புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - மணிமேகலை வெண்பா
பொன்னிவிழாப் பறை முழக்கம்
பொன்னி விழாநாளும் போந்த தெனவேந்தன் உன்னி விழாச்செய்தி ஊரெல்லாம்-பன்னிப் பறையானை அன்றே பறையறையச் சொன்னான் இறையானை சென்ற தினிது. |
நகரை உள்ளும் புறமும் புதுக்குக
அரசறைந்தான்
அவ்வாறே ஆங்காங்கு நாட்டில் முரசறைந்தான் "முந்து புகழ்சேர்-பெருமக்கள் உள்ளும் புறமும் புதுக்கநகர்! நெஞ்சத்தை அள்ளும்கா வேரிவிழா அன்று." |
5 |
நகரின் அழகமைப்பு
இதுமணலோ
செம்பொற் பொடிதானோ என்னப் புதுமணல் ஓவம் புரிந்த-முதுநகரில் பட்டுக் கொடியும் பறக்கும்நறுந் தொங்கலிலே மட்டுக் கொடியும்மலர்க் காம்பு |
10 |
தோரணமும் விளக்கும்
சிலந்திஎங்கும்
என்னத் தெருத்தோற்ம் மேற்பால் கலந்தியங்கும் தோரணங்கள் காற்றால்-புலந்தியங்கப் பண்ணும்முன் வீடெல்லாம்! பாழிரவில் நற்பகலைப் பண்ணுமே பாவை விளக்கு. |
15 |
தெருப் பச்சைப் பந்தல்கள்
முன்றில்
ஓவ் வொன்றுமே பன்மணியால் மூடுற்றே ஒன்றில்ஒவ் வொன்றும் ஒளிமிகுக்கும்-நன்றே இருப்பச்சை இல்லாப் பெருந்தேராய்த் தோன்றும் தெருப்பச்சைப் பந்தல்கள் சேர்ந்து. |
20 |
தெரு இருபாலும் பூச்செடிகள்
சாடிப்
பலவண்ணப் பூச்செடிகள் பன்மணியைச் சாடித் தளிர்த்துத் தெருவெல்லாம்-நாடியே பண்டழைக்க வண்டினத்தைப் பாடுங்கள் என்றுதேன் கொண்டழைத்துக் கொண்டிருக்கும் அங்கு. |
ஆடல் பாடல்
தெருமுடிவில்
ஆடலும் பாடலும் கொள்வார் திருமுடிவில் வேந்தன் திறலே-ஒருமுடிவில் சீர்வாழ்த்தி மன்றப் புலவரெல்லாம் செந்தமிழின் பேர்வாழ்த்த நிற்பார் பெரிது. |
25 |
குழந்தைகள் தமிழ் பாடல்
மைச்சிட்டுப்
பாடும் மருங்கில் அதன்ஒலியை அச்சிட்டுக் காற்சிலம்பு பாடவே-தச்சிட்ட பாவை அசைந்தாடும் பாங்கில் குழந்தைதமிழ் நாவை அசைத்தாடும் நன்கு. |
30 |
தமிழ் மலரும் மன்றங்கள்
அறம்பொருள்
இன்பம்வீ டென்னுமந் நான்கின் திறம்பொருள் இன்னவெனத் தேர-உறங்கும் சிலரும் விழிக்கத் தமிழின் சிறப்பு மலரும் புலவர்தம் மன்று. |
35 |
காவேரி சென்று ஆடினார்கள்
காற்றினிலே
ஆடை பறக்கப்போய்க் காவேரி ஆற்றி னிலாமுகத்தார் ஆடுவார்-நேற்றிரா உண்டஇதழ் கொம்புத்தேன் காதலர்கள் அந்நேரம் கண்டஇதழ் மாணிக்கக் காடு. |
40 |
மக்கள் நெருக்கம்
நீராடி
மீளும் நெடுந்தேர் பரிதாண்டி நேராடப் போவார் நெருக்கடைவார்-ஆரிழையார் பின்னடக்க மாச்செல்வர் பீடுமலர்க் கைப்பற்றி முன்னடக்க மாச்செல்வர் மொய்த்து. |
அரசுக்கு வாழ்த்து
வாழிய
சோழமன்மா வண்கிள்ளி செங்கோலே வாழிய சோழன் வரிப்புலிநீ-டுழி எனப்பாவை யார்வந்தால் பாடினார் கூத்த ரினப்பாவை யார்ஆடி னார். |
45 |
அரசவையில் அவள் ஏன் இல்லை?
போதவிழும்
கூந்தலார் போந்தாடும் போதெல்லாம் மாதவியும் மேகலையும் வாராரோ-ஏதவர்க்கு நேர்ந்ததென் றார்சில்லோர் நேர்மைஇது வோஎன்றார் சேர்ந்ததிது தாயின் செவி. |
50 |
மாதவியின் தாய் 'மாதவியையும் மணிமேகலையையும் அழைத்துவா'
என்று பாங்கிக்குக் கூறினாள்
என்று பாங்கிக்குக் கூறினாள்
பிழைஎன்றாள்
மாதவிதாய் பெண்பேர்த்தி மாரை அழைஎன்றாள் மன்றத்தில் ஆட- உழையிருந்த பாங்கி நடந்தாள் அப் பச்சைமயில் அச்சவிடை |
55 |
மாதவியிடம் பாங்கி உரைத்தாள்
ஆங்கிருந்த
மாதவியை அன்பால் அணுகியே 'நீங்கா உமதுகடன் நீங்கிற்றோ-ஊங்காட ஏன்மறந்தீர் ஏற்ற கலைவல்லீர்? மாமதிதான் வான்மறக்கு மோ?' என்றாள் மாது. |
60 |
மாதவி¢ பாங்கியிடம்
கூறுகின்றாள்
காவலனைக்
காற்சிலம்பால் வென்று கொலையுண்ட கோவலன் கொண்டகுடிப் பேர்காத்த-பாவை தரத்தைஆய் வாளாதன் தாமரைபோற் கண்ணாள் பரத்தைஆய் வாழ்வாளா பார். |
மணிமேகலை அவைக்கு
வரமாட்டாள்
என்கின்றாள் மாதவி
என்கின்றாள் மாதவி
இன்பமெனல்
நற்றவத்தால் எய்துவதாம் மற்றுள்ள துன்பமெனல் இவ்வுலகில் தோய்வவாம்-என்பதவள் எண்ணம்மணி மேகலைதான் ஏகாள் அவை; இஃது திண்ணம்எனச் செப்பினாள் தாய். |
65 |
அறவண அடிகளிடம் மாதவி சொன்னாளாம்
அல்லலுற்றேன்
காதலனின் கண்ணகியின் அல்லலெல்லாம் சொல்லலுற்றேன் வந்திங்கே; தூய்நெறியே-செல்லலுற்ற அண்ணல் அடிகள் அறவணர்பால்! நான் அதன்மேல் நண்ணல் நவின்றார் அவர். |
70 |
அறவணர் சொல்லியது
எப்பொருட்கும்
ஆட்படுதல் இன்றி இடரற்ற மெய்ப்பொருள் ஆதல் விடுதலை-அப்பொருளின் பற்றுக்குப் பற்றுவிட வேண்டுமென்றார் மற்றஎலாம் எற்றுக்கென் றாள்மா தவி! |
75 |
மாதவி ஆயத்தார்க்கும் அன்னைக்கும்
சேதி அறிவித்தாள்
சேதி அறிவித்தாள்
அம்மைக்கே
ஆயத்தி னோர்க்கே அறிவி என்று செம்மைக்கே ஆயத்தி செப்பினாள்-கைம்மேல் இருந்த மணியே இழந்தவள்பொல் நெஞ்சம் வருந்த நடந்தாள்அம் மாது. |
80 |
