புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - எதிர்பாராத முத்தம்
முதற்பகுதி
1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு
உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வௌியிற் புறப்பட் டதுவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக் கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச் செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும் அப்படி இப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள். நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்! பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில், வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள். புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும் குளிப்ப தற்கும் சென்றார் குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே! |
2. நீராடு பெண்ணினத்தாரோடு பூங்கோதை!
வள்ளியூர்த் தென்பு றத்து வெள்ளநீர் தளும்ப, வெள்ள எள்ளுப்பூ நாசி, கைகள் தெள்ளுநீ ராடு கின்றார்! பச்சிலைப் பொய்கை யான கச்சித முகங்க ளென்னும் அச்சம யம்கி ழக்குச் உச்சி ஏறாது நின்றே படிகத்துப் பதுமை போன்றாள் வடிகட்டும் அமுதப் பாட்டை கடிமலர் மீது மற்றோர் மடிசேர்ப்பாள் மற்றொ ருத்தி! புனலினை இறைப்பார்! ஆங்கே "எனைப்பிடி" என்று மூழ்கி புனைஉடை அவிழ்த்துப் பொய்கைப் இனமலர் அழகு கண்டே மணிப்புனல் பொய்கை தன்னில் அணிமூக்கும், கையும் ஆன மணமலர்க் காடும் கூடி அணங்குகள் மலர்கள் என்ற பொய்கையில் மூழ்கிச் செப்பில் மெய்யினில் ஈர ஆடை வெய்யிலை எதிர்க்கப் பெண்கள் கைவீசி மீள லுற்றார் |
3. பூங்கோதை - பொன்முடி
பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு! வாங்கப்போ கின்றான்அவ் வழியாய்!வஞ்சி பூங்கோதை யாஎன்று சந்தேகித்தான்! வங்காத பண்டமில்லை; உண்ணும்போது அத்தானென் றழைக்காத நேரமுண்டா! இத்தனையும் இருகுடும்பம் பகையில்மூழ்கி தொத்துகின்ற கிளிக்கெதிரில் அன்னோன்இன்பத் அத்தாணி மண்டபத்து மார்பன்அண்டை "என்விழிகள் அவர்விழியைச் சந்திக்குங்கால் ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தேஅன்னோன் சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சிரிக்கும்! "இன்னவர்தாம் என்அத்தான்" என்றேஅந்த பொன்முடியோ முகநிமிர்ந்து வானிலுள்ள இன்பமுகம் தனைச்சுவைப்பான் கீழ்க்கண்ணாலே, "என்பெற்றோர் இவள்பெற்றோர் உறவுநீங்கி முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவளும்பார்த்தாள்; முதல்இருந்த நிலைக்குவர இதழ்சிலிர்க்க, அதிகரித்த ஒளிவந்து முகம்அளாவ அதிசயத்தைக் காதலொடு கலந்தபாங்கில் வையம் சிலிர்த்தது.நற் புனிதையேக, `கையலுத்துப் போகு'தென்று மரத்தின்வேர்மேல் மெய்யாக நான்நினைத்தேன்" என்றாள்.அன்னோன் கையிரண்டும் மெய்யிருக, இதழ்நிலத்தில் உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும்உள்ள கைச்சரக்கால் காணவொண்ணாப் பெரும்பதத்தில் நிச்சயித்த மறுகணத்தில் பிரியநேர்ந்த "வைச்சேன்உன் மேலுயிரைச் சுமந்துபோவாய்! "நீர்மொண்டு செல்லுபவர் நெருங்குகின்றார்; காரிகையாள் போகலுற்றாள்; குடத்தைத்தூக்கிக் ஓரவிழி சிவப்படைய அன்னோன்பெண்ணின் "தூரம்"எனும் ஒருபாவி இடையில்வந்தான் |
4. அவன் உள்ளம்
அன்று நடுப்பகல் உணவை அருந்தப் பொன்முடி மறந்து போனான்! மாலையில் கடைமேல் இருந்தான்; கணக்கு வரைதல் இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல் வணிகர் கொண்டு வந்த முத்தைக் குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல் பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து வரின்அதைக் கருத்தோடு வாங்க முயலுதல் ஆன இவற்றை அடுத்தநாள் செய்வதாய் மோனத் திருந்தோன் முடிவு செய்து மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி வந்தான் வீடு! வந்தான் தந்தை! தெருவின் திண்ணையிற் குந்தி இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே! "விற்று முதல்என்ன? விலைக்குவந்த முத்திலே குற்றமில் லையே?