முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.053.திருப்புறவார்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.053.திருப்புறவார்
2.053.திருப்புறவார்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர்.
தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.
2037 | விண்ண
மர்ந்தன மும்ம தில்களை பண்ணமர்ந் தொலிசேர் பெண்ண மர்ந்தொரு பாக மாகிய கண்ணமர்ந் தவனே |
2.053. 1 |
வானில் உலவும் வன்மை உடைய முப்புரங்களைக் கொடிய கணையால் எய்து வீழ்த்தினாய். இசைபாடுவோரின் விரிந்த பண்ணிசையொலி சேர்ந்துள்ள புறவார் பனங்காட்டூரில் உமையொருபாகனாக வீற்றிருக்கும் பிஞ்ஞகா! பிறைசேரும் நெற்றியில் கண் பொருந்தியவனே! உன்னை நேசித்தவர்கட்கு அருள்வாயாக.
2038 | நீடல்
கோடல் அலரவெண் முல்லை பாடல் வண்டறையும் தோடி லங்கிய காத யன்மின் ஆடுஞ் சங்கரனே |
2.053. 2 |
நீண்ட காந்தள் மலரவும், வெண்முல்லை நீர்மலர் ஆகியனவற்றிலுள்ள மகரந்தங்களை வரிசையாகச் சென்று உண்ணும் மலர்களின் மகரந்தங்களை அளம் போலக் குவித்து வண்டுகள் இசை பாடும்புறவார் பனங்காட்டூரில், தோடணிந்த காதின் அயலே மின்னொளிதரும் வெண்குழை ஒளிவிட நள்ளிருளில் ஆடும் சங்கரனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2039 | வாளை
யுங்கய லும்மிளிர் பொய்கை பாளை யொண்கமுகம் பூளை யுந்நறுங் கொன்றை யும்மத தாளையே பரவுந் |
2.053. 3 |
வாளையும் கயலும் மிளிரும் பொய்கைகளையும் நீண்ட வயல்களின் நீர்க்கரைகளிலெல்லாம் பாளைகளை உடைய சிறந்த கமுக மரங்களையும் கொண்டுள்ள புறவார் பனங்காட்டூரில், பூளைப்பூ, நறுங்கொன்றை, ஊமத்தம் மலர் ஆகியவற்றை அணிந்து உறைபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.
2040 | மேய்ந்தி
ளஞ்செந்நென் மென்க திர்கவ்வி பாய்ந்த தண்பழனப் ஆய்ந்த நான்மறை பாடி யாடும் சாய்ந்தடி பரவுந் |
2.053.4 |
வைகறைப் போதில் எருமைகள் இளஞ்செந்நெல் மென் கதிர்களை மேய்ந்து வயிறுநிறைதலால் தண்ணிய நீர்நிலைகளில் சென்று குளிக்கும் புறவார் பனங்காட்டூரில் ஆராய்ந்து கூறிய நான்மறைகளைப் பாடி ஆடும் அடிகளே! என்று பலமுறை சொல்லி நல்ல மலர்களைத்தூவி வீழ்ந்து அடி பரவும் தவத்தினர்க்கு அருள்புரிவாயாக.
2041 | செங்க
யல்லொடு சேல்செ ருச்செயச் பங்கயம் மலரும் கங்கை யும்மதி யுங்க மழ்சடைக் அங்கை யாடலனே |
2.053. 5 |
செங்கயல் சேல் இரண்டும் போரிட, சீறியாழ் போல ஒலிசெயும் வண்டுகளோடு தாமரை மலரும் புறவார்பனங்காட்டூரில் கங்கையும் மதியும் கமழ்கின்ற சடையினனாய் உமையம்மையோடு கூடி மான்கன்றைக்கையில் ஏந்திய அழகிய கையோடு ஆடுபவனே! என்று போற்றும் அடியார்க்கு அருள் புரிவாயாக.
2042 | நீரி
னார்வரை கோலி மால்கடல் பாரினார் பிரியாப் காரி னார்மலர்க் கொன்றை தாங்கு சீரினால் வணங்குந் |
2.053. 6 |
பெரிய கடலை எல்லையாகக்கோலி நீண்ட பொழில் சூழ்ந்து விளங்கும் இவ்வுலகில் விளங்கும் அடியவர் நாள்தோறும் பிரியாது வணங்கும் புறவார் பனங்காட்டூரில் கார்காலத்தே மலரும் கொன்றையை அணிந்தகடவுளே! என்று கை குவித்து நாள்தோறும் சிறப்போடு வழிபடும் அடியவர்கட்கு அருள் புரிவாயாக.
