முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.111.திருவாய்மூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.111.திருவாய்மூர்
2.111.திருவாய்மூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர்.
தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
2670 |
தளிரிள வளரென வுமைபாடத் கிளரிள மணியர வரையார்த் விளரிள முலையவர்க் கருணல்கி வளரிள மதியமொ டிவராணீர் |
2.111. 1 |
தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல, உமையம்மை அருகிருந்து பாடவும், தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி, விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்களை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திருநீறுபூசி, முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். வாய்மூரடிகளாகிய அவர் வருவார் காணீர்.
2671 |
வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் வந்தனை பலசெய இவராணீர் |
2.111. 2 |
தழல் போன்ற திருமேனியராய், திருநீறுபூசி, விரித்தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர். செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர்.
2672 |
பண்ணிற் பொலிந்த வீணையர் சுண்ணப் பொலிந்த மிடற்றினார் சுண்ணப் பொடிநீ றணிமார்பர் வண்ணப் பிறையோ டிவராணீர் |
2.111. 3 |
பண்ணிசை பொருந்திய வீனைய உடையவர். பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர். திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர். அழகிய சடைமீது இளம்பிறை சூடியவர். வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர்.
2673 |
எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல் விரிகிளர் சடையினர் விடையேறி புரிகிளர் பொடியணி திருவகலம் வரியர வரைக்கசைத் திவராணீர் |
2.111. 4 |
சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும், அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும், கங்கையையும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர். திருநீறணிந்த மார்பினர். சத்திய வடிவினர். வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வருவார். காணீர்.
2674 |
அஞ்சன மணிவணம் எழில்நிறமா நஞ்சினை யமரர்கள் அமுதமென வெஞ்சின மால்களி யானையின்தோல் வஞ்சனை வடிவினொ டிவராணீர் |
2.111. 5 |
நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு நுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண்டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார். அவரைக் காணீர்.
2675 |
அல்லிய மலர்புல்கு விரிகுழலார் எல்லியம் போதுகொண் டெரியேந்தி சொல்லிய அருமறை யிசைபாடிச் வல்லியந் தோலுடுத் திவராணீர் |
2.111.6 |
அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர். வேதங்களைப் பாடிக்கொண்டு, இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார். அவ்வாய்மூர் இறைவரைக் காணீர்.
2676 |
கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் பொடியணி வடிவொடு திருவகலம் வடிநுனை மழுவினொ டிவராணீர் |
2.111. 7 |
மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர். வீதிகளில் பெண்கள் பலியிடலைக் கண்டு முறுவல் செய்பவர். திருநீறு அணிந்த வடிவோடும், பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும், கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
2677 |
கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் எட்டுணை சாந்தமொ டுமைதுணையா பட்டிணை யகலல்குல் விரிகுழலார் வட்டணை யாடலொ டிவராணீர் |
2.111. 8 |
இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர் மாலையைத் தலையில் அணிந்தவர். வீணை வாசிப்பவர். அவ்விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும். பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய்மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார். காணீர்.
2678 |
ஏனருப்பினொ டெழிலாமை கானம திடமா வுறைகின்ற தேனுண மலர்கள் உந்திவிம்மித் வானநன் மதியினொ டிவராணீர் |
2.111. 9 |
பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங்களைக் கவரும் கள்வராவர். கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
2679 |
சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் வாடல்வெண் டலைபிடித் திவராணீர் |
2.111. 10 |
பிறைசூடியவராய், சுடர்முடியவராய், திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய், கொன்றைமாலை சூடியவராய், பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய், காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி, தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார். காணீர்.
2680 | திங்களொ
டருவரைப் பொழிற்சோலைத் அங்கமொ டருமறை யொலிபாடல் நங்கள்தம் வினைகெட மொழியவல்ல தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் |
2.111. 11 |
சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும் சோலைகளையும் உடையதிருவாய்மூரிலுள்ள, வேதங்கள், வேதாங்கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடிகளைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி, உலகில் மேலான தவநெறியாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாய்மூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வருவாரே, காணீர், வருவார், வாய்மூ, ரடிகள், டிவராணீர், விளங்கும், அணிந்த, கொண்டு, தலையில், வாய்மூர், திருவாய்மூர், உடையவர், திவராணீர், இறைவர், உமையம்மை, அவ்வாய்மூர், அவ்விறைவர், திருவடிகளைப், அணிந்து, விரிகுழலார், தேவர்கள், அணிந்தவர், பலியெதிர், தங்கிய, கொணர்ந்துபெய்ய, திருநீறு, திருவகலம், கொன்றை, மாலையைத், தாருகாவன, கண்ணியர், சுண்ணப், பிறையணிந்து, வடிவினர், சிந்தனை, திருநீறுபூசி, பாம்பை, திருமுறை, திருச்சிற்றம்பலம், மதியமொ, செஞ்சுடர், வண்ணர்தம், சடைமீது, வாய்மூரில், விடையேறி, மார்பினர், வீணையர், சென்று, வாய்மூரடிகள், பொலிந்த, பொடியணி