ஆங்கு ஒரு புறம் பூத்தொடுக்கும் மணிமேகலை நிலை
கோவலனின்
மாதவியின் அன்பின் கொடை! அழகை மேவலரும் போற்றுமணி மேகலைதான்-ஆவலுடன் பாத்தொடுத்துக் கொண்டிருப்பார் போலுமொரு பாலிருந்து பூத்தொடுத்துக் கொண்டிருï¢î£ள் ஆங்கு. |
மணிமேகலை
பூத்தொடுக்கும் திறம்
பன்மலர்க்காம்
பொவ்வொன்றும் பச்சைமயில் மேகலைதான் மென்மôர்க்கைக் காந்தள் விரல்பற்றித்-தன்மலர்க்கண் கூறுமுறை கோணாமல் கட்டுந்தார் õண்ணத்தை நூறுமுறை நோக்கல் தகும். |
5 |
மாதவி
பாங்கியிடம் கூறிய வர£று
மணிமேகலையை வருத்தியது
மணிமேகலையை வருத்தியது
ஆங்கிருந்த
மாதவிதன் ஆளன்மனை யாளிடரைப் பாங்கிருந்த பாங்கிக்குக் கூறியதைக்-கோங்கிருந்த வண்டார் குழலி மணிமே கலைசெவியால் மொண்டாள் முறிந்தாள்தன் நெஞ்சு. |
10 |
மணிமேகலை
கட்டிய மாலை கண்ணீரில் மிதந்தது
காவலன்தன்
காவல் பிழைத்தது¾ம் கண்ணகியும் கோவலனும் மாண்டதுவும் கூறியதைப்-பாவை நினைப்பாள் நிலைதளர்வாள் கண்ணீரை ஊற்றி நனைப்பாள் நறுமலர்த்தா ரை. |
15 |
மாதவி
அறிந்தாள்
கரும்பிருக்கும்
சொல்லும் கனியுதட்டின் ஓரம் அரும்பிருக்கும் அஞ்சிரிப்பும் எங்கே?-திரும்பித்தாய் பெண்கண்டாள் பெண்தொடுக்கும் மாலைமிதக் கக்கண்டாள் கண்கண்டாள் கண்ணீர்கண் டாள். |
20 |
வேறு
மலர் வேண்டினாள் தாய்
ஆறொன்று
கண்ணீர் அலங்கலைத்தீ தாக்கியதால் வேறொன்று காணமலர் வேண்டென்று-வீறொன்று நெஞ்சினாள் மாதவிதான் நேர்ந்த துயர்மாற்றக் கெஞ்சினாள் கேட்டாள் கிளி . |
மணிமேகலை
வெளியிற் செல்லுவதைப்
பாங்கி எதிர்த்தாள்
பாங்கி எதிர்த்தாள்
ஈதுரைக்கக்
கேட்ட எழிற்பாங்கி அன்னையீர் ஏதுரைக்க லானீர் இதோஇந்த-மாதுரைக்கின் மையேந்து கண்ணாய் மயல்தீர்க்க வேண்டுமென்று கையேந்தும் கண்டால் உலகு. |
25 |
மேலும்
பாங்கி கூறுகின்றாள்
போது பறிக்கஎங்கும்
போகவிì£ தீர்அழகு மாது பறிக்கஎங்கும் மாநிலத்தின்-மீது விழிதிறந்து வாழ்கின்றார் வேந்தர் அழிவுக்கு வழிதிறந்து வாழ்வோமோ நாம். |
30 |
உதய
குமரனால் கேடு வரக்கூடும்
எவ்வனமே
சென்றாலும் ஏந்தலின் தோன்றலுக்குச் செவ்வனமே செப்பப் பலருள்ளார்-இவ்வனம் மல்லல் உவவனம்! மங்கையுடன் நானுமே செல்லவெனிற் செல்வேன்என் றாள். |
35 |
தாய்
ஒப்புக்கொண்டதால் இருவரும் எழுந்தார்கள்
தன்னில்
எழுந்த தமிழ்ப்பாட்டும் சொல்மாற்றிப் பின்னி எழுந்த பிழைப்பாட்டும்-என்ன ஒருமணி மேகலையும் பாங்கியும் ஆன இருமணியும் சென்றார் âழுந்து. |
40 |
மணிமேகலையும்
சுதமதியும் காட்சிக்கு மகிழ்வார்
மனம் கவிöõ¢õó¢
மனம் கவிöõ¢õó¢
கூட்டுக்
கிளிகள் இருக்கை குறையாக்கிக் காட்டு மயிலாகிக் கால்வைத்த-பாட்டையெலாம் ஒவ்வொன்றும் காண்பார் வியப்பார் உருகுவார் எவ்வொன்றும் ஈடு படார். |
ஒரு
களி உண்ணா நோன்பியைக்
கள்குடிக்க அழைக்கின்றான்
கள்குடிக்க அழைக்கின்றான்
பண்ணாத
நல்ல சுவைநீர் பருகிடலாம் உண்ணாத நோன்பிகளும் உண்ணிலொன்றும்-பண்ணாதென் றுள்ளுக் கழைத்தான் ஒருகளி! நோன்பிகண்டான் கள்ளுக் கடைஎன்ற பேர். |
45 |
பெருங்களி
இயல்பு
மறுகு படுபிணத்தின்
காதில் மகிணன் அறுகு செலுத்த அவனைக்-குÁகினான் கட்குடித்தேன் ஓய்வெடுத்தேன் என்றான்ஏன் ஓய்வென்னக் கட்குடிக்கத் தான் என்றான் காய்ந்து. |
50 |
வையம்
துன்பம் நிறைந்தது
வைய நடைமுறையில்
துன்பமே வாய்ப்பதன்றி உய்யுமா றில்லைஎன உரைத்துத்-துய்ய மணிமே கலைஅம் மறுகு நடந்தாள் அணிமேவும் அப்பாங்கி யோடு. |
55 |
எங்கும்
குறைபாடு
பொன்னைக்
குவித்துவைத்தோன் பொங்கலுண்ண [வாழையிலைத் தொன்னை திருடுகையில் தோதுண்டு-பின்ஒருவன் மேலாடை மேற்சென் றிழுப்பான் அவன்செருப்பைக் காலாடி னான்ஒருவன் கண்டு. |
60 |
பற்று
நீங்க வேண்டும
இறைபாடென்
பட்டாலும் இன்மைபோ னாலும் குறைபா டிலாமலிரா தென்று-மறைபாடும்! ñற்று விடுதலை வேண்டின் மனமே பற்று விடுதலை வேண்டு. |
உவவனம்
சேர்ந்தனர் மணிமேகலையும் சுதமதியும்
என்றிளை
யாளேதன் பாங்கியுடன் இங்குமங்கும் நின்றிளை யாததொரு நெஞ்சமுடன்-சென்றவளாய்க் காணா உவவனம் பாங்கிதான் காட்டிடவே பூணா வியப்புப்பூண் பாள். |
65 |
மணிமேகலை
வந்தபோது அவளைக் கண்டவர்கள்
என்ன ஆனார்கள்
என்ன ஆனார்கள்
மாது மலர்வனத்தைக்
காண்பாள்! வழிநடந்த போது பலர்கண்டு பூண்ட இறும்-பூது புகல விரும்பினேன் பொன்றாத் தமிழ்விட் டகல விரும்புவார் ஆர்? |
70 |
கள்குடத்தின்
உள்ளிருந்த கள்ளிலும் மணிமேகலை உருவம்
கட்கடைக்கே
ஆளானார் கார்குழலைக் கண்டுகருங் கட்கடைக்கே ஆளாகக் காத்திருந்தார்-கட்குடத்தை எண்ணார்கள் எண்ணுகையில் கட்குடத்துள் கண்ணுக்குக் கண்ணாளைக் கண்டார் கவிழ்ந்து. |
75 |
மணிமேகலை
துண்டு உடுத்துப் போகும்படி செய்தவர் யார்?
