சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பிரமாதா மறுப்பு: - பெத்தம்
பன்மணி பசுநற் பாத்திர மெனவு நன்னூல் பானீர் நற்கதி ரெனவு முடலையு முணர்வையு முவமித் தனையேற் றடமணி சரடொடு தாங்கூ டலவே யுணர்வுணர் வொழியி நுலகுணர் வுறினின் பாலும் பசுவுஞ் சாலுஞ் சாலக் கலம்பல வன்றிச் சலம்பல விலதெனக் காணுந ரின்றி வீணின் விளம்பினை யாடியு ணிழல்போற் கூடுதல் கூறிற் றன்னிழல் கொண்டு தற்பணஞ் சலிக்கின் மன்னிழல் கொண்டுடல் வந்தகன் றிடுமே மன்னயக் காந்த மென்னவுடல் பிரம சன்னிதி யளவிற் சலித்திடு மாயி னகண்டிதன் சன்னிதி யலதில தெவையு நடந்திட வேண்டுங் கிடந்திடப் பெறாவே காந்தத் திரும்பு காட்டுநர்ப் பொறிலயஞ் சேர்ந்திடு நீக்குஞ் செயலதற் கிலதே கனாத்துயர் கயிற்றர வெனாச்சில தொடுத்தனை கனவின் பயனு நனவின் பயனும் வினையின் பயனவை பொய்யென வேண்டா வுடன்மா றாட்டக் கடனது கருதுக வுற்ற புற்று மற்றதிற் கயிறு முடலுங் கூடச் சடமென வறிதி யறிவு கயிறென் றறியா தன்றே யச்சம தடைதல் கொச்சமை யுடைத்தே யின்னுமக் கனவி லிருளுறு கயிற்றிற் பின்னுநின் பிரமம் பிரமித் திடுமே துன்னிய வினையிற் செம்மலர்ப் பளிங்கெனத் தானாந் தகைமை யானான் மலரென வொருபய னன்றிப் பலபயன் மரீஇய திருவினை தருபய னெனநனி வேண்டி லாண்ட வித்தையு மவித்தைகொ டாக்கையு மீண்டிரு வினையு மியம்பினை பரத்தைக் கள்வரைப் பிணிக்குங் காவல ரெனமுய றொல்வினைத் தொடக்கிற் றோன்றுடற் சிறையிட் டிருவினை யூட்டு மெம்மா னம்மா னருவினை யுடற்க ணவத்தைக ளுரத்தனை யாருறு பவர்பர மகண்டித மடங்கா தோர்வில துடல்சட முறுநெறி யாதெனின் மன்னிய கரண மாறாட் டத்திற் பன்னின மென்னி னிவையோ பரமோ முதலிய தாயி னிவைபிறழ் வெய்தா திவையெனி லுனது மொழிபழு துளதே யுடற்படு பிரம முறுமெனிற் சாளரத் திடத்தகு முறுவிர னுதியளி யெறிதுய ரங்குலி தானே யருந்திடி லுடற்கட் டங்கிய வறிவு தனித்துறு மன்றே தற்பண நிழற்கட் குற்றிபாய்ந் தற்றா னற்கணிற் றுயர நணுகாத் தகைத்தெனி னின்மொழி விரோதமுங் காட்சி விரோதத் தன்மையு முறுமவை தவறில வாகா யாமுடைப் பதிவகை யாவரும் பலகலை சொல்லுத லெளிதரி தத்தொழில் புரிவெனப் புல்லிய பழமொழி புதுக்கினை யன்றே யகண்டித மெனநீ பகர்ந்தமை தனக்குப் பந்த மிதுவெனத் தந்தமை கருதில் வானி னடக்குங் காலினைப் பிடித்துப் பருவிலங் கிட்ட வொருவனீ யன்றே |
சீவன்முத்தி மறுப்பு
பந்தம தகல வுந்து விவேகம் வான்வளி யெனத்தனிற் றானே தோன்றின் முன்புள தாயின் மயங்கா திலதெனிற் பின்புள தாக திலதுள தெனின்வெளி மலரது தருமனல் மரக்கணின் றாகித் தருவது தகுமெனிற் றானே தோன்றா விறகி னுதித்த கனறகு மாயி னவித்தையி னுதித்த வித்தை யம்மரத் துதித்த விவேகம் வித்தையென் றுரைத்த வெந்தழ லனைய விவேக முதித்த திந்தன மனைய திறையிலன் றற்றே யிற்படப் பிரிப்பின் மெய்ப்படு மெவற்றையு மிதுவன் றிதுவன் றெனக்கழி காலை யதுவே தானே யாயின தென்றனை வித்தை முன்ன ரவித்தையு மவித்தைமுன் வித்தையு நில்லா வியனொளி யிருளென விருளல வொளிக்கு மொளியல விருட்கு மொருகா லத்து மொருபய னிலதா லிரண்டையு நுகரு முரண்டரு விழியென வித்தையு மவித்தையு முய்த்ததொன் றுளதே தானே தானா மானாற் பயனென் றன்னிற் றன்னைத் தானே காணிற் கண்ணிற் கண்ணைக் காணவும் படுமே தன்னல மதனைத் தானே நுகரு மென்னின் முன்னல மெய்தா திருந்ததென் கட்டி போலெனக் கதறினை யின்பம்வந் தொட்டிடும் வித்தை யுடையயா யிடினே தத்துவ மசியென வைத்தமுப் பதத்திற் கொன்றே பொருளென் றன்றே பகர்வது நீபுலி யாயினை யென்றாங் குணரி லாயினை யென்றது மாகுவ மைத்தா னோயா யினமே லாயா யென்றா லகமே பிரம மாயின தென்றாற் சகமே யறியத் தான்வே றன்றே யுண்மையிற் சலமில வுடற்சஞ் சலமுறும் வெண்மதி போல விளங்கிடு மென்றனை யசல னாகிச் சஞ்சல சலத்துச் சலன மேவின மெனமதி காண வேண்டும தன்றிக் காண்பவர் பிறரே லீண்டுன தேக மென்செய்த தியம்புக |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், தானே, நூல்கள், பிரம, வித்தை, நிராகரணம், சித்தாந்த, சாத்திரங்கள், வித்தையு, சங்கற்ப, னுதித்த, நுகரு, றன்றே, றானே, மாயி, இலக்கியங்கள், மறுப்பு, சன்னிதி, யன்றே, விவேகம்