முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.109.திருக்கோட்டூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.109.திருக்கோட்டூர்
2.109.திருக்கோட்டூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர்.
தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.
2648 |
நீல மார்தரு கண்டனே நெற்றியோர் சூல மார் தரு கையனே துன்றுபைம் கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் சால நீடல மதனிடைப் புகழ்மிகத் |
2.109. 1 |
நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர்.
2649 |
பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு |
2.109. 2 |
தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும், அரவு போன்ற அல்குலையும் உடையவரும். மயில் குயில் கிளி போன்ற மொழியினரும், மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர்.
2650 |
நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் அம்பொ னார்தரு முலகினில் அமரரோ |
2.109.3 |
நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும், செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும், செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர்.
2651 |
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை |
2.109. 4 |
அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில் தேவரோடும் குனிதிருப்பர் பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும், கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர்.
2652 |
உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் |
2.109. 5 |
உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து, குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும். அவனது திருவருளைப் பெறலாம்.
2653 |
துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை |
2.109. 6 |
நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி, ஊமத்தை, வெள்எருக்கமலர், வன்னியிலை, ஆகியவற்றைச் சூடியும், தலைமாலைகளை மேனியில் அணிந்தும், கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும், புலித்தோலை இடையில் உடுத்தும், கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடம், கேடும் ஏதமும் இல்லை.
2654 |
மாட மாளிகை கோபுரங் கூடங்கண் பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கேட தொன்றில ராகிநல் லுலகினிற் |
2.109. 7 |
மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரியமதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு, அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே, என்று எழுவார் கேடில்லாதவராய் உலகலொம் விளங்கிய புகழ் உடையவராவர்.
2655 |
ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் |
2.109. 8 |
ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது உமையம்மை அஞ்ச, இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட, அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய, பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர்.
2656 |
பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செய்யும் தேடி மாலயன் காணவொண் ணாதவத் கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் |
2.109. 9 |
பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை, திருமாலும், நான்முகனும் தேடியறிய முடியாத திருவை, மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வமும், உலகெலாம் நிகழும் புகழும் அடைவர்.
2657 |
கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் |
2.109. 10 |
வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்திதுசராகிய, செழுமையின் திரட்சியை, மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின். பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர்.
2658 | பந்து லாவிரற்
பவளவாய்த் தேன்மொழிப் கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் வந்து லாவிய காழியுள் ஞானசம் சந்து லர்ந்தமிழ் மாலைகள் வல்லவர் |
2.109. 11 |
பந்தாடும் மெல் விரலையும், பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை, கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 107 | 108 | 109 | 110 | 111 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோட்டூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோட்டூர்நற், கோட்டூரில், விளங்கும், றெழுவார்கள், கொழுந்தேயென், நற்கொழுந்தே, கொழுந்தே, என்றும், சூழ்தரு, அடியவர், எழுவார், விளித்து, கொன்றை, போற்றுமின், இறைவன், நிறைந்த, பெருமையைப், மண்டபம், புகழாலே, சூழ்ந்த, அவர்தம், கொழுந்தினைச், பூம்பொழில், புகழாரே, யென்றெழுவார்கள், பொழில்களால், எழுபவர், தாங்குவர், பொழில்கள், திருமுறை, திருச்சிற்றம்பலம், மென்மையான, திருவருளைப், மாங்கனி, பயில்வாய, தேவரோடும், பொன்னுலகில், பெறுவர், திருக்கோட்டூர், செல்வத்த