பண்டுடுத்தும்
பட்டில்லை பல்லிழைகள் இல்லைஇவள் துண்டுடுத்துப் போகின்றாள் தொல்லுலகு-கண்டெ´த்த தங்கப் படிவம் தவத்துக் குடன்பட்டாள் இங்கிப் படிச்செய்தார் யார்? |
80 |
மணிமேகலை
கண்டாலே தித்திக்கும் தேன்
குன்றத்துக்
கொம்புத்தேன் முல்லைவா ழைப்பழத்தேன் மன்றத்து மாப்புலவர் செந்தமிழ்த்தேன்-என்றமுத்தேன் உண்டாலே தேன்! இம் மணிமே கலைஒருத்தி கண்டாலே தித்திக்கும் தேன். |
வைய
விளக்கை யாருக்குமில்லாமல் ஆக்கினரே
தையலை இவ்வாறு
தவக்குழியில் தள்ளுவதோ? வைய விளக்கை மருக்கெழுந்தை-ஐயையோ ஆருக்கு மில்லாமல் ஆக்கினரே பெண்ணழகின் வேருக்கு வெந்நீரை விட்டு. |
85 |
யாழெடுத்தவன்
மணிமேகலையைக் கண்டு, யாழின்
மேலேயே சாய்ந்து கிடந்தான்
மேலேயே சாய்ந்து கிடந்தான்
என்று பலரும்
இயம்பி வருந்தினார் சென்று பரத்தை தெருவறைக்குள்-ஒன்றை நினைத்துயாழ் தொட்டஎட்® நேரிழையைக்கண்டே அனைத்துñ¢ மறந்திருந்தான் ஆங்கு. |
90 |
உதயகுமரன்
மணிமேகலை பற்றிக் கேள்விப்படுகிறான்
அந்நேரம்
தேரேறி அங்குவந்த வேந்தன்மகன் இந்நேரம் யாரால் நீ இன்னலுற்றாய்-முன்னே அதையுரைப்பாய் என்றுரைத்தான்: அன்னம் நடந்த கதையுரைப்பான் எட்டி கடிது. |
95 |
எட்டியின்
இரக்கம
சின்னஞ்
சிறியஇடைச் செல்விமணி மேகலையாம் அன்னம் அழகு சுமந்தகன்றாள்-முன்னமெல்லாம் பட்டுடுத்தும் பான்மையினாள் இன்று தருநெறிக்குட் பட்டுடுத்தும் பான்மையினாள் ஆய், |
100 |
மணிமேகலையைப்
பார்த்தேன்; கோவலன்
வரலாறு நினைவுக்கு வந்ததும் யாழில் சாய்ந்தேன்
வரலாறு நினைவுக்கு வந்ததும் யாழில் சாய்ந்தேன்
அன்னாளைக்
கண்டேன் அவள்தந்தை கோவலனின் முன்னாளை எண்ண முறிந்ததுள்ளம்-என்யாழில் இட்டவிரல் தீநரம்பில் இட்டதாம் என்றெட்டி பட்டதுயர் சொன்னான் பதைத்து. |
மணிமேகலையை
என்தேரில் ஏற்றி வந்துவிடுவேன்
அப்படியா
அன்னாளைச் சென்று மணித்தேரில் எப்படியும் ஏற்றிவந்தென் இற்சேர்ப்பேன்-அப்பொன்னை நீணாள் நினைந்தும் நெருங்காத என்வாணாள் வீணாள்என் றானிளைய வேந்து. |
105 |
உதயனின்
கண்ணுக்கு வழியெல்லாம் மணிமேகலை
குளிர்காற்றுக்
கூந்தல் அருவியோ! தேமாந் தளிர்மாது மேனியோ! தண்டை-ஒளிர்வண்டோ? என்பான் எதிலும் மí¤மே கலைகாண்பான்! தென்பாô¢ ïடத்தினான் தேர். |
110 |
மணிமேகலையும்
பாங்கியும் இன்னும் உவவனக்
காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள்
காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள்
ஏடகத்துக்
காட்டாத இன்பத்தை நல்லியற்கை நாடகத்தை நங்கையும் பாங்கியும்-தேடிஎப் பாலும்கண் டார்கள்! பகர்ந்து பகர்ந்துமேன் மேலும்கண் டார்கள் விழைந்து! |
115 |
மயில் தோகையில் மறைந்தது ஒரு மான்
களித்தாடும்
மஞ்ஞைக் கவின்தோகை யின்பின் ஒளித்தாடும் மானை ஒருமான்-விளித்தோடி மாவடிக்குப் பின்னிருந்த மந்தியின் செவ்வலரிப் பூவடிக்குப் புண்ணாகும் நெஞ்சு. |
120 |
மாலை
புனைந்து குளத்துக் கண்ணாடி பார்க்கும் ஒரு குரங்கு
விண்ணாடி
மாம்பூ விரிதார் புனைகடுவன் கண்ணாடி காணும் ஒருகுளத்தின்-உண்ணாடி மாம்பழத்தைப் போடப்போம் மந்தியினை நீள்வரால் ஆம்! பழத்தைப் போடென்னும் அங்கு! |
தவளை
விளைத்த குழப்பம
குவளை விழுந்த
குளத்தில் எழுந்து தவù÷ தளபுளா என்ன-உவளுகின்ற கெண்டை நடுங்கும்; கிளிகுயில் வண்டெல்லாம் தொண்டை நடுங்கும் தொடர்ந்து. |
125 |
அல்லியை
வெறுக்கும் பலாவைப் பாடும் வண்டு
மூடிய அல்லிக்கு
மொய்க்காமல் தாமரைக்குப் பாடிய வண்டு பலாமரத்தை-நாடியதன் பேருக்கும் தன்பெரிய பிள்ளைக்கும் முள்ளுக்கும் வேருக்கும் பாடல் வியப்பு; |
130 |
முத்துக்கு முல்லைச் சிரிப்பு நிகர்!
