முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.071.திருக்குறும்பலா
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.071.திருக்குறும்பலா
2.071.திருக்குறும்பலா
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே திருக்குற்றாலம்.
சுவாமிபெயர் - குறும்பலாநாதர்.
தேவியார் - குழன்மொழியம்மை.
2234 | திருந்த
மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் |
2.071. 1 |
பிறைமதியை அழகுறப் புனைந்து, கங்கையைச் சடையில் கரந்து உமாதேவியை இடப்பாகமாக கொண்டு, பொருந்தாத வேடத்தோடு இடுகாட்டில் உறைதலை விரும்பிய செல்வர் எழுந்தருளியுள்ள இடம் யாதென வினவில், ஏல மணம் கமழ்வதும், சோலைகளில் வண்டுகள் யாழிசை போல ஒலிக்கக் குருந்தமரம் மணம் வீசும், குன்றுகள் அருகே சூழ்ந்துள்ளதுமான குளிர்ந்த சாரலை உடைய குறும்பலாவாகும்.
2235 | நாட்பலவுஞ்
சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும் கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் |
2.071.2 |
பதினாறுகலைகளும் வளர்தற்குரிய பிறைமதியை முடியில் சூடித் திருநீற்றுப் பொடியணிந்த நம்மேல் விருப்புடைய இறைவன், நம்பால் வந்து நம்மை அடிமையாகக் கொண்டருளும் அம்மான். அவனது இடம், அழகிய குளிர்ந்த மலைச் சாரலில் கீளத்தக்க பலவின் கனிகளை மந்திகள் கீறித்தம் கிளைகள் பலவற்றோடு உண்டு வீழ்த்திய சுவையான பலவின் இனிய சுளைகளை ஆண்குரங்குகள் உண்டு மகிழும் குறும்பலாவாகும்.
2236 | வாடற்
றலைமாலை சூடிப் புலித்தோல் ஆடலரவசைத்த வம்மா னிடம்போலும் பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் |
2.071. 3 |
ஊன் வாடிய தலைமாலையைச் சூடிப் புலித்தோலை உடுத்து ஆடும் பாம்பை அறையில் கட்டிய அம்மானது இடம், அழகிய குளிர்ந்த சாரலில் பாடும் பெண்வண்டுகள் அரும்புகளைப் போதாக அலர்த்த மகரந்தப் பொடிகள் பசும்பொன் போல உதிரக் காந்தள் மலர்ந்து மணம் பரப்பும் குன்றுகள் சூழ்ந்த குறும்பலாவாகும்.
2237 | பால்வெண்
மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும் கோல மடமஞ்ஞை பேடையொ டாட்டயருங் |
2.071. 4 |
பால் போன்ற வெண்மையான மதியை முடியிற் சூடி, ஒருபாகத்தே உமையம்மையைக் கூடிநின்று ஆடிப்பாடி, மார்க்கண்டேயர் பொருட்டுக்காலனின் உடல் கிழியும் படி அவனைச் சினந்த பெருமானது இடம், கற்கள் சூழ்ந்த வெற்பிலுள்ள சுனைகளில் கருங்குவளைகள் கண் போல மலரவும், வண்டுகள் இசைபாடவும் நெடிய குளிர்ந்த சாரலில் அழகிய மயில்கள் பெண் மயில்களோடு ஆடி மகிழும் குறும்பலாவாகும்.
2238 | தலைவாண்
மதியங் கதிர்விரியத் தண்புனலைத் முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியும் குலைவாழைத் தீங்கனியு மாங்கனியுந் தேன்பிலிற்றுங் |
2.071.5 |
தலையில் ஒளிவிரியும் வெண்மையான பிறையையும் கங்கையையும் தாங்கி, உமாதேவியைக் காதலித்து ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவமூர்த்தியின் இடம், முதிய மூங்கில் சூழ்ந்துள்ள மலையிடத்து நீர்க் கசிவுகள் பேரருவியாகப் பொன் கொழித்து ஒழுகுவதும் பொருந்திய சாரலகத்தே வாழைக்குலையும் மாங்கனிகளும் தேன் பிலிற்றுவதுமான குறும்பலா என்னும் கோயிலாகும்.
2239 | நீற்றே
துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் ஏற்றேன மேன மிவையோ டவைவிரவி கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் |
2.071. 6 |
திருநீற்றைப் பொருந்தி விளங்கும் முப்புரிநூலை அணிந்தவரும் தண்மதியரும் நெற்றிக்கண்ணரும் காலனைக் கடிந்த வரும் ஆகிய சிவபிரானது இடம், குளிர்ந்த மலையின்கண் ஆண்பன்றி, பெண்பன்றியோடு கலந்து கீழிறங்கும் சாரலின்கண் கொம்புத் தேன் சேகரிக்கும் வண்டுகள் இசைபாட அதனைக் கேட்டுக் குயில் கூவும் குறும்பலாவாகும்.
