர்தங் வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் |
2.073. 7 |
வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2263 | மோடிபுறங்
காக்குமூர் புறவஞ்சீர்ச் நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள் |
2.073.8 |
போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2264 | இரக்கமுடை
யிறையவனூர் தோணிபுரம் நிரக்கவரு புனற்புறவ நின்றதவத் வரக்கரவாப் புகலிவெங் குருமாசி அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் |
2.073.9 |
அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவு படாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2265 | மேலோதுங்
கழுமலமெய்த் தவம்வளருங் நூலோது மயன்றனூர் நுண்ணறிவார் சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் மாலோடு மயனறியான் வண்காழி |
2.073.10 |
உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப் பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2266 | ஆக்கமர்சீ
ரூர்சண்பை காழியமர் ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் சாக்கியரோ டமண்கையர் தாமறியா |
2.073.11 |
சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
2267 | அக்கரஞ்சேர்
தருமனூர் புகலிதராய் புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன |
2.073.12 |
புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முதலான, பன்னிரு, சீகாழிப், பதியாகும், தோணிபுரம், பூந்தராய், பெயர்களைப், சிலம்பனூர், குருப்புகலி, சிவபிரான், புகலிவெங், கழுமலமே, சிவபிரானது, புறவஞ்சீர்ச், பெறும், புகலிதராய், திருப்பெயர்களைப், காழிசண்பை, காழிகொச்சை, தோணிபுரஞ்சீர், எழுந்தருளிய, திருமுறை, புறவம், விரும்பும், பிரமனூர், வேணுபுரம், பெயர்களை, கொச்சைகழு, திருச்சிற்றம்பலம், திருப்பிரமபுரம், பன்னிருபெயர்களைப், கழுமலம், தோணிபுர, சீகாழிப்பதியாகும்