முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.124.திருக்குருகாவூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.124.திருக்குருகாவூர்

3.124.திருக்குருகாவூர்
பண் - அந்தாளிக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - அந்தாளிக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெள்ளிடையப்பர்.
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
4131 | சுண்ணவெண்
ணீறணி மார்பில் தோல்புனைந் தெண்ணரும் பல்கண மேத்தநின் றாடுவர் விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே |
3.124.1 |
சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம் செய்வார். அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர்.
4132 | திரைபுல்கு
கங்கை திகழ்சடை வைத்து வரைமக ளோடுட னாடுதிர் மல்கு விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே |
3.124.2 |
நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே! இடுப்பில் விளங்கும் ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர். அலைகளையுடைய கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு ஆடுகின்றீர்.
4133 | அடையலர்
தொன்னகர் மூன்றெரித் தன்ன நடைமட மங்கையொர் பாக நயந்து விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே |
3.124.3 |
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர். அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர். எருதின்மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர்.
4134 | வளங்கிளர்
கங்கை மடவர லோடு களம்பட ஆடுதிர் காடரங் காக விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே |
3.124.4 |
குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம் பெருமானே! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர்.
4135 | சுரிகுழ
னல்ல துடியிடை யோடு பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய எரிமழு வாட்படை யெந்தை பிரானே |
3.124.5 |
விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக் குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பு, மழு, வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும், உடுக்கை போன்ற இடையினையுமுடைய உமாதேவியோடு, வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில், உலகுமீள உளதாக, ஆடுகின்றீர்.
4136 | காவியங்
கண்மட வாளொடுங் காட்டிடைத் தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர் மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய ஆவினி லைந்துகொண்டாட்டுகந் தீரே |
3.124.6 |
தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே! குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ ஏந்தி நின்று ஆடுகின்றீர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 119 | 120 | 121 | 122 | 123 | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குருகாவூர்- மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வெள்ளடை, விரும்பி, என்னும், வீற்றிருந்தருளுகின்ற, திருக்குருகாவூரில், பெருமானே, ஆடுகின்றீர், கொண்டு, நிறைந்த, தண்பொழில், சோலைகள், திருக்கோயிலில், பொருந்திய, கோயிலில், ஒளிமிக்க, உமாதேவியோடு, சடையில், குளிர்ச்சி, உமாதேவியை, சிவபெருமான், திருச்சிற்றம்பலம், பைம்பொழில், அணிந்த, விரும்பும், மார்பில், திருக்குருகாவூர், பசுமையான, திருமுறை