புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - குடும்ப விளக்கு - ஐந்தாம் பகுதி
முதியோர் காதல்
அறுசீர் விருத்தம்
மூத்த பிள்ளை முதியவரோடு
வேடப்பன் தம்பி யான வேடப்பன் வாழ்ந் திருந்த வேடப்ப னோ,தன் தந்தை பீடுற வாழு கின்றான். |
முதியோருக்கு மருமகள் தொண்டு
வேடப்பன் மனைவி யான வேடப்பன் தந்தை தாய்க்கு வாடுதல் சிறிதும் இன்றி ஆடிய பம்ப ரங்கள் |
தலைக்கடை அறையில் மணவழகர் தங்கம்
தலைக்கடை அறைக்குள் அந்தத் இலக்கியம் படிப்பார்! இன்பத் உலர்ந்தபூங் கொடிபோல் தங்கத்(து) பலஆய்வார்; துணைவர் கேட்பார்; |
மணவழகர் உடல்நிலை
மணவழ கர்க்கு முன்போல் துணைவிழி, ஒளியு ம் குன்றக் பணையுடல், சருகு! வாயிற் உணவெலாம்! பாலின் கஞ்சி; |
தங்கத்தம்மையார் உடல்நிலை
நன்னிலாக் கதிர்போல் கூந்தல் முன்னிலா முகில்உண் டாற்போல் அன்புடல் அறத்தால் தோய்ந்த மன்னுசீர் அன்னாள் மெய்யோ |
முதியோர் அறைக்கு மக்கள் பேரர் வந்து போவார்கள்
இருபெரு முதியோர் தம்மைத் பெரும்பேறு பெற்ற தன்றோ! வருவார்கள்; அறங்கேட் பார்கள். வருவார்கள் அளவ ளாவி |
இரு முதியோர் நிரம்பிய உள்ளம்
மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம் எம்தக்க கடன்மு டித்தோம் முந்துறச் சுற்றத் தார்க்கும் இந்தநாள் வரைக்கும் வாய்மை |
நாட்டுக்கு நலம் செய்தோம்
இந்நாட்டின் நலனுக் காக எந்நாளும் பிறர்க்குத் தீமை சின்னதோர் நன்று செய்தார் இன்னிசை பாடும் அன்னார் |
முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்
விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில் இதற்குமுன் இளமை என்ப கதையாகிக் கனவாய்ப் போகும் முதியோளே வாழு கின்றாள் |
இருக்கின்றாள் அது எனக்கின்பம்
புதுமலர் அல்ல; காய்ந்த சதிராடும் நடையாள் அல்லள் மதியல்ல முகம்அ வட்கு எதுஎனக் கின்பம் நல்கும்? |
நினைக்கின்றாள் நினைக்கின்றேன் நான்
இனிக்கின்ற தமிழை அன்னாள் தனித்துள்ளேன் ஒருபால்! அன்னாள் எனைக்கண்டும், என்னைத் தொட்டும் நினைக்கின்றாள், நினைக்கின் றேன்நான்; |
அன்புள்ளம் காணுகின்றேன்
அகத்தின்பம் காணுகின்றேன்
அகத்தின்பம் காணுகின்றேன்
என்பும்நற் றோலும் வற்ற, தன்புது மேனி, காலத் என்முது விழிகா ணற்கும் அன்புள்ளம் காணு கின்றேன்! பேரர் அம்மாயி என்றழைப்பர் அது கேட்பேன் இன்பம் செய்யும் செம்மா துளைபி ளந்து அம்மாது களிக்கச் செய்வாள் அம்மணி நகைப்பும் கேளேன் "அம்மாயீ" என்பார்! கேட்பேன் |
அன்னை என்றழைப்பர் மக்கள்
இன்புறும் என்றன் நெஞ்சம்
இன்புறும் என்றன் நெஞ்சம்
இன்னிழை பூண்டி ருப்பாள் நன்மொழி ஒன்று சொல்வாள் அன்னவை அந்நாள்! இந்நாள் 'அன்னாய்' என் றழைப்பார் மக்கள் |
அவள் உள்ள உலகம்
எனக்கு உவப்பூட்டும்
எனக்கு உவப்பூட்டும்
உயிர்ப்பினை நிலைநி றுத்தும் செயிர்ப்பற நீத்தார்* செய்வார்; முயற்சியிற் காப்பார் மன்னர். உயிர்வாழ்வாள் ஆத லற்றான் (*நீத்தார் - துறந்தார்) |
அவர் வாழ்வது
அவள்மேல் வைத்த காதல்
அவள்மேல் வைத்த காதல்
வாழாது வாழ்ந்து மூத்த ஆழாழிப் புனல்அ சைவை, வீழுற அதனில் வீழ்த்தும் காழுற மனத்தில் வைத்த |
