முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.090.கோயில்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.090.கோயில்
7.090.கோயில்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
913 |
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.1 |
மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின்கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து, தனது இச்சைவழி நடாத்தி, பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும், நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்த ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
914 |
பேராது காமத்திற் சென்றார்போ லன்றியே சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந் ஓராது தருமனார் தமர்செக்கி லிடும்போது பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.2 |
மனமே, சாங்காறும், நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி, புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய், தன்னை இடைவிடாது நினைத்து, திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை, அவரது நிலையை அறியாமல், கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
915 |
நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து திரியாத அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுஞ் தரியாது தருமனார் தமர்செக்கி லிடும்போது பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.3 |
மனமே, நரியினது வஞ்சனைபேலும் வஞ்சனையினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி, நாள்தோறும் தன்னை நினைத்து, மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று, தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
916 |
கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.4 |
மனமே, கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின், அக் கட்டினை அறுத்தெறிபவனும், நமக்கு, பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும், பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால், அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய, பெருமை யுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
917 |
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந் தருவானைத் தருமனார் தமர்செக்கி லிடும்போது பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.5 |
மனமே, யானையினது தோலைப் போர்வையாக உடைய, சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச சூடினவனும், இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து, அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், நம்மை, அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய, பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
918 |
உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.6 |
மனமே, படம் எடுத்து ஆடும் பாம்பையும், விரிந்த சடையையும் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும், பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம் பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெற வேண்டுவது யாது! இதனால், நமக்கு எதனாலும் குறைவில்லாது வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்; ஆதலின், மனமே, இனி நீ, உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது, அதனை முற்றிலும் ஒழி.
919 |
முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கும் பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் விட்டானை மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும் தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.7 |
மனமே, 'தப்பாத, முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே' என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும், அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது, பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும், தனது மலையை எடுத்த இராவணனை, அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச் சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!
920 |
கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே செற்றாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.8 |
மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி, தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு, எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர்; அவ்வகையில் நாம், நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற, விடையேறுபவனாகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
921 |
நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே தாடுடைய தருமனார் தமர்செக்கி லிடும்போது மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் |
7.090.9 |
மனமே, நம்மை, தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், முடைநாற்றத்தையுடைய சமணர்கட்கும், வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய, பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டியது யாது! அதனால், உயர்ந்தோரால் விரும்பப்டுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொன்டினைச் செய்.
922 |
பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் ஊரூரன் தருமனார் தமர்செக்கி லிடும்போது ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தை |
7.090.10 |
மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய 'உமை' என்னும் நங்கையது பாகத்தையுடையவனும், பசிய கண்களையுடைய இடபத்தை யுடையவனும், ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில், அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயில் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புலியூர்ச்சிற், பெருமானைப், பெற்றா, றம்பலத்தெம், தடுத்து, புலியூரில், பெருமானை, தருமனார், கொள்வான், விளங்குகின்ற, பெரும்பற்றப், கூற்றுவனது, லிடும்போது, தமர்செக்கி, தடுத்தாட், அதனைத், அடைந்து, விட்டோமன்றே, முயலும்போது, ஏவலர்கள், பெறவேண்டுவது, ஒறுக்க, திருச்சிற்றம்பலத்தில், அடைந்துவிட்டோமன்றே, ஆட்கொள்பவனும், நாளும், குறைவில்லை, ஆட்கொள்பவனாகிய, ஆடுகின்ற, செய்யும், உள்ளமே, யுடையவனும், நிலத்தில், ஆரூரன், விளங்கும், பெரும்பற்றப்புலியூரில், உடையவனும், நீக்குகின்றவனும், என்பர்காண், காலால், திருச்சிற்றம்பலத்தின்கண், பாவமும், அன்பராய்ச், திருச்சிற்றம், கோயில், பாம்பையும், சென்று, திருமுறை, திருச்சிற்றம்பலம், சென்றுமுன், நினைத்து, பெறவேண்&, நமக்கு, நாள்தோறும், வேண்டுவது, திருவடியில், வீழ்ந்து, பெருமை