முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.013.திருவியலூர்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.013.திருவியலூர்
1.013.திருவியலூர்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்.
தேவியார் - சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை.
130 |
குரவங்கமழ் நறுமென்குழல் பொருவெங்கரி படவென்றதன் அரவும்மலை புனலும்மிள விரவுஞ்சடை யடிகட்கிடம் |
1.013.1 |
குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும்.
131 |
ஏறார்தரு மொருவன்பல ஆறார்தரு சடையன்அனல் மாறார்புர மெரியச்சிலை வீறார்தர நின்றானிடம் |
1.013.2 |
எருதின்மேல் வருபவனும், பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டவனும், என்றும் நிலையானவனும், கங்கையாற்றைச் சடையில் நிறுத்தியவனும், அனல் போன்ற சிவந்த மேனியனும், அன்புடையவனும், பகைவராய் வந்த அசுரர்தம் முப்புரங்கள் எரியுமாறு வில்லை வளைத்தவனும், உமையம்மை பெருமிதம் கொள்ளப் பல்வகைச் சிறப்புக்களோடு நிற்பவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.
132 |
செம்மென்சடை யவைதாழ்வுற பெய்ம்மின்பலி யெனநின்றிசை உம்மென்றெழு மருவித்திரள் விம்மும்பொழில் கெழுவும்வயல் |
1.013.3 |
சிவந்த மென்மையான சடை தாழத் தாருகாவன முனிவர்களின் மனைவியர் வாழ்ந்த இல்லங்கள்தோறும் சென்று உணவிடுங்கள் என்று இசை பாடியவனாய சிவபிரானது இடம், உம் என்ற ஒலிக் குறிப்போடு அருவிகள் குடகு மலை முகடுகளிலிருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால் புகழோடு செழித்து வளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர்வளம் மிக்க வியலூராகும்.
133 |
அடைவாகிய வடியார்தொழ மடவாரிடு பலிவந்துண கடையார்தர வகிலார்கழை மிடையார்பொழில் புடைசூழ்தரு |
1.013.4 |
அடியவர்கள் தத்தம் அடைவின்படி தொழப் பிரம கபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், பள்ளர்கள் வயல்களில் நிறையவும் நிறைந்த மூங்கில்கள் முத்துக்களை வரிசையாகச் சொரியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும் நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர்வளம் மிக்க வியலூராகும்.
134 |
எண்ணார்தரு பயனாயய பண்ணார்தரு மறையாயுயர் கண்ணார்தரு முருவாகிய விண்ணோரொடு மண்ணோர்தொழும் |
1.013.5 |
தியானத்தின் பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோனும் சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோனும், உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்.
135 |
வசைவிற்கொடு வருவேடுவ திசையுற்றவர் காணச்செரு அசையப்பொரு தசையாவண விசையற்கருள் செய்தானிடம் |
1.013.6 |
வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து, தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி, அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை அருளியவனாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.
136 |
மானார்அர வுடையானிர ஊனார்தரு முயிரானுயர் தானாகிய தலைவன்னென மேனாடிய விண்ணோர்தொழும் |
1.013.7 |
தலைமையான அரவை அணிந்தவனும், தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும், பகலில் நட்டம் ஆடுபவனும், ஊனிடை உயிராய் விளங்குபவனும், உயரிய வீரம் உடையவனும், அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம், புண்ணியப் பயனால் மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர்வளம் சான்ற வியலூராகும்.
137 |
பொருவாரெனக் கெதிராரெனப் கருமால்வரை கரந்தோளுரங் சிரமாயின கதறச்செறி விரலாலடர் வித்தானிடம் |
1.013.8 |
எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு, செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.
138 |
வளம்பட்டலர் மலர்மேலயன் அளம்பட்டறி வொண்ணாவகை உளம்பட்டெழு தழற்றூணதன் விளம்பட்டருள் செய்தானிடம் |
1.013.9 |
வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய்ருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும், அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல்வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.
139 |
தடுக்காலுடன் மறைப்பாரவர் பிடக்கேயுரை செய்வாரொடு கடல்சேர்தரு விடமுண்டமு விடைசேர்தரு கொடியானிடம் |
1.013.10 |
ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத் தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு, அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின்.
140 |
விளங்கும்பிறை சடைமேலுடை தளங்கொண்டதொர் புகலித்தகு துளங்கில்தமிழ் பரவித்தொழு விளங்கும்புக ழதனோடுயர் |
1.013.11 |
விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை, இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவித் தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவியலூர் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விரிநீர்விய, வியலூராகும், நீர்வளம், சிவபிரானது, மரங்களைக், உறையும், பொருந்திய, புகழோடு, செய்தானிடம், விளங்கும், தோன்றிய, பெரியோர், நட்டம், ரிடமாம், மென்மையான, திருச்சிற்றம்பலம், திருமுறை, உமையம்மை, சிவபிரானுக்குரிய, திருவியலூர், வில்லை, சிவந்த, சென்று