முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.100.திருக்கோவலூர் வீரட்டம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.100.திருக்கோவலூர் வீரட்டம்
2.100.திருக்கோவலூர் வீரட்டம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - சிவானந்தவல்லியம்மை.
2550 |
படைகொள்கூற்றம் வந்துமெய்ப் இடைகொள்வா ரெமக்கிலை குடைகொள்வேந்தன் மூதாதை விடையதேறுங் கொடியினான் |
2.100. 1 |
படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை. நெஞ்சே! எழுக. என்னோடு போதுக. வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலையமானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனுமாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம்.
2551 |
கரவலாளர் தம்மனைக் திரவலாழி நெஞ்சமே குரவமேறி வண்டினங் விரவிநாறு கொன்றையான் |
2.100. 2 |
நெஞ்சே! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே. இனியதை நீ எய்த வேண்டின், வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம்.
2552 |
உள்ளத்தீரே போதுமின் அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கொள்ளப்பாடு கீதத்தான் வெள்ளந்தாங்கு சடையினான் |
2.100. 3 |
நல்ல உள்ளம் உடையவர்களே! உயிருக்கு உறுதியானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயருறாமல், செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம். வருக.
2553 |
கனைகொளிருமல் சூலைநோய் இனையபலவு மூப்பினோ பனைகளுலவு பைம்பொழிற் வினையைவென்ற வேடத்தான் |
2.100. 4 |
மூப்புக் காலத்தில் கணைத்தலைக் கொண்ட இருமல், சூலை நோய், நடுக்கம், குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே, பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில், இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக.
2554 |
உளங்கொள்போக முய்த்திடா துளங்கிநின்று நாடொறுந் வளங்கொள்பெண்ணை வந்துலா விளங்குகோவ ணத்தினான் |
2.100. 5 |
ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது. நாள் தோறும் துளங்கித் துயருறாதே. வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில், விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம்.
2555 |
கேடுமூப்புச் சாக்காடு ஆடுபோல நரைகளா கூடிநின்று பைம்பொழிற் வீடுகாட்டு நெறியினான் |
2.100. 6 |
நம் உடல் நரையுடையதாய், ஆடுபோல அலைதலால் கேடு, முதுமை, சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது. பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும், வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். நெஞ்சே! வருக.
2556 |
உரையும்பாட்டுந் தளர்வெய்தி நரையுந்திரையுங் கண்டௌகி வரைகொள்பெண்ணை வந்துலா விரைகொள்சீர்வெண் ணீற்றினான் |
2.100. 7 |
பேச்சும், பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர். ஆதலால், மலையிலிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம்.
2557 |
ஏதமிக்க மூப்பினோ ஊதலாக்கை யோம்புவீ போதில்வண்டு பண்செயும் வேதமோது நெறியினான் |
2.100. 8 |
துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின், மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில், வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக.
2558 |
ஆறுபட்ட புன்சடை கூறுபட்ட மேனியான் நீறுபட்ட கோலத்தான் வேறுபட்ட சிந்தையான் |
2.100. 9 |
கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும், உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய், நீலகண்டனாய், திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக.
2559 |
குறிகொளாழி நெஞ்சமே அறிவிலாத வமணர்சொல் பொறிகொள்வண்டு பண்செயும் வெறிகொள்கங்கை தாங்கினான் |
2.100. 10 |
ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால், பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக.
2560 | கழியொடுலவு
கானல்சூழ் பழிகள்தீரச் சொன்னசொற் அழிவிலீர்கொண் டேத்துமின் விழிகொள்பூதப் படையினான் |
2.100. 11 |
வீணே அழிதல் இல்லாதவர்களே! உப்பங்கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ்சொல், பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழிபடுங்கள். அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம். வருக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோவலூர் வீரட்டம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வீரட்டானஞ், சேர்துமே, கோவலூரில், வீரட்டானத்தை, அடைவோம், சிவபிரானது, விளங்கும், லூர்தனுள், நெஞ்சமே, கோவலூர், சூழ்ந்த, குழகன்கோவ, குழகனும், போதின்கண், தறிதிரேல், நெஞ்சே, சாக்காடு, வயல்கள், வந்துலா, வயல்கள்சூழ்ந்த, பெண்ணையாறு, வண்டுகள், கமழும், சிவபிரானின், பண்செயும், அறிவிலாத, நெறியினான், ஆடுபோல, தோறும், உடலைப், வீசும், திருச்சிற்றம்பலம், திருமுறை, வீரட்டம், திருக்கோவலூர், அணிந்த, காலத்தில், பைம்பொழிற், மூப்பினோ, தங்கிய, இருமல்