2240 | பொன்றொத்த
கொன்றையும் பிள்ளை மதியும் பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து குன்றத் தருவி யயலே புனறதும்புங் |
2.071. 7 |
பொன் போன்ற கொன்றை மலர்க் கொத்துக்களையும் இளமதியையும் கங்கையையும் சூடி, பின்னே கொத்தாக அமைந்த நீண்ட சடையை உடைய எம்பெருமானது இடம், பிரளய வெள்ளம் போலப் பெருகி மன்றத்தே அடிக்கப்படும் முழவம் போல ஒலித்து, மணி, வயிரம் முதலியவற்றுடன் சொரியும் அருவியின் புனல்ததும்பும் குறும்பலாவாகும்.
2241 | ஏந்து
திணிதிண்டோ ளிராவணனை மால்வரைக்கீழ் சாந்தமென நீறணிந்த சைவ ரிடம்போலுஞ் பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் |
2.071. 8 |
உயர்ந்த திண்ணிய தோள்களை உடைய இராவணனைக் கயிலைமலையின் கீழ் அடர்த்தவரும், சாந்த மெனத் திருநீற்றை விரவப்பூசியவருமாகிய சைவரது இடம், மழைச் சாரலை உடைய மலைச்சாரலில் வேங்கைப்பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தே அழகுற ஏந்திப் பெண் யானையோடு ஆண் யானைகள் சேர்ந்து வணங்கும் குறும்பலாவாகும்.
2242 | அரவி
னணையானு நான்முகனுங் காண்பரிய விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு குரவ முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் |
2.071. 9 |
பாம்பணையானாகிய திருமாலும், நான்முகனும் காணுதற்கு அரியவராக விளங்கிய தலைவரும், முடியில் பொருந்த இளம் பிறையைச் சூடியவரும் ஆகிய விகிர்தருக்கு உரிய இடம். விரிந்த பூக்களை உடைய மலைச்சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம் ஆகியன மலர்ந்து நிற்க அவற்றின் தேனை உண்ணக் குரவமலர்ப் பாவை முறுவல் செய்வது போல மலரும் குன்றினை அடுத்துள்ள குறும்பலாவாகும்.
2243 | மூடிய
சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல் கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் |
2.071. 10 |
உடலைமூடிய சீவரம் என்னும் ஆடையை அணிந்தவர்களும் முன்னால் அறுசுவை உணவுண்டு பின்னால் காடியைக் கூறாக்கி உண்போரும் ஆகிய சமணர்களை வெறுத்த சைவராகிய சிவபிரானது இடம் கற்கள் நிறைந்த மலையகத்தே நீண்ட மூங்கில்கள் வளைந்து நிற்க, அவற்றில் குரங்குகள் நின்றுஆட, வேடர்கள் குய் என்று ஒலிக்குறிப்போடு கூவிக் கை குவிக்கும் குறும்பலாவாகும்.
2244 | கொம்பார்
பூஞ்சோலைக் குறும்பலா மேவிய நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம் இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள் |
2.071. 11 |
பூங்கொம்புகளைக் கொண்ட மலர்ச் சோலைகளைக் கொண்ட குறும்பலாவில் மேவிய கொல்லேற்றுத் தலைவனும், நம்மால் விரும்பப்படுபவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளைப் பரவும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இன்பம் தரும் இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவரும் விரும்பிக்கேட்பவரும் தம்பால் உள்ள தீவினைகள் நீங்கப் பெற்று நல்வினைப் பயன்களைத் தளராது பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குறும்பலா - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குறும்பலாவே, குறும்பலாவாகும், குளிர்ந்த, னிடம்போலும், சாரலில், சூடிப், ரிடம்போலுங், வண்டுகள், குன்றிடஞ்சூழ், தண்சாரற், கற்கள், கல்சூழ்வெற்பில், வெண்மையான, காய்ந்தா, தீவினைகள், என்னும், மலைச்சாரலில், குறும்பலா, சூழ்ந்த, சிவபிரானது, கங்கையையும், முடியில், பிறைமதியை, குன்றுகள், பொருந்தாத, திருச்சிற்றம்பலம், திருமுறை, பொடியணிந்த, அந்தண்சாரல், பசும்பொன், மகிழும், பலவின், திருக்குறும்பலா, மலர்ந்து