என் நெஞ்ச மெத்தையில் துயிலுகின்றான்
காம்பரிந் திட்ட பூவைக் பாம்புரி போலும் மேன்மைப் தீம்பாலைப் பருகி அன்பன் மேம்பாட்டிற் குறைவோ? நெஞ்ச |
நெஞ்சக் காட்டில் உலவும் மான்
பாங்குற மணியும் பொன்னும் ஈங்கிந்தத் தாழ்வா ரத்தில் ஏங்குமா றில்லை இன்றும் நீங்காமான் போல்என் நெஞ்சக் |
என் நெஞ்சில் தேன்மழை அவன்
மெய்யுற வாய்சு வைக்க வெய்யசந் தனத்தோள் மோப்ப, ஐயன்பால் புலன்கள் ஐந்தால் பெய்கின்றான் என்நெஞ் சத்தில் |
அவனைச் சுமக்க மனம் ஓயாது
அறம்செய்த கையும் ஓயும் புறம்போன காலும் ஓயும்! திறம்கேட்ட காதும் ஓயும்! மறவனைச் சுமக்கும் என்றன் |
அயலவன் கண்படாமல் காத்து வந்தேன்
வெயில்பட்டால் உருகிப் போகும் பெயும்மழை பட்ட போதே புயல்பட்டால் நிலைகொள் ளாத அயலவள் கண்பட் டால்சீர் |
தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன்
தொப்பென்ற ஓசை கேட்டால் உப்பொன்று குறைந்தால் உண்ணல் ஒப்பெனில் ஒப்பா விட்டால் தப்பொன்றும் இன்றி என்றன் |
எத்தீமை நேருமோ? என்று நினைப்பாள் மூதாட்டி
தற்காத்துத் தற்கொண் டானைத் சொற்காத்துச் சோர்வி லாளே முற்சொன்ன படியே என்றன் எத்தீமை மனக்கு றைச்சல் |
எனக்குக் கொடுப்பதைத் தாத்தாவுக்குக் கொடு
அகவல்
பாட்டியே, சிறுமலைப் பழங்கள் இந்தா என்று பேரன் ஈய வந்தான். தம்பியே உன்றன் தாத்தா வுக்குக் கொடுபோ! என்று கூறிக் கொடுக்கப் போவதைக் கூர்ந்துநோக் குவளே! |
பொரிமாத் தந்தார் உண்டாள்
நாணிப்போனார் தம்மிடம்
நாணிப்போனார் தம்மிடம்
வலக்கால் குத்திட்டும், இடதுகால் மடித்தும், உட்கார்ந் திலக்கியம் உற்று நோக்கிடும் மணவழ கர்தம் மனையாள் நினைவாய்க் கணுக்கால் கையூன் றியபடி ஊன்றுகோல் துணையொடு தம்,தலை யணைக்கீழ் வைத்த பொதிந்த பொரிமாப் பொட்டணம் தூக்கி எழுந்தார். விழிப்புடன் விழுந்து விடாமே நடந்து,தம் துணைவியை நண்ணினார்.அப்போது மருமகள் நகைமுத்து வந்து, "மாமா என்ன வேண்டும்? ஏன் வந்தீர்கள்? என்னிடம் கூறினால் யான்செய் யேனா?" என்றாள். பொரிமா இடையில் மறைத்தும் தன்துணை மேலுள்ள அன்பை மறைத்தும் ஒன்று மில்லை ஒன்று மில்லை என்று சொல்லொணாத் துன்பம் எய்தினார்! மருகி போனாள். கிழவர் துணைவியின் அருகுபோய்ப் பொரிமா அவளிடம் நீட்டி உண்ணென்று வேண்டி நின்றார்! உண்டாள்; நாணிப் பிரிந்தார் உவந்தே! |
அவள் தனிச்செல்ல
மணவழகர் பொறார்
மணவழகர் பொறார்
தங்கம் கொல்லைக்குத் தனியே செல்வதை மணவழகு நோக்க மனது பொறாராய் மருகியை அழைப்பார்; மருகி வந்து,தன் துணைவிக்குத் துணைசெயக் கண்டால் தணிவார் தமது தணியா நெஞ்சமே. |
அவனுக்குத் தொண்டு செய்தலே அவளுக்கின்பம்
மணவழ கர்தாம் மறுபுறம் நகர்ந்தால் அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத் தட்டி, விரிப்பு மாற்றித் தலையணை உறைமாற் றுவாள் அவள்; மணந்தநாள் பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே. |
முன்னாள் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம்
இயம்புவாள்