நீ கணக்குக் குறித்தாயா?" என்று வினவினான் தந்தை. இனியமகன், "ஒன்றும்நான் விற்கவில்லை; ஓர்முத்தும் வாங்கவில்லை; அந்தி வியாபாரம் அதுஎன்ன மோமிகவும் மந்தமாயிற்" றென்றான். மானநாய்க்கன் வருந்திக் "காலையிலே நீபோய்க் கடையைத்திற! நானவ் வேலனிடம் செல்கின்றேன்" என்று விளம்பினான். "நான்போய் வருகின்றேன் அப்பா நடைச்சிரமம் ஏன்தங்கட்" கென்றான் இனிதாகப் பொன்முடியான். "இன்றுநீ சென்றதிலே ஏமாற்றப் பட்டாய்;நான் சென்றால் நலமன்றோ" என்றுறைத்தான் சீமான். "தயவுசெய்து தாங்கள் தடைசெய்ய வேண்டாம்; வெயிலுக்கு முன்நான்போய் வீடுவருவேன்" என்றான். "வேலன்முத் துக்கொடுக்க வேண்டும்; அதுவன்றிச் சோலையப்பன் என்னைவரச் சொல்லி யிருக்கின்றான்; ஆதலினால் நான்நாளை போவ தவசியம்.நீ ஏதும் தடுக்காதே" என்றுமுடித் தான்தந்தை. ஒப்பவில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை! அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்! அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள்; நச்சுண்ணச் சென்றான் நலிந்து. |
5. பண்டாரத் தூது
பகலவன் உதிப்ப தன்முன் புகலுவான் அவனி டத்தில் சகலர்க்கும் வீடு வீடாய்ப் மகரவீ தியிலே உள்ள மறைநாய்கன் பெற்ற பெண்ணாள், நிறைமதி முகத்தாள்; கண்கள் பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்; அறையுமவ் வணங்கை நீவிர் சேதியொன் றுரைப்பேன்; யார்க்கும் கோதைபால் நீவிர் சென்று காதைஎன் முகத்தில் சாய்ப்பீர்! போதுமா?" என்று மெல்லப் "உன்மாமன் மறைநாய் கன்தான் தென்னம் பாலை பிளந்து இன்னும்கேள் அடையா ளத்தை; நன்றாகத் தெரியும்! நானும் "அப்பாவும் மாம னாரும் அப்பெண்ணும் நானும் மெய்யாய் செப்பேந்தி அவள் துறைக்குச் ஒப்பினேன்! கடைக்குப் போக இமைநோக என்னை நோக்கி சுமைக்குடம் தூக்கி அந்தச் 'நமக்கென்ன என்றி ருத்தல் அமைவில்என் அசந்தர்ப் பத்தை சந்திக்க வேறு நேரம் வந்திட்டால் போதும் என்னைக் சிந்தையில் தெரிவாள்; கையால் அந்தரம் மறைவாள்; கூவி வையத்தில் ஆண்டு நூறு தையலை இராத்தி ரிக்குள் மெய்யெங்கே? உயிர்தா னெங்கே? `உய்யவா? ஒழிய வா?'என் பண்டாரம் ஒப்பிச் சென்றான். கண்டபூங் கோதை யென்னும் தண்டைக்கால் நடை நினைத்துத் ஒண்டொடி சிரிப்பை எண்ணி வலியஅங் கணைத்த தெண்ணி ஒலிகடல் நீலப் பெட்டி பலபல என விடிந்த புலம்நோக்கிப் பசுக்கள் போகப் |
6. நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!
நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல் ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில் - சோலைஉதிர் பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில்இரு சீவன்கள் மட்டும் திறந்தவிழி - ஆவலினால் மூடா திருந்தனவாம். முன்னறையில் பொன்முடியான் ஆடா தெழுந்தான் அவள்நினைப்பால் - ஓடைக்குள் காலால் வழிதடவும் கஷ்டம்போல், தன்உணர்வால் ஏலா இருளில் வழிதடவி - மேல்ஏகி வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட காட்டில்இரு கண்ணில்லான் போதல்போல் - பேட்டை அகன்றுபோய் அன்னவளின் வீட்டினது தோட்டம் புகும்வாசல் என்று புகுந்தான் - புகும்தருணம் வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல் ஆணழகன் என்றெண்ணி "அத்தான்" என்றாள் நங்கை! ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத் தாங்கா மகிச்சியுடன் தான்பிடித்துப் - பூங்கொடியை மாரோ டணைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில் வேரோடு முத்தம் பறித்தான்!அந் - நேரத்தில் பின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன் பொன்முடியை மங்கை புலன்துடிக்க - அன்பில்லா ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில் போட்டிறுக்கக் கட்டினார் பொன்முடியை - நீட்டு மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில் நிலாமுகத்தை ஒற்றி நிமிர்ந்து - கலாபமயில் "அப்பா அடிக்காதீர்" என்றழுதாள். அவ்வமுதம் ஒப்பாளைத் தள்ளி உதைக்கலுற்றான். - அப்போது வந்துநின்ற தாயான வஞ்சி வடிவென்பாள் சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் - சுந்தரியோ அன்னையின் கைவிலக்கி ஆணழகிடம் சேர்ந்தே "என்னை அடியுங்கள்" என்றுரைத்துச் - சின்னவிழி முத்தாரம் பாய்ச்ச உதட்டின் முனைநடுங்க வித்தார லோகம் விலவிலக்க - அத்தானின் பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த படியிருந்தாள். பின்னுமவன் கோபம் பெரிதாகி - அன்னார் இருவரையும் இன்னற் படுத்திப் பிரித்தே ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித் - திருவனைய செல்விதனை வீட்டிற் செலுத்தி மறைநாய்கன் இல்லத்துட் சென்றான். இவன்செயலை - வல்லிருளும் கண்டு சிரித்ததுபோல் காலை அரும்பிற்று. "வண்டு விழிநீர் வடித்தாளே! - அண்டையில்என் துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ! இன்ப உடலில்அடி யேற்றாளே! - அன்புள்ள காதலிக் கின்னும்என்ன கஷ்டம் விளைப்பாரோ? மாது புவிவெறுத்து மாய்வாளோ - தீதெல்லாம் என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ?" என்றுதன் துன்பத்தை எண்ணாமல் - அன்னாள் நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான் உலராத காயங்க ளோடு. |
7. பண்டாரத்தைக் கண்டாள் தத்தை
பண்டாரம் இரண்டு நாளாய்ப் திண்டாடிப் போனான். அந்தச் வண்டான விழியால் அன்னாள் கொண்டிருந் தாள்.பண் டாரம் இருமினாள் திரும்பிப் பார்த்தான். ஒருசெந்தா மரை இதழ்தான் வருகஎன் றழைத்த கையை "பொருளைநீர் கொள்க இந்தத் பகர்ந்தனள்; போவீர் போவீர் மிகுந்தசந் தோஷத் தோடு புகலுவாய்" என்று கேட்டான். அகன்றுபோ வீர்; எனக்கே "சரிசரி ஒன்றே ஒன்று பரிவுடன் இருக்கின் றாரா? தெரியச்சொல்" என்றான். அன்னாள் "வரும்படி சொல்ல வாஉன் "விவரமாய் எழுதி யுள்ளேன் "அவரங்கே இல்லா விட்டால் "தவறாமல் அவரைத் தேடித் "கவலையே உனக்கு வேண்டாம் என்றின்னும் தொடர்ந்தான். மங்கை முன்னர்நீர் போதல் வேண்டும்" பின்புறம் திரும்பிப் பார்த்துப் "கன்னத்தில் என்ன" என்றான். "தக்கதோர் மருந்துண்" டென்றான். அக்கணம் திரும்பி னாள்;பின் "பக்குவ மாய்ந டக்க திக்கென்று தீப்பி டித்த |
8. அவள் எழுதிய திருமுகம்
பொன்முடி கடையிற் குந்திப் தன்மனத் துட்பு றத்தில் மின்னலின் கொடிநி கர்த்த ஒன்றுபட் டிருந்தான் கண்ணில் கணக்கர்கள் அங்கோர் பக்கம் பணம்பெற்ற சந்தோ ஷத்தால் மணிக்கொடி இடையாள் தந்த தணலிலே நின்றி ருப்போர் எழுத்தினை விழிகள் தாவ "பழத்தோட்டம் அங்கே; தீராப் அழத்துக்கம் வரும் படிக்கே புழுதுடி துடிப்ப தைப்போல் புன்னையைப் பார்க்குந் தோறும் அன்னையை, வீட்டி லுள்ள என்னையே காவல் காக்க என்அறை தெருப்பக் கத்தில் அத்தான்!என் ஆவி உங்கள் செத்தேன்! இ௬துண்மை. இந்தச் சத்தான பொருளைக் காணேன்! பத்தான திசை பரந்த அப்பொருள் உயிர்க் குலத்தின் செப்புவார் பெரியார் யாரும் அப்பெரி யோர்க ளெல்லாம் கைப்பிடித் தணைக்கும் முத்தம் கனவொன்று கண்டேன் இன்று எனதன்னை, தந்தை, நான்இம் `தொணதொண' என்று பாடித் எனதுபின் புறத்தில் நீங்கள் காய்ச்சிய இரும்பா யிற்றுக் பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல் கூச்சலும் கிளம்ப, மேன்மேல் ஓச்சாமல் உம்தோள் என்மேல் பார்த்தீரா நமது தூதாம் போர்த்துள்ள துணியைக் கொண்டு ஓர்துண்டால் கட்டி மார்பில் நேரினில் விடியு முன்னர் வருகின்றார்; முகத்தில் தாடி பரிவுடன் நீரும் அந்தப் கருதுவீ ராஎன் அத்தான்? தருணத்தைக் கோரி என்றன் அன்னையும் தந்தை யாரும் இன்னமும் கட்சி பேசி புன்னையில் கட்டிச் செய்த உன்னத மென்று பேசி குளிர்புனல் ஓடையே, நான் வௌியினில் வருவ தில்லை; கிளியெனப் போட்ட டைத்தார் எளியவள் வணக்கம் ஏற்பீர். |
9. நுணுக்கமறியாச் சணப்பன்
பொன்முடி படித்த பின்னர் "இன்றைக்கே இப்போ தேஓர் அன்னத னோடு மீசை முன்னேநீர் கொண்டு வாரும் கணக்கர்கள் அவன் சமீபம் வணக்கமாய் நின்றி ருந்தார்; சணப்பன்பண் டாரத் தின்பால் நுணுக்கத்தை அறியா ஆண்டி "அவள்ஒரு வெள்ளை நூல்போல் "அவுஷதம் கொடுக்க வேண்டும் "கவலைதான் அவள்நோய்" என்று "கவடில்லை உன்தாய்க்" கென்று "கணக்கரே ஏன்நிற் கின்றீர்? கணக்கரும் போக லானார்; "அணங்குக்கும் உனக்கும் வந்த "குணமிலா ஊர்க் கதைகள் பண்டாரந் தனைப் பிடித்துப் கொண்டேபோய்த் தெருவில் விட்டுக் குண்டானிற் கவிழ்ந்த நீர்போல் பண்டாரம், கணக்கர் தம்மைப் பொன்முடி "யாரைப் பார்க்கப் "பொன்முடி உனக்கும் அந்தப் ஒன்றும்சம் பந்த மில்லை என்று பண்டாரம் சொன்னான். பண்டாரம் அறியத் தக்க கண்டிடப் பூங்கோ தைபால் கொண்டிருப் பதையுங் கூறிப் உண்டாகும் தீமை கூறி |
