முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.054.திருப்பாசுரம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.054.திருப்பாசுரம்

3.054.திருப்பாசுரம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
3372 | வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே |
3.054.1 |
உலக நன்மையின் பொருட்டு வேள்விகள், அர்ச்சனைகள், வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க. அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க. வேள்வி, வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும், திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க. வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக. சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக. வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க. உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக. இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக.
3373 | அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே |
3.054.2 |
பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர். பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து, நெருப்பேந்திய கையர், ஏறுகந்தேறுவர், கண்டமும் கரியவர், காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர். ஆயினும் உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர். அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும்?
3374 | வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ |
3.054.3 |
இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர். தந்தையும், தாயுமில்லாதவர். தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர். அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது.
3375 | ஆட்பா
லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார் |
3.054.4 |
இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும், பழமை வாய்ந்த புகழும் கேட்கவும், சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன. ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா. எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும், தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது. தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை.
3376 | ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே |
3.054.5 |
இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதி வடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித்துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.
3377 | ஆடும் மெனவும் மருஞ்கூற்ற முதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக் கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே |
3.054.6 |
இறைவன் திருநடனம் புரிவதும், மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும், வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா, மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா, பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின், இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம். இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம்.
3378 | கடிசேர்ந்த
போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே |
3.054.7 |
சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி, நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற, சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச, அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும், முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ?
3379 | வேத முதல்வன்
முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே |
3.054.8 |
வேதத்தை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு, குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க, பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும்.
3380 | பாராழி
வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப் பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப் போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே |
3.054.9 |
கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட, அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி, தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து, தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ?
3381 | மாலா
யவனும் மறைவல்ல நான்மு கனும் பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே |
3.054.10 |
திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான்.
3382 | அற்றன்றி
யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும் தெற்றென்று தெய்வந் தௌயார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே |
3.054.11 |
சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி, மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர். சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தௌவு பெறாதவர்கள் தௌவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல, வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில், இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும். ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு. ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும், அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும்.
3383 | நல்லார்கள்
சேர்புகலி ஞானசம் பந்தனல்ல எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல் பல்லார் களும்மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே |
3.054.12 |
சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன், மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும். இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பாசுரம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவன், கொண்டு, சிவபெருமான், வேண்டா, அருளிச், திருப்பாசுரம், பொருட்டு, எதிர்த்துச், காலால், முக்கண், முதல்வன், அவனைப், செய்தல், வையையாற்றை, என்பது, ஞானசம்பந்தர், சிவபெருமானே, விரும்பி, நோக்கில், மெனவும், சோதிக்க, காடுறை, ஞானத்தாலும், கண்டமும், துன்பம், திருமுறை, திருச்சிற்றம்பலம், தன்மையை, அறிந்து, ஆதலால், சார்ந்து, புகழும், வணங்கித், தாட்பால், இறைவனை