என்றுக்கு வெண்முருக்கும் பூநிகர்! ஏழிசை மன்றுக்கு வண்டுநிகர்! வானிமிர்ந்த-கொன்றைப்பூங் கொத்துக்குப் பொற்காசின் கோவைநிகர்! முற்றுநிகர் முத்துக்கு முல்லைச் சிரிப்பு! |
135 |
நெடுந்தொலைவிலிருந்து ஓர் ஒலி!
அண்டுமலர்ச்
சோலை அழகு வரிசையெல்லாம் கண்டுவரும் போதுதன் காதினிலே-நண்டு நிகர்அங்கை சேர்த்து நெடுந்தொலை ஆய்ந்து பகர்வாள்தன் பாங்கியைப் பார்த்து |
140 |
உதய
குமாரன் தேரொலி
ஓரொலி
கேளாய் உதைய குமரனவன் தேரொலி போலும்! தெரிவைஎன்-பேரில் விருப்புடையான் என்பர் விளைவறியேன்; நெஞ்சில் நெருப்புடையேன் என்றாள் நிலவு. |
மணிமேகலையே
பளிங்கு மாளிகையின் உள்ளே போய்விடு
கேட்பது
தேரின்மணி ஓசைதான் கேள்உன்னை மீட்பது தேரின் மணிமேகலையே-வாட்போர் உதையன்பால் தோன்றாதே மாளிகையின் உட்போ இதையன்பால் ஏற்கஎன்றாள். |
145 |
பறந்தோடினாள்
பச்சை மயில்
ðறந்திட்டாள்
பச்சை மயிலனையாள் ஓடித் திறந்த பளிக்கறை சேர்ந்தாள்-சிறந்த உதையன் மணித்தேரும் உற்றது பாங்கி அதையும்கண் டாள்உரைப்பாள் அங்கு. |
150 |
அவன்
மட்டச்சரக்கை என்னிடம் விற்கட்டும்
பளிக்கறையில்
சென்றாயா? தாழிடுவாய்! பச்சைக் கிளிக்கறைவ தைப்போல் கிளத்தேன்-வெளிப்புறத்தில் ஐந்துவிற்க டைத்தொலைவில் நானிற்பேன் ஆள்என்பால் வந்துவிற்க மட்டச் சரக்கு. |
155 |
உதயகுமரன்
வந்து, 'நோய்க்கு மருந்து
வாங்கிவா' என்கின்றான்
வாங்கிவா' என்கின்றான்
நிறுத்தைய
என்னத், தேரோட்டி நிறுத்தச் சிறுத்தை குதித்துச் செவியை-உறுத்தவே பாங்கிõ£ மேகலையுன் பாங்குள்ளாள் என்நோய்க்கு வாங்கிவா என்றாù¢ மருந்து. |
160 |
உனக்கு
அறிவுறுத்த என்னால் முடியுமா?
நரைமுடித்து
நல்லிளமை நாணி நடுவின் உரைமுடித்தோற் குற்ற மருக!-விரைவில் அரசுக் கியலும் அறிவும் தரப்பெண் ºரசுக் கியலுமா முன்? |
காமம்
ஒரு தீ !
ஆயினும்
ஒன்றுகேள் ஆடவர்க் குக்காம நோயினும் மாப்பெருநோய் இல்லை-தீயினும் தீயது தீண்டாத போதினும் தீய்த்தலால்! நீயது நன்று நினை |
165 |
பெண்ணழகு
நிலையற்றது
தோலழ கெù¢ப
திளமை தொலையி இல்லை மேலழ காடை அணியாலாம்-ஞாலத் திதுகொண்டு மேலோர் இடர்கொள்ளார் என்றால் எதுகொண்டிங் கெய்தினை நீ |
170 |
உள்ளே
உலவும் மணிமேகலையை உதயன்
கண்டு விட்டான்
கண்டு விட்டான்
என்றிளங்
கோவுக்கு மங்கைஇது சொல்லுகையில் நின்றிளங் கால்நோவு நீளாமல்-பின்துறையை நீங்கு பவளப் பளிக்கறைக்குள் நின்றாள்ஓர் பாங்கு பவளக் கொடி |
175 |
உள்ளே
புக வாயில் தெரியவில்லை
வெளிக்கறி
விக்கும் அகத்தையெலாம் அந்தப் பளிக்கறைò¤ற் பாவையைப் பார்த்தான்-கிளிக்கறையா? தூயில் தனைஅடைவாய் தூயோயென் றோடினான் வாயில் தனையறியான் மற்று. |
180 |
மணிமேகலையா? ஓவியமா?
நற்பளிங்கின் உள்ளேநான் நண்ணல் அரிதேயோ! நிற்பளிங்கு மாரிழையோ! ஓவியமோ-பொற்கொடியே எத்திறத்தள் மேகலைதான் என்றான் சுதமதியாள் அத்திறத்தைக் கூறுவாள் ஆங்கு. |
மணிமேகலை
மனத்தை மாற்ற நீ யார்?