10. விடியுமுன் துடியிடை
`சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத் தேவைஇல்லை போலும்!இதை நான்என் தாய்க்குச் பூவுலகப் பெண்டிரெல்லாம் இக்கா லத்தில் ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்; விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்ட மானால் வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணா ளர்தாம் துடிதுடித்துப் போகின்றேன்; இரவி லெல்லாம் ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்?' என்றே தலைக்கோழி கூவிற்று. முதலில் அந்தத் கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே விலக்கினாள் தாழ்தன்னை; வாசல் தன்னை குலைத்ததொரு நாய்அங்கே! சரிதான் அந்தக் என்றுமனம் பூரித்தாள். திருவி ழாவே தன்முகத்தைத் திருப்பாமால் பார்த்தி ருந்தாள் தன்உணர்வைத் தான்கேட்டாள்! ஆளன் வந்தான். சொன்னபடி கேள்என்றாள். பூரிப் பெல்லாம் "ஆம்"என்றான். நடைவீட்டை அடைந்தார்; அன்னை தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்த தைப்போல் நேமமுறச் செலுத்திநறுங் கவிச்சு வைகள் மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான். "நீமுடித்த வேலையென்ன?" என்றாள் அன்னை. ஆமுடித்த முடியவிழ்த்துப் பால்கறந்தீர்; ஈமுடித்த தேன்கூட்டை வடித்தல் போலே |
11. அறையிலிருந்து அம்பலத்தில்
"ஒருநாள் இரவில் உம்எச மானின் அருமைப் பிள்ளை ஐயோ பாவம் பட்ட பாடு பருத்திப் பஞ்சுதான் பட்டி ருக்குமா? பட்டிருக் காதே!" என்று கூறினான் இரிசன் என்பவன். "என்ன" என்றான் பொன்னன் என்பவன். இரிசன் என்பவன் சொல்லு கின்றான்: "பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த மாப்பிளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை1 சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல் புன்னை அடியில் பூரிப்பு முத்தம் தின்றுகொண் டிருந்தார்! திடீரென் றெசமான் பிடித்துக் கட்டினார் பிள்ளையாண் டானை! அடித்தார் மிலாரால்; அழைத்தார் என்னை அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!" என்றது கேட்ட பொன்னன் உடனே சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து மான நாய்கன் தன்னிடம் போனான் விரைவில் புகல்வ தற்கே! |
12. பெற்றோர் பெருந்துயர்
விளக்குவைத்து நாழிகைஒன் றாயிற்று மீசை வளைத்துமே லேற்றிஅந்த மானநாய்கன் வந்தான். "அன்னம்"என்று கூவினான் அன்னோன் மனைவிதனை "என்ன"என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள். "பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான்! செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத் தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி வாரம் இரண்டா யினவாம் இதுஎன்ன கோரம்!" எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்! அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே அச்ச மயமாக "ஐயா" எனக்கூவிப் பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும், புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும், சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள். "நல்லதுநீ போபொன்னா" என்று நவின்றுபின் மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல் "தான தருமங்கள் நான்செய்து பெற்றபிள்ளை ஏன்என் றதட்டாமல் இதுவரைக் கும்சிறந்த வானமுதம் போல வளர்த்த அருமைமகன் வெள்ளை உடுத்தி வௌியிலொரு வன்சென்றால் கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில் வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு செல்லப்பா என்று சிறக்க வளர்த்தபிள்ளை கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா!" என்று பலவாறு சொல்லி இருக்கையிலே, நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல் பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக் கண்டஅந் நாய்கன் கடிந்த மொழியாக "நில்லாதே போ!"