முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.092.திருப்புக்கொளியூர் அவிநாசி
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.092.திருப்புக்கொளியூர் அவிநாசி
7.092.திருப்புக்கொளியூர் அவிநாசி
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அவிநாசியப்பர்.
தேவியார் - பெருங்கருணைநாயகி.
933 |
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் புற்றா டரவா புக்கொளி பற்றாக வாழ்வேன் பசுபதி |
7.092.1 |
புற்றின்கண் வாழ்கின்ற, படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவனாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன்; உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன்; உன்னை எக்காரணத்தால் மறப்பேன்!
934 |
வழிபோவார் தம்மோடும் வந்துடன் ஒழிவ தழகோசொல் லாய்அரு பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி இழியாக் குளித்த மாணிஎன் |
7.092.2 |
அருள் மிக்க, தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது? உன்னை வணங்கச் செல்பவர்களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ? நீ சொல்லாய்.
935 |
எங்கேனும் போகினும் எம்பெரு கொங்கே புகினுங் கூறைகொண் பொங்கா டரவா புக்கொளி எங்கோ னேஉனை வேண்டிக்கொள் |
7.092.3 |
மிகுதியான, ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர்; ஆகவே, உன்னிடம் நான் பிறவாமை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.
936 |
உரைப்பார் உரைஉகந் துள்கவல் அரைக்கா டரவா ஆதியும் புரைக்காடு சோலைப் புக்கொளி கரைக்கால் முதலையைப் பிள்ளை |
7.092.4 |
உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
937 |
அரங்காவ தெல்லா மாயிடு சரங்கோலை வாங்கி வரிசிலை புரங்கோட எய்தாய் புக்கொளி குரங்காடு சோலைக் கோயில்கொண் |
7.092.5 |
திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய, 'அவினாசி' என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை யணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு; அதுவன்றியும், நீ அம்பை எடுத்து, வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து, மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.
938 |
நாத்தா னும்உனைப் பாடல்அன் சோத்தென்று தேவர் தொழநின்ற பூத்தாழ் சடையாய் புக்கொளி கூத்தா உனக்குநான் ஆட்பட்ட |
7.092.6 |
'எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது' என்றும், 'உனக்கு வணக்கம்' என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ளவனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடுபவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ?
939 |
மந்தி கடுவனுக் குண்பழம் சந்திகள் தோறுஞ் சலம்புட்பம் புந்தி உறைவாய் புக்கொளி நந்தி உனைவேண்டிக் கொள்வேன் |
7.092.7 |
பெண்குரங்கு, ஆண்குரங்குக்கு, அது செல்லும் மலைப்புறங்களில், உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி, 'காலை, நண்பகல், மாலை' என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற, 'நந்தி' என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன்.
940 |
பேணா தொழிந்தேன் உன்னைஅல் காணா தொழந்தேன் காட்டுதி பூணாண் அரவா புக்கொளி காணாத கண்கள் காட்டவல் |
7.092.8 |
'அணிகலமாகவும், வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன்; அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன்; காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தையுடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.
941 |
நள்ளாறு தௌளா றரத்துறை வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் புள்ளேறு சோலைப் புக்கொளி உள்ளாடப் புக்க மாணியென் |
7.092.9 |
திருநள்ளாறு, திரு அரத்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது?
942 |
நீரேற ஏறு நிமிர்புன்சடை போரேற தேறியைப் புக்கொளி காரேறு கண்டனைத் தொண்டன்ஆ சீரேறு பாடல்கள் செப்பவல் |
7.092.10 |
நீர் தங்குதலால் பருமை பெற்ற, நீண்ட புல்லிய சடையை உடைய, தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய, திருப்புக்கொளியூரிலுள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன். ஒரு பயன்கருதிப் பாடிய, இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புக்கொளியூர் அவிநாசி - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புக்கொளி, என்னும், திருப்புக்கொளியூரில், னாசியே, அவினாசி, யூர்அவி, திருக்கோயிலில், எழுந்தருளியிருப்பவனே, ஆடுகின்ற, கொள்வேன், உடையவனே, உனக்கு, எங்கள், எங்கேனும், சோலைப், உன்னிடம், வேண்டிக், விரும்புபவனே, விரும்பாது, நம்பனே, என்றும், பாம்பைக், சிறுவன், இருப்பவனே, உன்னைப், குளத்திடை, வாழ்வேன், பாம்பை, அணிந்தவனே, எம்பெரு, திருச்சிற்றம்பலம், அவிநாசி, திருமுறை, தலைவனே, உள்ளவனே, னைக்கிறி, செய்ததே, குளித்த, திருப்புக்கொளியூர், உன்னையே, யூரிற், அந்தணச்