நோற்றல் உடையா÷¢; நுவல்காமம் நண்ணாத ஆற்றல் உடையஆள்; அவளுள்ளம்-மாற்றவே நீயார்என் றாள்பாங்கி; நின்ற உதையனும் நீயார்என் றான்கொதித்து நின்று. |
185 |
சுதமதி
வரலாறு
மாருத வேகன்
மடக்கி எனைமணந்தான் தேருதல் செய்யவே என்தந்தை-ஊரெலாம் தேடினான் காவிரி தென்கடல் சேரிடத்து நாடினான் நான்கண்டேன் அங்கு. |
190 |
மேலும்
கூறுதல்
சங்க தருமனால் புத்தன் சமயத்துச் சங்கம் அடைந்தேன்! தருமங்கள்-தங்குமொரு நாவே, பிறிது நவிலலும் இல்லைஇளங் கோவேவாழ் கென்றாள் பூங்கொம்பு. |
195 |
மணிமேகலையை
நான் அடைவது சின்னது
இன்னது கேட்ட
உதையன் எனக்கிது சின்னது! சென்றுசித்தி ராபதியால்-பொன்னதுவே மின்னதுவே என்னுமணி மேகலையை நானடைவேன் என்னதுவே இன்பமென் றான். |
200 |
என்
மனம் அவன்மேற் சென்றது பிழை
வாடி உதையன்
மறைந்தபின் மற்றந்த ஆடி அறைதிறந்து பாங்கியை-நாடி இழந்தையோ நின்றேன் எதிரிபால் நெஞ்சைè¢ குழந்தையோ அன்னதென்றாள் கொம்பு. |
என்மனம்
அவன்மேற் சென்றது மீண்டது
மின்றிறந்து
மூடினாற் போலுமிம் மெல்லியுள்ளம் சென்றது மீண்ட தெனினுமந்-நன்றிலன்மேல் போமம் மனந்தான்என் கற்பைப் புரைசெய்தால் காமம் வலிதோ கழறு |
205 |
காமம்
ஒருபுறம் உணர்வு ஒருபுறம்
புணர்வு நிலைதேடிப்
போனது சாமா றுணர்வு நிலைபெறுதல் உண்டோ?-கிணறு பலிகேட்கும் ஓர்பால் பழிதீர் நிலைகூம் ஒலிகேட்கும் ஓர்பால் செவி, |
210 |
மற்றொரு
மணிமேகலை நற்றவ முதியோன்
மணிமே கலைஎன்ற
ஓர்முதியோள் வையம் மணிமே கலைஎன்ற மாப்பேர்-அணியும் பெரும்புகழும் ஆன தவப்பயனும் பெற்றோள் கரும்புகளின் கண்ணேர்வந் தாள். |
215 |
முதியோளைப்
பணிந்தாள் மணிமேகலை
அன்னை அடிபணிந்தார்
ஆன அருளேஎம் மின்னை அடைந்தோம்என் றார்இருவர்-பின்னையே என்ன துயர்என்றாள் எல்லாம் துறந்தாளும் அன்னதுயர் பாங்கிசொன்னாள் அங்கு. |
220 |
சுதமதி
சொன்னாள்
பாவெடுக்கப்
பாவலரும் பார்க்குமணி மேகலைதான் பூவெடுக்க வந்திட்ட போதமுதை-நாவெடுக்கக் காலெடுத்தான்: வாயிற் கதவறியான்; தேரேறிக் கோலெடுத்தான் அவ்விளங்கோ. |
சுதமதி
தொடர்ந்து சொல்கின்றாள்
காண்பேன்
அவள்திறத்தைக் கண்டமட்டும் எனதிறந்தான் வீண்போதல் இல்லை விளம்புங்கால்-ஆண்சிங்கம் என்றுந்தித் தேர்ஏறி ஏகும் உதையன் என்றுந் திருந்தான்என்றாள். |
225 |
உதயகுமரனிடம்
அகப்படாமல் சக்கரவாளக்
கோட்டம் போய்விடு
கோட்டம் போய்விடு
பின்னும்
அற்றே பின்னு மற்றே பித்தனுளம்! காமந்தான் இன்னுமற்றே போகவில்லை என்செய்வாய்?-நன்னுதல் அக்கர வாளன் அகப்படுத்தல் இல்லாமல் சக்கரவா ளக்கோட்டñ£ சார். |
230 |
சக்கரவாளக்
கோட்டமா?
என்று முதியோள்
இயம்பச் சுதமதி ஒன்றுக்கு வேறொருபேர் ஒன்றுமா?-தொன்றுபிணக் கோட்டமா சக்கரவா ளக்கோட்டமா இதுவே நாட்டமா னாள்பாங்கி நன்று. |
235 |
சக்கரவாளக்
கோட்டத்தின் கதை
சுடுகாட்டுக்
கோட்டத்தை வேறு பெயரி னொடுகாட்டல் ஏனோ உரைத்து-விடுகென்று பாங்கி பகர முதியோள் நெடிதுரைக்க வாங்கி மகிழ்வாள் மணி. |
240 |
கதை
நடுவில் தூக்கம்
காவிரிப்பூம்
பட்டினமும் காடும் பிறவுமவள் நாவிரிப்பப் பாங்கி நடுச்செவியேற்-றியாவரிதை வாங்கிக் கிடப்பார்கள் என்பாள்போல் மண்ணிலுற்றத் தூங்கிக் கிடந்தாள்மெய் சோர்ந்து |
உதையன்
தொல்லை ஒழிந்தது
துணிபல்ல
வம்மான் துயர்எய்தல் என்றே மணிபல்ல வம்சேர்த்தாள்! வாட்டம்-தணித்தாள். தணிமே கலைதான்! மணிமே கலையைப் பிணியானப் பித்தன் இனி. |
245 |
நடுத்திட்டில்
விட்டு எடுத்தாள் ஓட்டம் முதியோள்
பன்னாள்
நடத்தும் படுகடலை நன்னாவாய் தன்னால் தவிரத்துமணி மேகலையைத்-தென்பால் கடனடுவில் சோர்வுற்ற கண்ணாளை விட்டே உடனகன்றாள் ஓதுமுதி யோள். |
250 |
சுதமதியிடம்
முதியோள்
எங்குற்றாள்
மேகலைதான் என்றிருந்தாள் பாங்கிதான் அங்குற்றாள் மாமுதியோள் அன்புடையாய்-மங்காப் பழமை மணிபல்லவம் சேர்த்தேன் பார்ஓர் கிழமையினில் மீள்வாள் கிளி. |
சுதமதிக்கு
முதியோள்
மன்னன் மகனுக்கும் வாய்மை பலகூறி அன்னம் தனையணுகல் ஆகாதென்-றின்னம் பலவும் பகர்ந்தேன்நற் பாங்கி உனக்குச் சிலவும் தெரிவிப்பேன் கேள் |
260 |
அம்மாவிடம்
இதை அறிவி
ஊறு தவிர்ந்துமணி
மேகலைஇவ் வூர்வருங்கால் வேறு வடிவமே மேற்கொளினும்-கூறின் உனக்°ñ¢ ஒளியாள்; இதனை அவள்தாய் தனக்கும் ஒளியாமற் சாற்று |
என்பேர்தான்
மணிமேகலை
மாதவி பெற்ற
மகளுக்கென் பேரையே கோதவி கோவலன் வைத்திட்டாù¢-ஈதுரைப்பாய் மாதவிக்கு நாளும் மணிமே கலைமனத்தின் தீதவிப்பாள் என்றதையும் செப்பு. |
265 |
சுதமதி
மாதவிக்கு!
என்று மொழிந்தவள்தான்
ஏகச் சுதமதியும் சென்று தெரிவித்தாள் தேன்மொழிக்கே-கன்றைப் பிரிந்தா வருந்தாதா? பெண்ணைப் பிரிந்தால் வருத்தாதா பெற்ற மனம்? |
270 |
மணிபல்லவத்தில்
மணிபல்
லவத்தில் மணலில் துயின்ற மணிமே கலைகண் மலர்ந்தாள்-துணிவிழந்தாள் பண்டறி யாதனவே பார்த்தாள் உறவாரைக் கண்டறி யாதகற் பண்டு. |
275 |
முதியோள்
விட்டுப்போனது அறமா?