2043 | கைய
ரிவையர் மெல்வி ரல்லவை பையரா விரியும் மெய்ய ரிவையொர் பாக மாகவும் பொய்யிலா வடிமை |
2.053. 7 |
மகளிரின் மெல்லிய கைவிரல்களைக் காட்டிப் படம் பொருந்திய பாம்பு போல் காந்தள் செடி விரிந்து மலரும் புறவார் பனங்காட்டூரில் உமையம்மையைத் தனது மெய்யில் ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே! எனக்கூறித் திருவடிகளைப் பரவி நாள்தோறும் மெய்த்தொண்டு புரியும் அடியவர்க்கு அருள் புரிவாயாக.
2044 | தூவி
யஞ்சிறை மெல்ந டையன பாவில் வண்டறையும் மேவி யந்நிலை யாய ரக்கன ஏவியெம் பெருமான் |
2.053. 8 |
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் செறிந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெயும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக மேவியவனாய் இராவணனின் தோள்களை அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே! எனப்போற்றும் அடியவர்க்கு அருள்புரிவாயாக.
2045 | அந்தண்
மாதவி புன்னை நல்ல பைந்தண் ஞாழல்கள் எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன் சந்தம் ஆயவனே |
2.053. 9 |
அழகும் தண்மையும் உடைய மாதவி, புன்னை, நல்ல அசோகு, தாமரை, மல்லிகை, பசுமையும் தண்மையும் கொண்ட ஞாழல் ஆகியன சூழ்ந்த புறவார் பனங்காட்டூரில் இளமையை ஏந்திய முகில்வண்ணன் நான்முகன் என்ற இருவரும் அறிய இயலாதவனாய் அழகிய உருக்கொண்டு நிமிர்ந்து நின்றவனே! தவத்தினராய அடியவர்க்கு அருள்புரிவாயாக.
2046 | நீண
மார்முரு குண்டு வண்டினம் பாணில் யாழ்முரலும் நாண ழிந்துழல் வார்ச மணரும் ஊணுரி யவனே |
2.053. 10 |
வண்டுகள், பெருகி நிரம்பிய தேனை உண்டு நீலமலரைக் கவ்வி நேரிசைப்பண்ணில் யாழிசைபோல முரலும் புறவார்பனங்காட்டூரில், நாணமின்றித் திரியும் சமணர்களும் அன்பற்ற புத்தர்களும் நகுமாறு, தலையோட்டில் ஊணைக் கொள்ளுதற்கு உரியவனே! உன்னைக் கண்டு மகிழ்வார்க்கு அருள்புரிவாயாக.
2047 | மையி
னார்மணி போல்மி டற்றனை பைய தேன்பொழில்சூழ் ஐய னைப்புக ழான காழியுள் செய்யுள் பாடவல்லார் |
2.053. 11 |
கருநிறம் பொருந்திய நீலமணி போன்ற மிடற்றனை, குற்றமற்ற திருவெண்ணீற்றைப் பூசும் மார்பினனை, தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார். பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செய்யுளைப் பாடவல்லவர் சிவலோகம் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புறவார் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புறவார், கருளாயே, பனங்காட்டூரில், பனங்காட்டூர், அருள்புரிவாயாக, மலரும், தவத்தார்க், புறவார்பனங்காட்டூரில், புரிவாயாக, அடியவர்க்கு, நாள்தோறும், வண்டுகள், நான்மறை, திருமுறை, பொருந்திய, விளங்கும், நாடொறும், வண்டறையும், சூழ்ந்து, திருச்சிற்றம்பலம், புன்னை, பூசும், காழியுள், தண்மையும், நான்முகன், மல்லிகை, ஏந்திய, வெண்குழை, கொன்றை, பரவுந், மகரந்தங்களை, அடைந்தார்க்கு, சென்று, காந்தள், திருப்புறவார், பனங்காட்டூர்க், ஒலிசெயும், சங்கரனே, பனங்காட்டூர்ப், ஆய்ந்த, குவித்து