என்றான். "என்னால் நிகழ்ந்ததில்லை. சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி போய்ச்சொன்னேன். பூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றாள்; அதனை வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன். வேறென்ன?" என்றுரைத்தான் பண்டாரம். கேட்டான் இதைநாய்கன். "சென்றதற்குக் கூலிஎன்ன சேர்ந்த துனக்"கென்றான். "பத்து வராகன் பணம்கொடுத்த தாகவும் முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்எனவும் எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்? அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்! தாடிஒன்று கேட்டான். எனக்கென்ன? தந்ததுண்டு. மூடிமுக் காடிட்டு மூஞ்சியிலே தாடிஒட்டி நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில். மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப் போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல் ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!" என்று பண்டாரம் இயம்பவே நாய்கனவன் "நன்று தெரிந்துகொண்டேன். நான்சொல்வ தைக்கேட்பாய் என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே; அன்னவனை நானோ அயலூருக் குப்போகச் சொல்ல நினைக்கின்றேன்; அன்னவன்பால் சொல்லாதே செல்லுவாய்" என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான். பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப் பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன் "அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம் சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன். நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர் தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும் முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும் ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்; கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி நெஞ்சில் அவள்மயக்கம் நீங்கும்!" எனச்சொன்னான். அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச் சொன்னது நன்றென்றாள் துணிந்து. |
13. இல்லையென்பான் தொல்லை
பொன்முடி கடையி னின்று தன்னெதிர்ப் பண்டா ரத்தைப் சென்றனிர்" என்று கேட்டான். "உன்தந்தை யாரும் நானும் அவளுக்கும் உனக்கு முள்ள அவன்உன்னை மரத்தில் கட்டி கவலையால் கடையை நீதான் அவர்கேள்விப் படவே இல்லை, நாளைக்கே அயலூர்க் குன்னை கேளப்பா தாடிச் சேதி ஆளனாம் பொன்மு டிக்கோ கோளனாம் பண்டா ரத்தின் |
14. எதிர்பாராப் பிரிவு
பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப் அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால் குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக் காதல் மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம் "இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்" சுடரொன்று தோன்றிற்று. பொன்மு டிக்கோ அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால் எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும் அதிர்ந்ததவள் உள்ளந்தான் பயணஞ் செல்லும் விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக புதுமலர்க்கை யால்அழுத்தித் தலையில் மோதிப் விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட் டஞ்சும் இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெ ருப்பா? கடைவிழியால் மாடியிலே கனிந் திருக்கும் உடைந்துவிழு வாள்அழுவாள், அழுவாள் கூவி! |
15. அழுதிடுவாள் முழுமதியாள்
"இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே வெங்காதல் பட்டழியும் என்உ யிர்க்கு இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை; செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் எழுந்தோடும் கிள்ளைபோல் எனது டம்பில் வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள். பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா? திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள். வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்! வெள்ளீயம் காய்ச்சிப்பூங் கோதை காதில் கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் |
16. எந்நாளோ!