ஒருநாள் மாலைப் பெருமூ தாட்டி நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம் மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்; செம்பில் எண்ணெயும் சீயக் காயும் ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன். "உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை எண்ணெய் தேய்க்க அனுப்புக" என்றார். "நானே அப்பணி நடத்துவேன்" என்றேன். "மானே, மெல்லிடை வஞ்சியே, நீபோய்க் கிளியுடன் பேசியும் ஒளியாழ் மிழற்றியும் களியுடன் இருப்பாய் கவலைஏன்?" என்றார். அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன். பின்னர்ஓர் பணிச்சி என்மணா ளர்க்கே எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய் தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே என்றன் மாமியார், "என்னன்பு மகனே, ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார். அதற்கென் மணாளர், "ஆம்அவள் என்னை எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள். ஒப்பேன் என்றேன். உடனே உட்சென்று இப்ப ணிச்சியை அனுப்பினாள்" என்றார். அப்படி யாஎன் றன்புறு மாமியார் இப்புறம் திரும்பி எதிரில் நோக்க, முக்கா டிட்டே முகம்மறைத் தபடி சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியைத் "தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே இங்கே அனுப்படி" என்றார். பணிச்சி அகலும் போது முக்கா டகன்றது. தங்கமே பணிச்சி என்பதை அங்கென் மாமியார், அன்பர்கண் டனரே! |
மணிமொழியாரிடம் மணவழகர்
மனத்தில் மாசு வராமையே அறம்எனும் வள்ளுவர் வாய்மொழி மறந்தறி யேன்நான்; அறம்எனல் இல்லறம் துறவறம் ஆக இருவகை என்பதை ஒருகாலும் ஒப்பேன்; அறம்எனப் பட்டதே இல்வாழ்க் கைஎன்றார் வள்ளுவர் ஆதலால்! உள்ளம் கவர்ந்த ஒருத்தி உளத்தை உரிமையாய்க் கொண்டேன். அதுதான் மணமென அறிஞர் கூடிப் புதுவாழ்வு பெறுகெனப் புகன்றனர் வாழ்த்தே. இடும்பை தீர்ப்பவள் என்மனை! அவள்என் குடும்ப விளக்கு! வேறேது கூறுவேன்? என்பால் அன்பை நிரம்ப ஏற்றவள் நன்மக்க ளீன்று நலமுறக் காத்தாள்; நவையறு கல்வியால் நன்மக் கள்தமை அவையினில் முதன்மை அடையச் செய்தேன்; அறவழி யாலே நிறைபொருள் ஆக்கினேன். நெஞ்சினில் உற்றிடும் நிலைவேறு பாட்டால் நொடிதொறும் நொடிதொறும் நூறுநூ றாயிரம் இறப்பும் பிறப்பும் எய்தும் அன்றோ? எய்தவே இன்பம் ஏகலும் மீளலும் அடையும் அன்றோ? அவ்வா றின்றி அலைகடல் சூழ்நில வுலகில் இந்நாள் நிலைத்த இன்பம் பெற்றதென் நெஞ்சம்!" எனமண வழகர் இயம்பிய அளவில், "இதற்குமுன் நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகள் உண்டெனில் அவற்றில் ஒன்று கூறுக!" எனமணி மொழியார் இனிது கேட்டார். நன்றென அழகர் நவில லானார்: |
இளமையில் நடந்த இன்ப நிகழ்ச்சி