ஆங்கிருந்தேன்
என்னை அழைத்திங்கு வந்திடுமுன் தூங்கி¢னேù¢! அந்நேரம் தூரத்தே-ஏங்கவிட்டுச் செல்லல் அறமா? செயத்தக்க இன்னவெனச் சொல்லல் அறமா தொடர்ந்து |
280 |
கண்
காணத இடத்தில் கலங்குகின்றேன்
தேரு மிலாது
தெருவு மிலாதுழையார் யாரு மிலாதிருக்கும் இவ்விடத்தில்-சோருகின்ற கண்ணீரும் நானும் கதறுங்கால் என்உறவீர் கண்ணீரோ சற்றும் எனை? |
அம்மாவும்
உதவவில்லை; அப்பாவையும்
கண்டதில்லை
கண்டதில்லை
பழிகூறிக்
கொன்ற ஒரு பாண்டியனை உண்மை வழிகூறி ñ£ளப் புரிந்த-எழிலான அப்பாவை யுங்காணேன் அன்றும்காணேன் இன்று அப்பாவை யுங்காணே னால். |
285 |
மரமா
தேறுதல் கூறும்? விலங்கா தேறுதல் கூறும்?
தீமையாய்
இங்குத் திரிகின்றேன் தெங்குபலா ஊமையாய் இங்கிருக்கும்; ஒன்றுரையா-ஆமையும் புள்ளிழுத்துக் கொள்ளும் புனற்கரைமா உண்டுதலை உள்ளிழுத்துக் கொள்ளும்எனை ஓர்ந்து. |
290 |
கோலெடுத்துக்
கொண்டு குறுக்கில் ஓடுகின்றது குரங்கு
தேனோடும்
பூவிற் சிறையோடும்! புல்லுக்கு மானோடும் கொக்கு மடையோடும்!-நானோடி மேலெடுக்கும் வேலை எதென் றேன்குறுக்கே முள்வேலங் கோலெடுக்கும் ஓடும் குரங்கு |
295 |
நண்டும்
வண்டும் விளையாடும்! நானுமா
விளையாடுவேன்!
விளையாடுவேன்!
நண்டு விளையாடும்;
நன்மா நிழற்காரை கண்டு மயிலாடும்; காவித்தேன்-மொண்டு விளையாடும் வண்டு; விளையாட வாநான்! களையா டினஎன்றன் கண். |
300 |
முதியோள்
வந்தாள்
திட்டில்
அழுவாள் சிரிப்புக் கரைகாண எட்டி முதியோள் எடுத்த¬íத்துè¢-கட்டிக் கரும்பே உதைய னிடமிருந்து காத்தேன் திரும்பநான் சொன்னபடி செய். |
தவð¢பெரியோர்
அறம்உரையார் மிகச்சிறியை என்று
புத்தன்
புகன்ற திருவறத்தை நீ அடைதல் கத்தன் றென உணர்க கண்மணியே-புத்தம் புதிய இளமேனி காணும் புலவர் முதிய மறைஉறையார் முன். |
305 |
நினைத்த
உருவம் கொள்ளும் புனைவினை
நினையும்
உருவத்தை நீயடையத் தக்க புனைவினை ஒன்று புகல்வேன்-தினையும் மறந்தார்க்குத் தோதுபடல் இல்லை உனைப்போல் துறந்தார்க்குத் தோது படும். |
310 |
புனைவினை
புகன்றாள் முதியோள்
பன்னாட்டார்
ஆடவர் பாவையர் பூண்களும் பன்னாளும் மாறிவரும் பாங்குகளும்-பன்மொழியும் மூத்தார் இளையார் நடைப்பாங்கும் முற்றிலும் மூத்தாள் மொழிந்தாள் அவட்கு. |
315 |
உறுப்புக்களை
மாற்றும் முறை
நோக்குப்
பலவும் நுதல்பலவும் வாய்பலவும் மூக்குப் பலவும் முனைநடுவாம்-நாக்குப் பலவும் பலரின் உருக்காட்டப் பின்னும் பலவும் பகர்ந்தாள் அவட்கு. |
320 |
முதியோள்
மறைந்தாள்
பலவாம் புனைவினை பாவைக்குச் சொல்லி நிலவாம் முகத்தாளே நேரிங்-குலவியிரு புத்தபீ டிகையுé¢காண் கோமுகியும் காண்; போய்ஊர் நத்துகஎன் றாள்மறைந்தாள் நன்று. |
தீவதிலகை
காணப்பட்டாள்
காலை மணற்குன்றைக்
கண்டு நடக்கையிலே தீவ திலகைஎனும் தேமொழியின்-நாவில் அமுதெடுத்தால் அன்ன தமிழெடுத்தாள்! கண்ணின் இமையின் இணைப்பெடுத்தாள் பெண். |
325 |
தீவதிலகைக்கு
மணிமேகலை
கப்பல்
கவிழ்ந்ததனால் கண்டமணி பல்லவத்தில் தப்பல் நினைத்துத் îù¤த்தடைந்த-தொப்பது நின் தோற்றம் நீ யாரென்னத் தோகை வரலாறு மாற்றம் இலாதுரைத்தாள் மற்று. |
330 |
தீவதிலகை»ñ¢
மணிமேகலையும்
முத்தன்ன
வெண்ணகையார் முற்சென்றார் அங்கிருந்த புத்தனார் பீடிகையில் போதுவிழி-வைத்தனர் நாமுகிழ்த்தாள் நன்றதன்சீர் தீவ திலகைதான்! கோமுகியும் காட்டினாள் கொம்பு. |
335 |
கோமுகிப்
பொய்கையில் அமுத சுரபி
உண்ணாடிக்
கண்டால்தன் உள்ளதுகாட்டும் தென்னீர்க் கண்ணாடிப் பொய்கைக் கரைநோக்க-எண்முப் பதக்கும் பிடிக்கும் பழங்கலம் ஒன்று மிதக்கும் பிடிக்கும் அதை மின். |
340 |
அமுதசுரபியுடன்
திரும்புதல்
கமழ்வது
தாமரை, காணிற் கலம் அஃது அமுத சுரபிஎன்றாள் அன்னம்-அமைய இருகையில் ஏந்திய மங்கை திரும்பி வருகையில் மற்றுங்கேட் டாள்! |
தீவதிலகை
செப்பினாள்
நீபத்து
நூறுமுறை நேரிற்கா ணுங்கலத்தை ஆபுத்திரன் இட்டான் அந்நீரில்- நீ போய் அறவணர்பால் கேட்பாய் அதன்வரலா றென்றாள் திறவணத்தாள் தீவதில கை. |
345 |
அந்தக்கலந்தான்
இந்தக் கலம்
இட்டுப்
புகழ்பெற்ற ஏழைதான் ஏற்றசோ றிட்டுக் கø¤பிசைந் தீந்ததுவும்-இட்டே எடுக்க எடுக் கக்குறையா தென்றதுவும் பொய்கை அடுத்ததுவும் இக்கலமே ஆம்; |