பாராது சென்ற பகல்இரவு நாழிகையின் ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத் தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? கண்டவுடன்வாரி அணைத்துக்கண் ணாட்டி யென்று புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் அன்பு நிலையம் அடையும்நாள் எந்நாளோ? என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ? கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலரை இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?" என்று பலவா றழுதாள்.பின் அவ்விரவில் சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள்.அப் புன்னைதனைக் கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன் கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் பொன்னுடம்பு நோகப் புடைக்கஅவ ரைப்பிணித்த புன்னை இதுதான்! புடைத்துதுவும் இவ்விருள்தான்! தொட்டபோ தெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் கட்டிவைத்த காரணத்தால், புன்னைநீ காரிகைநான் ஒட்டுறவு கொண்டுவிட்டோம். தந்தை ஒரு பகைவன்! தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? நோயோ உணவு?நாம் நூற்றாண்டு வாழ்வோமோ? சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! ஏதோ அறியேன் இனி. |
17. ஆசைக்கொரு பெண்
புன்னையில் அவளு டம்பு கன்னலின் சாறு போலக் சின்னதோர் திருட்டு மாடு பொன்னன்தான் ஓட்டி வந்தான் கயிற்றொடு மரத்தைத் தாவும் பயிலாத புதிய மேனி அயர்கின்ற நாய்கனைப் போய் மயில்போன்ற மகளைப் புன்னை "குழந்தாய்"என் றழைத்தான். வஞ்சி இழந்தாய்நீ உனது பெண்ணை!" முழந்தாளிட் டழுது பெண்ணின் பழஞ்சீவன் உண்டா என்று "அருமையாய்ப் பெற்றெ டுத்த அருவிநீர் கண்ணீ ராக றிருவிளக் கனையாய்!" என்றும் பெருமரப் பட்டை போலப் கூடத்தில் கிடத்தி னார்கள் மூடிய விழியை நோக்கி வாடிய முகத்தில் கொஞ்சம் ஆடிற்று வாயிதழ் தான்! எழில்விழி திறந்தாள். "அத்தான்" ஒழுகிடப் பெற்றோர் தம்மை தழுவிய கைகள் நீக்கிப் பழமைபோல் முணு முணுத்தார்; |
18. பறந்தது கிள்ளை
விடியுமுன் வணிகர் பல்லோர் நடந்தனர் தெருவில் காதில் திடங்கொண்டாள்; எழுந்தாள். வேண்டும் தொடர்ந்தனள் அழகு மேனி வடநாடு செல்லும் முத்து கடுகவே நடந்தாள். ஐந்து நடைமுறை வரலா றெல்லாம் தடையின்றிக் கூற லானாள் |
19. வடநாடு செல்லும் வணிகர்
பளிச்சென்று நிலா எரிக்கும் ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே கிளிச்சந்த மொழியாள் மீது வௌிச்சென்ற அன்னோன் தேகம் வட்டநன் மதியி லெல்லாம் கொட்டிடும் குளிரில் அப்பூங் எட்டுமோர் வானம் பாடி கட்டிக்க ரும்பின் வாய்ச்சொற் அணிமுத்து மணிசு மக்கும் வணிகர்கள் அதிக தூர தணியாத அவள் நினைவே பிணியாயிற் றேனும் அந்தப் இப்படி வடநாட் டின்கண் முப்பது காத முள்ள அப்பெரு வணிகர் யாரும் சிப்பங்கள் இறக்கிச் சோறு அடுப்புக்கும் விறகினுக்கும் துடுப்புக்கும் அவர வர்கள் வடுப்போன்ற விழிப்பூங் கோதை நடப்போன் பொன்முடிதான் அங்கோர் ஆரியப் பெரியோர், தாடி காரியம் தொடங்கும் நல்ல "சீரிய தமிழரே, ஓ! கோரிக்கை ஒன்று கேட்பீர்" தென்னாட்டு வணிக ரான என்னஎன் றுசாவ அங்கே "அன்புள்ள தென்னாட் டாரே, பொன்தரக் கோரு கின்றோம், வந்தவர் கூறக் கேட்டே சிந்தித்தார் பொன்மு டிக்குச் வந்தனன் அன்னோன் என்ன பந்தியாய் ஆரி யர்கள் "மன்னவன் செங்கோல் வாழும், மன்னிய தருமம் நான்கு இன்னல்கள் தீரும்; வானம் நன்மையும் பெருகும்; நாங்கள் ஆதலின் உமைக்கேட் கின்றோம் ஈதலிற் சிறந்தீர் அன்றோ போதமார் முனிவ ரேனும் யாதொன்றும் முடிவ தில்லை" பொன்முடி உரைக்க லுற்றான்: தென்னாட்டார்; தமிழர்,சைவர் இன்னல்சேர் யாகந் தன்னை பொன்கொடுப் பதுவும் உண்டோ காளைஇவ் வாறு கூறக் ஆளன்பொன் முடியின் பேச்சை தோளினைத் தூக்கி அங்கை "கூளங்காள்! ஒருபொன் கூடக் கையெலாம் துடிக்க அன்னார் மெய்யெலாம் பரவ நெஞ்சு ஐயையோ அநேக ருள்ளார் ஐவர்நாம்" எனநி னைத்தே வஞ்சத்தை எதிர்கா லத்துச் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு "கொஞ்சமும் வருத்த மில்லை அஞ்சொற்கள் பேசி நல்ல |
20. வணிகர் வரும்போது
