சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சைவவாதி சங்கற்பம்
அறிவா யறியு மறிவுயிர் கேவலத் தறிவில னிருளொடும் பிரிவில ணண்ணல் கலைமுத லாக நிலவிய கருவிகள் விளக்கென வுதவுந் துளக்கறப் பொருந்தி இருவினை நுகர்வில் வருவினை செய்து மாறிப் பிறந்து வருநெடுங் காலத் திருண்மல பாகமுஞ் சத்தி நிபாதமு மருவுழி யருளுரு மன்னவ னணைந்து செல்கதி யாய்ந்து பல்பணி படுத்திக் கருவியு மலமும் பிரிவுறப் பிரியா ஞான நல்கலுந் தானது நோக்கித் கருவியு மலமும் பிரிவுறப் பிரியா ஞான நல்கலுந் தானது நோக்கித் தன்னையு மதனையுந் தன்முதற் பொருளையு மின்னவென் றறியா விருவரு முயங்கி யொன்றா யுறுபய னுவப்பு மின்றாய் நிற்கு மிதுசிவ கதியே. |
சைவவாதி சங்கற்ப நிராகரணம்
இதுகதி யாக முதலறி வுயிரேற் பொறிபுல னீங்க வறிவுயி ரன்றே யடைகாய் நூறி னிடைசேர் சிவப்பென விந்தியத் தொகையின் வந்தறி வொன்றுநின் றின்றா மென்ற லன்றே யெந்தை யறிவில னதீதச் செறிவிலென் றுரைத்த நின்மொழி விரோதமும் பின்முன் மலைவு மன்வயி னிகழா மலமிரு ளிறையொளி யான்மா விளக்கிற் றகுமருட் கலாதிக ளீனமி லிவனிடத் தெவ்வா றிசைந்தன விசைந்த தாயினு மிசையா தாயினு மசைந்திடு முத்தி சாதன மவமே சத்தி நிபாதமோ தகுமல பாகமோ வுய்த்த காரண காரிய மோதுக பாகங் காரண மாகின் மற்றது காலா வதியிற் காயா வதியின் மேலா மென்னும் வினையுறு மவதியிற் றுயரென வுயிர்க்குத் தோன்றிடு மவதியி னயமிகு மிறைவ னல்கிடு மவதியி லேதிற் கூடு மோதுக விருவினை யொத்த வெல்லையில் வைத்தன ரென்னி லருவினை தூக்க வருவினை நில்லா வொருவினை புரிகா லிருவினை யாகா வொப்புறு மாறு செப்புக தேசிக னருளுரு வென்ற பொருளினை யாயின் மாயா வொருவன் மாயா வுருவினை யேயா னேய்ந்தவ ரெம்ம னோரே பல்பணி ஞான காரண மென்னிற் றொல்பணி தொறும்பயன் றொடுப்பத னாலு மொருபணி செய்யாச் சிரபுரச் சிறுவரு மரச ராய தருணத் தலைவரு முதிர்பர சமயத் திதமுறு மரசரு ஞானம் பெற்ற நன்மையி னாலு மீனமில் பணியருட் கேதுவன் றென்றான் ஞானோற் பத்தி நிமித்தமித் தொழிலென வேனோர்க் கிறைநூ லியம்பிற் றென்னாங் கருவியு மலமும் பிரிவுற வருடரு மென்றனை கேவலத் தேது மறிவிலன் றுன்றிய சகலத் தருணிலை தோன்றா வெவ்வ வத்தையி லிறையருள் பெறுகுவஞ் செவ்விய ஞான தரிசந மாவது நால்வகை மாயைப் பால்வரு ஞானம் பண்டை ஞான மிதுவறி தாவரக் கண்ட ஞான மிதுவரக் காணி லீன ஞானிக ளென்போர் யாருமின் ஞான வேற்றுமை நாடலு மரிதே தானு ஞானமுந் தலைவனு மென்றனை ஆனபி னிவனு மிவனது ஞானமும் பாசமும் பாச ஞானமு மென்றிவை பேசுவ ரொன்றாப் பெற்றிய வாகலின் மும்மைப் பொருட்கு மும்மைத் தன்மை செம்மைத் தென்னிற் செலவுக ளெழுதுக இருவருங் கூடி யொருபய னாய்த்தென் றருளினை யிவ்வா றபேதிக ணிலையே |
சித்தாந்த சைவாசாரியர் அநுக்கிரகம்
பதிபசு பாச முதிரறி வுகளுட னாறா முன்னர்க் கூறாப் பின்ன ரிரு பொரு ணீத்துமற் றொருநால் வகையு மீனமின் ஞாதுரு ஞான ஞேயமென் றிசைய மூன்றாய்ப் பசுபதி யென்றவற் றிரண்டா யிரண்டு மொன்றினொன் றாகத் திரண்டாம் பயனெனுந் திருவரு டெளியிற் சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றா மென்றிறை யியற்கை யியம்புதல் தகுமே ஒன்றா மென்ற லன்றியு முவப்பு மின்றா மென்றா லென்பய னியம்பிக வென்றனை வினாவு மியாவும் விளங்க வென்றிகொள் கருத்தின் விரும்பினை யாயி னதிக்கரை யானெனக் கொதித்தல மந்து வெண்ணையம் பதிதிகழ் மெய்கண்ட வனரு ளுண்ணிலை யுடையோ னொருவ னுரைத்த தவப்பிர காசத் தன்மையில் விரித்த சிவப்பிர காசத் செழுந்தமி ழுண்மையை யருளுட னாய்ந்து கொள்ளத் திருவருள் வினவ றிருந்திடு மன்றே. |
சங்கற்ப நிராகரணம் முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கற்ப நிராகரணம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நிராகரணம், சங்கற்ப, நூல்கள், சித்தாந்த, மலமும், சாத்திரங்கள், காரண, கருவியு, தாயினு, மோதுக, னாலு, மென்றனை, காசத், ஞானம், மென்ற, மாயா, மவதியி, பிரிவுறப், வருவினை, கேவலத், சைவவாதி, இலக்கியங்கள், சத்தி, பல்பணி, தானது, நல்கலுந், பிரியா, நோக்கித்