350 |
பசியுள்ள
இடத்தில் புசி என்று போ
அறியாமை
வேரோ டழியாது? வாழ்வை எறியாமைத் தீப்பசிதான் ஏகா-துறவேகேள் ஓரூரி லாவிடினும் ஓருரில் உண்டுபசி நேர்ந்ததும் அப்பிí¤யை நீக்கு. |
355 |
வையப்
புகழ் உனக்கே
இளமையில்
எய்துமோர் இன்பம் வெறுத்தாய்! வளமையிற் போதல் மடக்கி-உளம்காத்தாய்! வையப் புகழுனக்கே வாய்திறந்தால் கோடிவரும் வெய்ய பசியை விலக்கு. |
360 |
ஆபுத்திரன்
போல் அளி
வயிற்றுப்
பê¤நீக்கு வாழ்வறியார் தூக்குக் கயிற்றை விழலாக்கு! கண்ணை-எயிற்றை மகிழ் வேபுகுத்தாய் நீஉன்றன் வாழ்நா ளெலாமந்த ஆபுத் திரன்போலம் மா. |
ஏழைக்è¤டுவதே
தவம்
வேலையில்லை
தந்தைக்கு! வெள்ளைநூல் அன்னையிடம் பாலில்லை பச்சைக் குழந்தைக்கே-தாலிவிற்றால் வாங்குவா ரில்லை? அங்குவாட்டும் பசிநீக்கித் தாங்குவார் தாம்தவம்செய் வார். |
365 |
அறத்தின்
சாறு
சோறில்லை
என்பார்க்குச் சோறு தருவதுதான் கூறறங்க ளின்சாற்றுக் கூட்டம்மா-வேறேதான் எங்குண்டம் மாபசிக்கே ஈர்ம்பழஞ்சோ றிட்டுவக்கும் அங்°í¢டம் மாநல் லறம். |
370 |
இன்றியமையா
நிலையில் இடும் சோற்றுக்குச்
சாவு அல்லது வாழ்வு
சாவு அல்லது வாழ்வு
கூன்மாடு
விற்றுக் குதிரைவாங் கற்கென்றன் கான்மாடு நின்றார்க்குக் காசளிக்க-நான்மாட்டேன் இன்றி யமையா நிலையில் இடும்சோற்றுக் கொன்றுசாக் காடொன்று வாழ்வு. |
375 |
தீவதிலகை
சென்றாள்
உயிர்வாழ்வேன்
மக்கள் உறுபசி தீர்ப்பேன் செயிர்தீரச் செப்பியது கேட்டேன்-வெயிற்கு நிழல்அவ் வடிகள்பால் செலவேன் நினைவு தொழல்என்றாள் தோகைசென் றாள், |
380 |
மாதவி
மகளைக் கண்டால்
மாதவி யாழ்
துù¢பச் சுதமதிதம் வாயினின் றேதவியாழ் பெற்ற இடர்என்றே-தீதுறுவார் சோறுபெற்ற தூய்கலத்தா ளைப்பெற்றார் முப்பழத்தின் சாறுபெற்றார் தாவி யணைத்து. |
அறவண
அடிகளைப் பணிந்தார்கள்
ஆய அனைத்தையுமே
அன்னையிடம் பாங்கியிடம் ஏய உரைத்தாள் இளமங்கை-தூய அறவணைத்தார் பக்கல் அணிகியே தாளில் உறவணைத்தார் உச்சந் தலை. |
385 |
அறவணத்தார்
அறிவித்தார்
அடிகள் உரைப்பார்;
அப்புத்த நெறியைக் குடிகள் தொடர்தல் குறைய-மிடிகள் மலிய மறவலி ஆர்ந்தது மக்கள் மெல்லியலா னார்அதன் மேல். |
390 |
புத்தநெறி
உலகில் பரவவேண்டும்
கொடிதுசேர்
கோட்டையில் புத்த நெறிதான் கடிதுசே ராதே எனினும்-நெடிது முயலுவேன் நீயும் முயலுக நன்கு பயிலுக என்றார் பரிந்து. |
395 |
ஆபுத்திரன் பற்றி அறவண அடிகள்
மன்பதைக்கு நேரும் பசிப்பிணி மாற்றுக! பின்பதைக் கண்டு தரும்மீ-தென்பதை நீபெற் றிடலாம்! நிகழ்த்துகின் றேனினி ஆபுத்தி ரன்சீரென் றார். |
400 |
ஆபுத்திரன் புகழ் விண்ணினும் பெரிது
ஒழுக்க மெனுநல் லுறுதுணைக் கேபே ரிழுக்கம் புரிவார்க் கெதிர்ப்பு-முழக்கம் புரிந்திட்ட ஆமகன் பெற்ற புகழ்தான் விரிந்திட்ட விண்ணிற் பெரிது. |
கொலை
வேள்வியை எதிர்த்தவன் ஆபுத்திரன்
«õள்வி
எனஉரைத்து மாடாடு வெட்டலும் கேள்வியே இன்றிக் கிளத்தலும்-நீள்வியான் ஆமகன் பெற்ற புகழ்தன்னை அந்நாளில் கோமகன் பெற்றானா கூறு. |
5 |
எத்தீமைக்கும்
ஆபுத்திரன் இளைத்து விடவில்லை
அறத்தினைச்
சார்ந்தே அடைத்த புகழை அறத்தினுக் கேசெல வாக்கும்-திறத்தைக் குறுகிய கொள்கையார் கொல்ல நினைத்தார் இறுகிய நெஞ்சா இறும்? |
10 |
பிற்போக்காளரின்
தலைவன் ஆபுத்திரனைக் கெடுக்க
நரிவேலை செய்தான்
நரிவேலை செய்தான்
இருளில்
உலகை நடத்துவார்க் கேந்தல் அருளில் நடந்தானை அண்டி-மருளில் நடந்த நரிவேலை செய்ததும் உண்டு கடப்பானா கொண்ட கருத்து. |
15 |
ஆபுத்திரன் வரலாறெல்லாம் சொல்லி முடிக்கப்பட்டது
என்று சிறப்பிடங்கள்
சுட்டி அறவணர் நன்று முதலிருந் î¦றுவரை-ஒன்றவே ஆமகனின் அன்பு வரலாறெ லாம்சொல்லிப் போமகளே என்றார்அப் போது. |
20 |
மணிமேகலை பிச்சைக்காரியானாள்
ஏன்று கலம்ஏந்தி
மேகலைதான் அன்னவரை மூன்று முறைசுற்றி முன்வணங்கி-மான்போல் மருண்ட வழிநடந்தாள் மற்றவரை விட்டே! தெருண்டு வழிநடக்கும் தேன். |
எல்லோரும்
மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டார்கள்
ஊர்ப்பிச்சைக்