முத்து வணிகர் முழுதும் விற்றுச் சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில் மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார். போகும் போது பொன்கேட்ட அந்த யாகஞ் செய்ய எண்ணு வோர்களின் கொடுவிஷம் பூசிய கூரம்பு போன்ற நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்! ஆத்திர முகங்கள் அங்குள தமிழரைப் பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின! தமிழர் கண்டு சந்தே கித்தனர். "நமது சொத்தும் நல்லுயிர் யாவும் பறிபோகும் என்று படுகின்ற" தென்றே அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான். செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர்; கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர். தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன! வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர். தப்பிய சிற்சில தமிழர் வனத்தின் அப்புறத் துள்ள அழகிய ஊரின் பின்புற மாகப் பிரியும் வழியாய்ப் பொன்முடி யோடு போய்ச்சேர்ந் தார்கள். சூறை யாடிய துறவிகள் அங்கே மாறு பாட்டு மனத்தோடு நின்று "வைதிகம் பழித்த மாபாவி தப்பினான்; பைதலி வனத்தின் பக்க மாகச் செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக் கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனைக் அனுப்பி வைப்போம் வருவீர் இனிநில் லாதீர்" என்று போனாரே. |
21. ஜீவமுத்தம்
வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்; வடதிசைநோக் கிச்சென்றாள். நெருங்க லானார்! நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்! பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட் டத்தைப் வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்; தன்நடையை முடுக்கினான். எதிரில் மங்கை என்னஇது! என்னஇது! என்றே அன்னோன் "நிச்சயமாய் அவர்தாம்"என் றுரைத்தாள் மங்கை கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்; கைகள் "பச்சைமயில்; இங்கெங்கே அடடா என்னே! கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான். நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப் சாந்தமுகந் தனைக்கண்டாள்; உடலைக் காணாள்! தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் |
இரண்டாம் பகுதி
முறையீடு
22. தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்
திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும் நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார் அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன் திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்! அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத் தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான். ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ! தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான் சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர் உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர், பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார் கடவுள் கருணை இதுவாம்! - வடவர் அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப் பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம். வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின் நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும் தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர் குமர குருபரன் ஞான குருவாய் நமை யடைந்தான் நன்றிந்த நாள்! |
23. குருபரனுக் கருள்புரிந்தான்
கயிலாச புரத்தில் நல்ல மயில்நிகர் சிவகா மிக்கும் அயலவர் நகைக்கும் வண்ணம் துயரினால் செந்தூர் எய்திக் நாற்பது நாளில் வாக்கு தோற்பது திண்ண மென்று வேற்படை முருகப் பிள்ளை சாற்றும்அவ் வூமை நாவிற் |
24. ஊமையின் உயர் கவிதை
அம்மையே அப்பா என்று செம்மையே நடந்த தெல்லாம் கைம்மையாய் வாழ்வாள் நல்ல நம்மையே மகிழ வைத்தான் மைந்தனாம் குருப ரன்தான் செந்தூரில் விசுவ ரூப கந்தரின் கலிவெண் பாவாம் அந்தஊர் மக்கள் யாரும் |
25. ஞானகுருவை நாடிச் சென்றான்
ஞானசற் குருவை நாடி தானினைந் தேதன் தந்தை ஆனபெற் றோர்வ ருந்த கால்நிழல் போற் குமார மீனாக்ஷி யம்மன் பிள்ளைத் தானதைக் குறிப் பெடுக்கத் போனார்கள்; போகும் போது ஆனைகொண் டெதிரில் வந்தே |
26. யானைமேல் பானைத் தேன்
"என்னையும் பொருளாய் எண்ணி அன்னைஎன் கனவில் தோன்றி சொன்னநற் றமிழும் பற்றிச் தன்னில்நீர் எழுந்த ருள்க தெய்விகப் பாடல் தன்னைத் எய்துமா றனைத்தும் மன்னன் துய்யநற் றமிழ்ச்சா ராயம் கையில்வாத் தியங்கள் ஏந்திக் |
