சிந்துப்பாவியல்
51. நூலுக்குப் புறனடை
-
கூறிய வல்ல வேறுபிற தோன்றினும்
கூறிய நெறியில் தேறினர் கொளலே
விளக்கம் : ‘இன்னவாறு என்னும் யாப்புறவின்றிக் கூறு பாவலர் குறிப்பில் அமைந்து வழங்கிடும்’ என்று முன்னர் கூறினார். (நூ.50) ஆனதாலும், கால ஓட்டத்தில் புதிய புதிய சிந்துப் பாடல்கள், பாடுகின்றவர் விரும்பும் வடிவில் தோன்றுதல் தவிர்க்க முடியாதது ஆதலாலும், ‘புதியன புகுதலும் வழுவில’ என்று நன்னூலார் கூறியுள்ளமையாலும் புதியனவாய்த் தோன்றும் சிந்துகளையும் இந்நூலின் இலக்கண மரபின் வழி ஆராய்ந்து அமைவுடையவற்றைக் கொள்க என்று கூறினார்.
வேறு வகையாக வரும் சிந்துப்பாடல்கள்
காட்டு : (1)
வினா
நூறாயி | ரக்கணக் | காகச்செ | லவிட்டு |
நூற்றுக்க | ணக்காய்த்தி | ரைப்படம் | ஆக்கினர் |
மாறான | எண்ணத்தை | மட்டக்க | தைகளை |
மக்களுக் | கீந்தனர் | அண்ணே | - அது |
தக்கதுவோ | புகல் | அண்ணே. |
கூறும்தொ | கைக்காகக் | கூட்டுத் | தொழில்வைப்பர் |
கூட்டுத்தொ | ழில்முறை | நாட்டுக்கு | நல்லது |
ஏறாக்க | ருத்தைஇங் | கில்லாக்க | தைகளை |
ஏற்றின | ரோஅவர் | தம்பி? | - இது |
மாற்றாதி | ருக்குமோ | தம்பி? |
காட்டு : (2)
செங்கதிர் | சென்றது; | ||
செவ்வல்லி | பூத்தது; | ||
திங்களும் | வந்தது | பாரடி! | - உன் |
செவ்விதழைச் | சற்று | நீட்டடி! |
காட்டு : (3)
ஆற்றல்மி | குந்தவர் | ஆட்சிபு | ரிந்தவர் |
ஆஸ்திக | நீதிபதி | - அவரே | |
பாஸ்கர | சேதுபதி | - புலவர் | |
போற்றும்தொல் | காப்பியப் | புத்தகம் | போன்றவர் |
போனபின் | ஏது | கதி? |
காட்டு : (4)
சோற்றைப்பி | டித்துத்தி | ரட்டிய | பிண்டம்போல் |
பாட்டினைச் | செய்வதுண்டோ? | - புயல் | |
காற்றைப்பி | டித்துக்க | டலை | அடைத்துக் |
கனலை | எழுப்பிட | டா! |
காட்டு : (5)
உன்பாடல் | நான்பாடி | விழிமூட | வா? | - உன் |
ஒருபாடல் | நான்கேட்டு | வழிதேட | வா? | |
கண்போன்ற | அரிதான | கவிமன்ன | வா | - உன் |
கற்பூர | மொழிகேட்டு | கதைசொல்ல | வா |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்