முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.074.திருப்பிரமபுரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.074.திருப்பிரமபுரம்
2.074.திருப்பிரமபுரம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
2268 | பூமகனூர்
புத்தேளுக் கிறைவனூர் மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் |
2.074. 1 |
நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும்.
2269 | கருத்துடைய
மறையவர்சேர் கழுமலமெய்த் உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை |
2.074. 2 |
சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும்.
2270 | ஊர்மதியைக்
கதுவவுயர் மதிற்சண்பை கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் |
2.074. 3 |
கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2271 | தரித்தமறை
யாளர்மிகு வெங்குருச்சீர்த் எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ |
2.074. 4 |
உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.
2272 | விளங்கயனூர்
பூந்தராய் மிகுசண்பை இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா |
2.074. 5 |
காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2273 | காய்ந்துவரு
காலனையன் றுதைத்தவனூர் ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் |
2.074. 6 |
முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது 130. ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.
2274 | திகழ்மாட
மலிசண்பை பூந்தராய் மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் |
2.074. 7 |
கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2275 | நின்றமதில்
சூழ்தருவெங் குருத்தோணி ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் வென்றிமலி பிரமபுரம் பூதங்க |
2.074. 8 |
பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2276 | மிக்ககம
லத்தயனூர் விளங்குபுற தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ |
2.074. 9 |
வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.
2277 | எம்மான்சேர்
வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் கைம்மாவை யுரிசெய்தோன் காழியய மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் |
2.074. 10 |
மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2278 | இறைவனமர்
சண்பையெழிற் புறவமய குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் |
2.074. 11 |
ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
2279 |
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் தம்மானொன் றியஞான சம்பந்தன் |
2.074. 12 |
அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பிரமபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பன்னிரு, சீகாழிப், பதியாகும், முதலான, முதலிய, பெயர்களை, பூந்தராய், சிவபிரான், பெயர்களைக், விளங்கும், சிவபிரானது, பிரமபுரம், கழுமலம், காழிகொச்சை, சிரபுரம்பூந், சீகாழிப்பதியாகும், திருமுறை, வேணுபுர, குருத்தோணி, எழுந்தருளிய, இறைவனமர், உறையும், தேவர்கோனூர், வெங்குரு, சிரபுரம்வெங், தராய்புகலி, புகலிவெங், புறவமய, கழுமலமெய்த், தோணிபுரங், தரித்த, திருப்பிரமபுரம், உலகில், குருப்புகலி, தோணிபுரந், றோணிபுரம், திருச்சிற்றம்பலம்