27. அவையிடைச் சிவை
அரங்கிடை அரசன் ஓர்பால், தெரிந்தவர் கலையில் வல்லோர் இருந்தனர். அரிய ணைமேல் வரும்சனம் தமிழ ருந்த அப்போது கூட்டத் தின்கண் சிப்பத்தைப் பிரித் தெடுத்த ஒப்பியே ஓடி வந்தாள் கைப்பற்றி மடியில் வைத்தான்; |
28. தெய்வப் பாடல்
குமரகு ருபரன் பாடல் அமரரா தியர்வி ருப்பம் அமுதப்பாட் டாரம் பித்தான். சமானமொன் றிருந்த தில்லை "தொடுக்கும் கடவுட் பழம்பாடற் துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ் தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் இமயப் பொருப்பில் விளையாடும் உடுக்கும் புவனம் கடந்துநின்ற கொழுக எழுதிப் பார்த்திருக்கும் மடுக்கும் குழற்கா டேந்துமிள மலையத் துவசன் பெற்றபெரு |
29. இறைவி மறைவு
என்றந்தப் பாடல் சொன்னான் நன்றுநன் றென இசைத்தாள்; இன்னொரு முறையுங் கூற பின்னையும் குருப ரன்தான் பாட்டுக்குப் பொருளாய் நின்ற கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து ஏட்டினின் றெழுத்தோ டோடி கூட்டத்தில் இல்லை வந்த |
30. திருவடி சரணம்
முழுதுநூல் அரங்கேற் றிப்பின் பழுதிலாச் சிவிகை செம்பொன் தொழுதனன். குருப ரன்பின் எழுதிய அனைத்தும் தந்தே தம்பியை இல்லம் போக்கித் செம்மைசேர் ஆனைக் காவும் பைம்புனற் பழனத் தாரூர் நம்மைவந் தடைந்த காலை "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் இந்துவாழ் சடையான் ஆடு மானந்த வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து ஆகுமித் திரு விருத்த ஈகுவோன் கையி லொன்றும் தேகமும் நடுங்கி நின்று ஏகிப்பின் வருக என்றோம் சென்றஅக் குருப ரன்தான் இன்றுதான். சிறிது நேரம் என்றுநற் றேசி கர்தாம் நன்றுற மொழிந்தார். கேட்ட |
31. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்
புள்ளிருக் கும்வேளூர் போய்ப் பிள்ளைநூல் பாடி மன்றில் தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும் அம்மைக் கிரட்டை மாலை மூளும்அன் பாற் பண்டார ஆளுடை ஞானா சானின் நீளுறப் பரிசாய்ப் பெற்ற மீளவும் தொழும் சீடன்பால் "அப்பனே இதுகேள்! இந்த செப்பிடும் வடநா டேகிச் அப்பாங்கில் உள்ளா ரெல்லாம் தப்பிலாச் சைவம் சார்ந்தால் சைவநன் மடா லயங்கள் நைவார்க்குச் சிவபி ரானின் சைவசத் திரங்கள் காண்க! உய்வாக உயிரின் வேந்தன் என்றுதே சிகனார் சொல்லி நன்றொரு துறவு காட்டிக் "இன்றொடு வட தேசந்தான் தென்றமிழ் நாட்டினைப் போல் மறைநாய்கன் மான நாய்கன் குறைவறு பரி சனங்கள் இறைவனாம் தேசி கன்தாள் பிறைசூடி தன்னைப் பாடிப் |
32. இப்போதெப்படி நாய்கன்மார்கள்?
தேசிகர் சரிதம் சொன்னார் ஆசிகள் சொல்லக் கேட்டார் தேசிகர் திருமுன் வந்து நேசத்தால் தேசி கர்தாம் வடநாட்டை நோக்கிச் சென்ற உடன்சென்று வழிய னுப்ப கடனாற்றத் தேசி கர்க்குக் விடைகேட்டார். தேசி கர்தாம் அழுதிடு நாய்கன் மார்கள் எழுதிய ஓவி யங்கள் பழுதிலா எம்கு டும்பப் விழுதொடு சாய்ந்த தென்று |
எதிர்பாராத முத்தம் முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதிர்பாராத முத்தம் - Bharathidasan Books - புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பொன்முடி, என்றான், பண்டாரம், பூங்கோதை, என்றாள், வணிகர், சென்றான், கேட்டான், நாய்கன், அன்னோன், வந்தான், தமிழர், யாரும், மறைநாய்கன், முத்தம், போகும், அத்தான், கொண்டு, மில்லை, ருந்தார், அந்தப், தன்னில், நீவிர், வேண்டும், தென்று, ரன்தான், குருபரன், போனான், பொன்முடியான், போவீர், சொல்லி, புன்னை, சென்று, அப்போது, அன்னாள், பூங்கோ, எந்நாளோ, கேட்டே, வடநாடு, புன்னையில், தைப்போல், தன்னைப், னார்கள், பிள்ளை, தார்கள், முத்து, மன்னன், பார்த்தாள், முகத்தில், அனைத்தும், சொன்னான், பெற்றோர், அன்னம், காத்தி, பொன்னன், என்றுரைத்தான், என்பவன், தென்னாட், பொன்முடியும், வாழும், வைத்தான், ஓர்பால், கர்தாம், நின்று, செந்தமிழ், கண்ணீர், பொன்மு, செல்லும், அணிமுத்து, வண்ணம், யேனும், திருமுகம், நோக்கி, நானும், தூக்கி, கேட்டு, பின்னும், வில்லை, டத்தில், கென்றான், பொய்கை, தற்கும், கின்றார், லுற்றார், செய்து, என்றார், மக்கள், கன்னத்தில், தில்லை, கின்றான், லானார், மீண்டும், லெல்லாம், உரைக்க, தைபால், எழுதிய, கண்டாள், அன்னார், பார்த்தான், பரிவுடன், விட்டால், பார்த்தி