"படித்தும் கேட்டும், பாடியும் ஆடியும் இருந்த நண்பர் பிரிந்து போகவே, என்றன் அறையில் யான்தனிந் திருந்தேன். நிலாமுகத் தாள்என் நெஞ்சைத் தொட்டாள். தனிமையை நெஞ்சு தாங்க வில்லை. தனித்திருக் கின்றிரோ தக்க நண்பருடன் இனித்திருக் கின்றிரோ என்றுபார்த் துவர என்னை அனுப்பினாள் என்றன் தலைவி என்றாள் தோழி என்னெதிர் வந்து! போய்ச்சொல் என்றேன், போனாள்; மீண்டும் வந்து, தலைவனே, வஞ்சி சோறுகறி ஆக்கு கின்றாள். அடுப்பில் சோறு கொதிக்கின்ற தெ"ன்று கூறினாள். "இங்கே குளிர்கின்றதோ" எனக் கூறி அனுப்பினேன். "இறக்கும் நேரம்" என்றாள் வந்து! "வாழும் நேரமோ இங்கு மட்டும்?" என்றேன். சென்றாள். உடனே என்றன் இனிய அமிழ்து தனிஎனை அடைந்தாள். "அத்தான் பொறுப்பீர் அடுப்பில் வேலை முடித்தோடி வருவேன்" என்று மொழிந்தாள். "தோழிபார்க் கட்டும் சோறாக் கும் பணி" என்றேன். அதற்கவள், என்முகம் தாங்கி "தலைவர் விருப்பம் தலைவி அறிவாள்; பொறுப்பிலாத் தோழி அறிவ துண்டோ?" என்றாள். "மாமியார் இல்லையா?" என்றேன். "அந்தோ அந்தோ?" என்றுதன் அங்கையால் தன்வாய் மூடித் "தளர்ந்த கிழவியை அடுப்பில் விட்டுத் தடித்த மருமகள் கொழுந னோடு கொஞ்சினாள் என்று வையம் இகழுமே" என்று, வஞ்சி தொடக்க மருத்துவ மாகமுத் தமொன்று கொடுத்துக் குடுகுடென்று கடிதே ஓடிச் சமையல் முடித்துத் தமிழோ அமிழ்தோ எனச்சோ றிட்டழைத் தாளே! |
மணிமொழியார் நிலைத்த இன்பமாவ தெப்படி என்றார்
"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவ" என்று மூத்தாள் ஔவை மொழிந்த வண்ணம் என்றும் மக்களின் எண்ணம் பலவாம்; எண்ணம் தோற்பதும் ஈடே றுவதும் ஆகும். அதனால், அகத்தின் நிலைமை நல்லதும் ஆகும்; நலிவதும் ஆகும். இவற்றையே நொடிதோறும் ஏற்படு கின்ற ஆயிரம் ஆயிரம் பிறப்பிறப் பென்றீர். இவைகளே நிலையா இன்பதுன் பங்கள்! "நிலைத்த இன்பம் நேர்ந்த தென்றீரே வழுத்துவீர் அதை"என மணிமொழி கேட்டார்; அதுகேட் டழகர் அறிவிக் கின்றார்; "செம்மலர் பறிக்கச் செல்வதும் இலைநான்! சேறும் பூசித் திரும்பலும் இல்லை. பற்றில்லை; தீமை உற்றதும் இல்லை. தீமையில் லாவிடம் இன்பம் திகழும், என்ன என்னிடம் மீதி என்றால். ஒன்றே! ஒன்றே! அதன்பெயர் உயிர்ப்பாம். அவ்வு யிர்ப்போ அன்பி ருப்பதால் இருக்கின் றதுவென இயம்புவர் வள்ளுவர்; 'அன்பின் வழிய துயிர்நிலை' அறிக. என்றன் அன்புக் குரியவர் எவரெனில் மனைவி, மக்கள், பேரர், உறவினர். ஆயினும் மனைவி,என் அன்புக் கருகில் இருப்பவள், என்மேல் அன்புவைத்(து) இருப்பவள்" என்றார் மணவ ழகரே |
மணவழகர் இரவு நன்றாகத் தூங்கினையோ என்றார்
அறுசீர் விருத்தம்
சேவல்கூ விற்று; வானம் மேவிய அழகர் கண்கள் தூவிழி மலர்ந்த! ஆங்கே "பாவையே தூக்கப் பொய்கை |
அயர்ந்து தூங்கியதாகத் தங்கம் சாற்றினாள்
குடித்தோமே பாலின் கஞ்சி; படித்தோமே, அவற்றி னுக்கு முடித்தோமே! மொணமொ ணென்று குறித்தது துயின்றேன்;இப்போ(து) |
தம் தூக்க நலம் சொல்வார் தள்ளாத கிழவர்
நிறையாண்டு நூறும் பெற்ற குறைவற்ற மகிழ்ச்சி யாலே நிறுத்தினோம் நெடிய பேச்சை குறித்தது துயின்றேன் சேவல் |
கிழவர் உடனிருப்பதில் கிழவிக்கு நாணம்
புதுக்காலை; குளிர்ந்த காலைப் இதுபேசும் பேறு பெற்றேன் எதிர்வந்த அமிழ்தே, அன்பே அதோ நகைமுத்து வந்தாள் |
நூற்றைந்து ஆண்டுவரை நீவிர் வாழக் காரணம் என்ன?
