முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.101.திருவாரூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.101.திருவாரூர்
2.101.திருவாரூர்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
2561 |
பருக்கையானை மத்தகத் நெருக்கிவாய நித்திலந் கருக்கொள்சோலை சூழநீடு அருக்கன்மண்ட லத்தணாவு |
2.101. 1 |
பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலைமால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாடமாளிகைகளை உடைய திருவாரூர்.
2562 |
விண்டவெள் ளெருக்கலர்ந்த இண்டைகொண்ட செஞ்சடை கெண்டைகொண் டலர்ந்தகண்ணி அண்டரண்ட மூடறுக்கு |
2.101. 2 |
மலர்ந்த வெள்ளெருக்குமலர், விரிந்தவன்னியிலை, கொன்றைமலர், ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர், கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர்.
2563 |
கறுத்தநஞ்ச முண்டிருண்ட மறுத்தமாணி தன்றனாகம் வெறித்துமேதி யோடிமூசு அறுத்துமண்டி யாவிபாயு |
2.101. 3 |
கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும், காலன் உயிரைக் கவரவந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர், எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர்.
2564 |
அஞ்சுமொன்றி யாறுவீசி குஞ்சியார வந்திசெய்ய பஞ்சியாரு மெல்லடிப் அஞ்சொலார் அரங்கெடுக்கு |
2.101.4 |
காமம், குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து, ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர், பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும், நுண்ணியடையையும், அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர்.
2565 |
சங்குலாவு திங்கள்சூடி தங்குலாவி நின்றவெங்க தெங்குலாவு சோலைநீடு அங்குலாவி யண்டநாறு |
2.101. 5 |
சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத் தலையில் சூடி, தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர், தென்னஞ்சோலைகளையும், வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர்.
2566 |
கள்ளநெஞ்ச வஞ்சகக் டுள்ளமொன்றி யுள்குவா துள்ளிவாளை பாய்வயற் அள்ளல்நாரை யாரல்வாரு |
2.101. 6 |
கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும். தீய எண்ணங்களையும் கைவிட்டு, அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர், வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும், சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும், நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர்.
2567 |
கங்கைபொங்கு செஞ்சடைக் மங்கவெங்க ணால்விழித்த தெங்கினூடு போகிவாழை அங்கண்மந்தி முந்தியேறு |
2.101. 7 |
பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த சருவவியாபகரும், காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும், மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர், அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக்குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்றதிருவாரூர்.
2568 |
வரைத்தலம் மெடுத்தவன் நெரித்தவன் புரத்தைமுன் நிரைத்தமாளி கைத்திருவி அரத்தவாய் மடந்தைமார்க |
2.101. 8 |
திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும், திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய, சிவபிரான் ஊர், வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும், வெண்ணகையும் செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர்.
2569 |
இருந்தவன் கிடந்தவன் வருந்தியு மளப்பொணாத செருந்திஞாழல் புன்னைவன்னி அரும்புசோலை வாசநாறு |
2.101. 9 |
தாமரைமலரில் இருந்த நான்முகனும், பாம்பணையில் கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர்.
2570 |
பறித்தவெண் டலைக்கடுப் வெறித்தவேடன் வேலைநஞ்ச மறித்துமண்டு வண்டல்வாரி அறுத்தவா யசும்புபாயு |
2.101. 10 |
பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப் பொடிபூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத்தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும், மண்வளமும், நீர்வளமும் உடைய திருவாரூர்.
2571 | வல்லிசோலை
சூதநீடு அல்லிமா தமர்ந்திருந்த நல்லசொல்லு ஞானசம் வல்லதொண்டர் வானமாள |
2.101. 11 |
கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர்; இஃது உண்மை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 99 | 100 | 101 | 102 | 103 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ரென்பதே, திருவாரூர், மந்தணாரூ, மந்தணாரு, மகளிர், மன்னிய, விளங்கும், மன்னுமூர், தோன்றும், மீண்டும், செண்பகம், வழிபடும், னிருந்தவூர், திருச்சிற்றம்பலம், திருமுறை, பருத்த, சோலைகளால், செஞ்சடை, கொடிகள், கண்களை