காரி உருவடைந்தாள் அவ்வுருவைச் சேர்ப்பித்தாள் நல்ல தெருவழியே-வார்ப்படத்துத் தங்கப் படிவம் தரையில் வரக்கண்டோர் அங்èப் படியேசூழ்ந் தார். |
30 |
எல்லோரும் வரவேற்கிறார்கள்
கண்ணம்மா உன்வரவு! கைநிறைய இட்டிடுவோம் உண்ணம்மா என்றேஓ ராயிரம்பேர்-வண்ணம் இருக்கும் படிவத்தார் சொன்னார்கள் சற்றே இருக்கும் படிசொன்னாள் யாழ். |
35 |
ஆதிரை வீட்டில் மணிமேகலை
கற்புப்
புகழ்வாய்ந்தோள் உள்ளாளோ அன்னவளின் இற்புக்கு முன்இடக்கேட் பாய்என்ற-சொற்பெருக்கிக் காயசண்டி கைஎன்பாள் ஆதிரைஇல் காட்டினாள் போயறங்கேட் டாள்சுடர்ப் பொன். |
40 |
ஆதிரை வரவேற்பு
கையிற்
கலத்தோடும் கண்ணில் அருளோடும் பொய்யில் துறவென்னும் பூட்கையொடும்-துய்யமணி மேகலையை ஆதிரை கண்டாள் மிகமகிழ்ந்தாள் ஆகஅம் மாஎன்றாள் ஆய்ந்து. |
ஆதிரை கறியோடு சோறிட்டாள்
தேவர் உலகம்
சிறப்பென்னும் ஆரியர்சொல் ஈவார் உலகம் இழிவாக்கப்-பாவை கலமே நிறையக் கறியொடு சோறிட்டாள் இலமே இலம்என்னு மாறு. |
45 |
ஆதிரை வாழ்த்து
அழகும் இளமையும்
எண்ணாய் துறவே பழகும் இளையாய் பசுநெய்-ஒழுகக் கலத்திலிட் டேவிரு கையாலும் சோறு நிலத்து நிலைக்கநின் சீர். |
50 |
ஆதிரை இட்ட அமிழ்து
கண்டனர்
ஊரார் கடிதுகேட் டார்பாரோர் மண்டினோர் எல்லாரும் வாழ்த்தினார்-அண்டுமுயிர் ஏதிரை என்னாமைக் கிங்கு முதன்மையாம் ஆதிரை இட்ட அமிழ்து. |
55 |
மணிமேகலை எல்லார்க்கும் இட்டாள்
இலம்நிறைந்தார்க்கல்லாம்
மனம்நிறைந்த தென்னக் கலம்நிறைந்து போனது கண்டு-நலம்நிறைத்தாள் வாரீர்உண் பீர்என்பாள் வந்துண்பார், பின்னும்இலார் வாரீர்என் பாள்உண்பார் வந்து. |
60 |
காயசண்டிகை சொன்னாள்
காயசண்டி
கைஎன்பாள் மாதõ¤யின் கண்ணாள்முன் நீயறத்தின் செல்வியென்று நேர்வந்து-தாயேநான் யானைத்தீ என்னும் பசியுடையேன் வற்றாஉன் தேனத்தீ னேன்என்றாள் தேர்ந்து. |
யானைî¢ தீ என்பதென்ன?
வயிறுநிறைந்
தாலும் மனநிறையார்க் குள்ள இயல்பின்பேர் யானைத்தீ என்பர்-துயரறுக சாப்பிடுநீ சாப்பிடு நீ சாப்பிட்டு நன்னிலையைக் கூப்பிடுநீ என்ன குறை? |
65 |
சொல்லால் பாதி தொல்லை போயிற்று
என்றுரைத்தாள்
மேகலைதான் ஈபவளே சொன்னதனால் நின்றபிணி யிற்பாதி நீங்கிற்றாம்-நன்றுண்டாள் மேலுண்டாள் மற்றுண்டாள் மேன்மேலுண் டாள்நாட்கள் நாலுண்டாள் நன்னிலையுண் டாள். |
70 |
காயசண்டிகை நோயகன்றது
ஆறென்றால் ஆறாத யானைத்தீ ஆறியது! சோறென்றால் முப்போதே துய்க்கின்றேன்-கூறென்றால் பட்ட தொல்லை பஞ்சு படாதம்மா! பெற்று விட்டேன் விட்டதொல்லை யாலே மிடல். |
75 |
காயசண்டிகை கணவனை நொந்தாள்
என்னை உடையான்
எனக்குநோய் என்றவுடன் தன்னை உடையானைத் தான்பிரிந்தான்-பின்னுமவன் காவிரிப்பூம் பட்டினத்தில் காத்திருந்தால் சான்றோர்கள் நாவிரிப்பார் நன்றாம்என் றான். |
80 |
என் கணவர் ஒரு மரம்
சிற்றுளியும்
ïù¢மை சிதைந்தால் சிதைவகற்றிப் பொற்றுளிபோல் போற்றத் தவறிடார்-நற்றொழிலோர்! தீராநோய் எங்கேனும் தீர்த்துவா என்றானை ஆராயின் அன்னோன் மரம். |
அறம் எது!
அறஞ்சென்று கெட்டாரு மில்லை அறத்தின் புறஞ்சென்று வாழ்ந்தாரு மில்லை-பறந்த கிளிவாய்ப் பழம்நழுகிக் கீழ்ப்பசித்தோன் வாயில் துளிவீழல் தூயற மன்று. |
90 |
நல்லறம்
அறிந்து
பசித்தோர்க் கருளல் அறமாம் முறிந்த மனத்தாலே மூன்று-முøஞ்சோறு போடல் அறமன்றே என்று புரிந்தாய் வாடல்இங் கேன்என்றாள் மாது. |
95 |
உலக அறவி பற்றிக் காயசண்டிகை
உலக அறவி
புகுந்தே உலகின் கலகப் பசிநோய் களைந்து-நிலவுகவே என்றுசெல் லும்காயசண்டிகையை இன்னமுதே நன்றுசெல்க என்றாள் நகை. |
100 |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மணிமேகலை வெண்பா - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - மணிமேகலை, முதியோள், மேகலைதான், பாங்கி, ¤, ஆபுத்திரன், சுதமதி, உதையன், பலவும், மணிமேகலையும், மணிமேகலையை, அன்னம், சென்று, காயசண்டிகை, புனைவினை, ñ, வாயில், தொல்லை, தீவதிலகை, யானைத்தீ, விளையாடும், தொடர்ந்து, சக்கரவாளக், சென்றது, சுதமதியும், பாங்கியிடம், கோவலன், என்றாள், மக்கள், பெரிது, அந்நேரம், செப்பினாள், அடிகள், பாங்கியும், வரலாறு, உவவனம், õ, விடுதலை, î, குரங்கு