எண்சீர் விருத்தம்
மற்றொருநாள் காலையிலே மணிமொழியார் வந்தார்; "இற்றைநாள் நூற்றைந்தா ண்டாயின உமக்கே சற்றதனை உரைத்திடுக!" எனக்கேட்டார் மொழியார். கற்றவரில் ஒருவன்என ஆக்கிவைத்தார்; நானும், |
நன்மனைவியுடையார் எல்லாம் உடையார்
இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால் நவையில்லாள்; நான்வாழத் தன்னுயிரும் நல்கும் அவளாலே நல்லொழுக்கம் தவறாமை காத்தேன்; கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்! |
உலக அமைப்புக்கு இலேசு வழி
இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின் எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும். செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல் அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால் |
மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம்
மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின் மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால் துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர் பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை |
உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்?
என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார் என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ, பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர் |
தள்ளாத கிழப்பருவத்தில் இன்பம் எய்துதல் உண்டு
"கையிலே வலிவில்லை காலில்வலி வில்லை; மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை; செய்வதொரு செயலில்லை; இன்பமுறல் ஏது? துய்யமுது மணவழகர் உடல்குலுங்கச் சிரித்துச் |
இன்புறும் இரண்டு மனப்பறவைகள்
"வாய்மூக்குக் கண்காது மெய்வாடி னாலும் தூய்மையுறும் அவ்விரண்டு மனம்கொள்ளும் இன்பம் ஓய்வதில்லை மணிச்சிறகு! விண்ணேறி, நிலாவாம் சாய்வின்றிச் சறுக்கின்றி ஒன்றையொன்று பற்றிச் |
இருமனம் இரு மயில்கள்;
தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு
தேன்சிட்டுகள்; கிளிகள்; அமிழ்தின் கூட்டு
"அருவியெலாம் தென்பாங்கு பாடுகின்ற பொதிகை திரிகின்ற சோடிமயில் யாமிரண்டு பேரும்; பெருந்தென்னங் கீற்றினிலே இருந்தாடும் கிளிகள்! பிரித்துணர மாட்டாது பிசைந்தகூட் டமிழ்து!" |
அவள் தூங்கவில்லை இரவுமணி பத்தாகியும்
அறுசீர் விருத்தம்
மாநில மக்கள் எல்லாம் ஏனின்னும் தூங்க வில்லை? கூனல்வில் போலே மெய்யும் ஆனதோ மணிபத் தென்றாள் |
அவனிடம் நகர்ந்து செல்லுகிறாள்
"அவன்துயின் றானோ?" என்னும் கவலைகொள் வாளை எங்கும் துவள்கின்ற மெய்யால் தன்கைத் தவழ்கின்றாள் தன்ம ணாளன் |
ஒரு தலையணையில் அருகருகு கிடந்தார்கள்
"வருகின்றா யோடி தங்கம் சருகொன்று காற்றால் வந்து பெரியாளும் பெரியான் அண்டைத் அருகரு கிருவர்; மிக்க |
இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை
ஒளிதரும் அறைவி ளக்கும்! வெளியினை இருளும் கௌவும் எளிதாகத் தென்றல் வீசும் களித்தன மனம்இ ரண்டும் |
மனவுலகில் இருவர் பேச்சுக்கள்
இருமனம் அறிவு வானில் "பெரியோளே என்நி னைப்பால் "உரியானே, எனையே எண்ணி "பெருந்தொல்லை தூக்க மின்மை" |
என் நினைவைவிட்டுத் தூங்குக
அரைநாளின் தூக்க மேஇவ் ஒருநாளின் முழுதும் தூங்கல் "அரிவையே என்றன் நெஞ்சை "உரியானே என்ம னத்தைப் |
நெடிய தூக்கம்
நீடிய இன்பம்
தூங்கினார் கனவும் அற்ற ஏங்கினார் விழித்த தாலே! தூங்குவோம்! நிலைத்த இன்பம் தூங்குகின் றார்நல் லின்பம் |
ஐந்தாம் பகுதி முற்றும்.
குடும்ப விளக்கு முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடும்ப விளக்கு - ஐந்தாம் பகுதி - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இன்பம், என்றார், என்றன், மணவழகர், என்றேன், என்றாள், காத்தேன், தங்கம், இந்நாள், அன்னாள், மூதாட்டி, வில்லை, மக்கள், என்றும், வேண்டும், முதியோர், கின்றான், வேடப்பன், விருத்தம், நிலைத்த, மாமியார், கின்றார், உடையார், அவளாலே, கிழவர், வள்ளுவர், அடுப்பில், பணிச்சி, எனினும், நகைமுத்து, தலைக்கடை, தொண்டு, மருமகள், விளக்கு, அறுசீர், லானார், ஆயிரம், கின்றாள், கேட்பேன், குடும்ப, நெஞ்சில், உள்ளம், நெஞ்சம்